யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 2

Published by யாத்ரீகன் under on புதன், செப்டம்பர் 27, 2006
காவல் சிங்கங்கள்

சக்கரத்திற்கு பக்கத்திலுள்ள சிலைகள் ;-)


பிரமாண்டம்


எங்கு நோக்கினும் அற்புதமடா


நுழைவாயில்


பராமரிப்பு பணிகள்

7 குதிரைகள், 24 சக்கரங்கள் - 7 வார நாட்கள், 24 மணி நேரம்

கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 1

Published by யாத்ரீகன் under on செவ்வாய், செப்டம்பர் 26, 2006
கோனார்க்
மனிதனின் மொழியை கற்களின் மொழி கடந்துவிட்ட இடம் - இரவீந்திரநாத் தாகூர்



கங்கையரசர் நரசிம்ம தேவா - கோனார்க் கோவிலை கட்டக்காரணமாயிருந்தவர்


சூரியக்கடவுள் சிலையின் இடுப்பு ஆபரண வேலைப்பாடு - எவ்வளவு நுணுக்கமான வேலை


கோனார்க் கோவில் - தேரைப்போல் தோற்றம் அளிக்கின்றதா ?


புகழ்பெற்ற கோனார்க் கோவில் சக்கரம் - வெறும் சக்கரம் மட்டுமல்ல சூரியக் கடிகாரமும் கூட


சிங்கம் பலத்தையும், யானை செல்வத்தையும் குறிக்க இரண்டுக்கும் அடியில் உள்ள மனிதனை அழிப்பதை குறிக்கும் சிற்பம்


கோனார்க் சக்கரம்


நடன மண்டபத்தில் ஒரு சிற்பம் - எவ்வளவு பொறுமையும் கற்பனைத்திறனும் இருந்திருக்கும்

அடுத்த பயணம் - துள்ளிக்குதிக்குது மனசு

Published by யாத்ரீகன் under on வியாழன், செப்டம்பர் 14, 2006
முக்கியமான நிகழ்வு ஒன்றிருந்தாலும் மனதில் துள்ளிக்கொண்டு முதலில் வருவது, இப்போது பார்த்து வந்திருக்கும் படம். அருமையான கதைக்களம், நுட்பமான் உணர்வுகளை அருமையாய் கையாண்டிருக்கக்கூடிய வாய்ப்பு, ஆனால் எதுவும் இல்லை.

அருமையான பாடல், அட்டகாசமான சூர்யா, வழக்கம்போல் மிக மிக அழகாய் பூமிகா, இருந்தும் சொதப்பல்தான்.

சில படங்கள் அவை கிளறிவிடும் நினைவுகளுக்காகவே மனதில் தங்கிவிடும், அந்த வகையில் ஏதேதோ நினைவுகள் மனம் நிரம்பியிருக்க, யாருக்குமெ பிடிக்காத ஒரு படம் மனதில் தங்கிவிட்டது.

Project கிடைக்கும் வரை என்னை என்ன செய்வதென்ற குழப்பம், என்ன செய்யலாமென்று யோசித்து முடிப்பதற்குள் புவனேஸ்வர் கிளம்புவதற்கான வேலைகள் முடிந்து விட்டிருந்தன.

நாளை காலை கிளம்பி 9ஆம் தேதிதான் திரும்புகின்றேன்.

கல்கத்தாவிற்கு ஒரு முறை எட்டிப்பார்த்து விட்டு வந்துவிடவேண்டும் என்று துள்ளிக்குதிக்கின்றது மனசு.

மறக்க நினைக்கும் நினைவுகள் தந்தபோதிலும், மறக்க முடியாத ஊர் அது. யரைப்போய் பார்பேன் அங்கே, ஒருவரும் இல்லை ஆனால் ஒவ்வொரு வீதிகளும், ஆட்டோக்களும் இனிமையான பயணங்கள் தான்.

கோனார்க்கில் மனம் கரைய உட்கார்ந்து வர வேண்டுமென்கின்றடு இன்னொரு ஆசை.

வித்தியாசமான அனுபவங்களை கொண்ட பயணமாகத்தான் போகின்றது.

விரைவில் சந்திப்போம்..