யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

கொல்கத்தா துர்கா பூஜா - இறுதி பகுதி

Published by யாத்ரீகன் under on திங்கள், அக்டோபர் 09, 2006
கல்கத்தாவின் மற்றொரு புகழ் பெற்ற இடமான சோனாகாச்சிக்கு இன்னொரு முகமும் உண்டு. துர்கா சிலையை செய்யத்தொடங்குவதற்கு முன் இங்கிருக்கும் பெண்களின் காலடி மண்கொண்டே தொடங்குவார்களாம். (ஹிந்தி தேவதாஸ் படத்தில் ஐஸ்வர்யா மாதுரியின் வீட்டுக்கு போவது நியாபகம் உள்ளதா ?) , பூஜை ஒரு பக்கம் படு கோலாகலமாக நடந்து கொண்டிருக்க, அதே தருணத்தில் போலிஸ் கொண்டு சோனாகாச்சியில் உள்ள கூட்டம் ஒழுங்குபடுத்தி அனுப்பப்படுகின்றது. அந்த பெண்களை பார்க்கையில் இத்தனை பூஜை இத்தனை செலவு எதற்கு வீணே என்றுதான் மனது படபடத்துக்கொண்டிருந்தது.



கொல்கத்தாவில் நுழைந்ததும் முதல்காட்சி, துர்கா பூஜை துவங்கும் போது கங்கை நீர் கொண்டு வருவது.


மா துர்கா தலைப்புச்செய்திகளில்
பந்தல் அமைப்பு வேலை தொடங்குகிறது
மர சமையல் பொருள்களினால் ஆன குதிரையும், சாரதியும். அருகிலுள்ள மக்களின் உயரத்தை ஒப்பீடு செய்ய பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
முகம்மது அலி பார்க்கில் உள்ள அலங்கார விளக்கு
ரோட்டோர சூதாட்டமும் கொண்ட்டாட்டத்தின் ஒரு பகுதிதான் ;-)
தோஹல் () என்ற மங்கல வாத்தியம் இந்த விழாவில் முக்கிய பங்கு, அதில் வித்தை காமிக்கும் ஒரு குழு (சால்ட் லேக்கில்) , ஒருவர் தோளில் அமர்ந்த ஒருவர், கிட்டத்திட ஐந்து தோஹல்களை கை,கால், பற்களில் பிடித்துக்கொண்டி இசைக்கும் தருணம். நம்மூர் தப்பை போலவே, நாடி நரம்பை சுண்டி இழுக்கும் இசை.

கொல்கத்தா துர்கா பூஜா - 2

Published by யாத்ரீகன் under on திங்கள், அக்டோபர் 09, 2006
மிக மிக வித்தியாசமான, பிரமாண்டமான பண்டல், காட்டுக்குள்ளிருக்கும் குகை ஒன்றில் குடையப்பட்ட பயங்கரமான காளி கோவில் எனும் தீம். இரத்தமெங்கும் தெளித்திருப்பதை போல் ஒரு உணர்வை உருவாக்கி, மண்டை ஓடுகளும், மிக நீண்ட பாறையில் குடைந்த குகைப்பாதையும், தொங்கும் வேர்களும், இறுதியில் பயங்கரமான காளி சிலையும் என உள்ளத்தை கவர மட்டுமின்றி, உள்ளத்தை கொஞ்சம் உறைய வைத்த பண்டல்.

முழுவதுமாய் சட்டை பொத்தான்களால் ஆன பண்டல், அந்த வித்தியாசத்தை தவிர, இந்த கலை நுணுக்கம் கொண்ட சிலையும் இந்த பண்டலின் கவன ஈர்ப்பை பெற்றது.


துர்க்காவின் உடையில் உள்ள வேலைப்பாடுகள்.



முகம்மது அலி பார்க்கில் உள்ள பந்தல் (கொல்கத்தாவில் மிக மிக புகழ்பெற்ற பண்டல்), ஒருமைப்பாட்டை உணர்த்தும் தீம்கள் எப்போதும் இங்கு உண்டு.



இங்கு வித்தியாசமான தீம் ஏதுமில்லாவிடினும், சிலைகளின் தோற்றம் மிக மிக அழகாய் :-)



பூஜை நடந்து கொண்டிருக்கும் ஒரு சின்ன பண்டல்


மணிக்டாலாவில் உள்ள பிரமாண்டமான மரவேலைப்பாடுகள் கொண்ட பண்டல், முழுவதுமாய் மர கரண்டிகள், பூரிக்கட்டைகள் என மர சமையல் சாமான்கள் கொண்டு நான்கு குதிர்கைகள் இழுக்கும் சாரதி கொண்ட தேர் வடிவில் செய்யப்பட்டது. தேரின் உயரம் 20 அடிக்கும் மேல், (சாரதி மற்றும் குதிரைகள் உயரத்தை கணக்கில் கொள்க).


மிக மிக வண்ணமயமாய் செய்யப்பட்ட சிலை, இதில் மிகவும் கவர்ந்தது சிலையின் கூந்தல். மிக மிக மிக நுணுக்கமாக செய்யப்பட்ட வேலை அது, நிஜமாகவே சவுரி கொண்டு செய்து விட்டார்களா என திகைக்க வைத்தது.

கொல்கத்தா துர்கா பூஜா - 1

Published by யாத்ரீகன் under on வெள்ளி, அக்டோபர் 06, 2006
துர்காபூஜையின் போது பல இடங்களின் பன்டல்கள் என்கின்ற பெயரில் பந்தல்கள் அமைத்து அதில் அசுரனை வதைக்கும் துர்கையின் சிலையோடு, இலக்குமி, சரஸ்வதி, பிள்ளையார் மற்றும் கார்த்திகேயன் (நம்மூர் முருகனைத்தான் இப்படி கூப்பிடுறாங்க, வேலுக்கு பதில் வில் ஆயுதம்.. வேல் தமிழர் ஆயுதமாச்சே ;-) சிலைகளை அமைத்து வழிபடுவார்கள்.

ஒவ்வொரு பந்தல்களிலும் சிலைகள் மட்டுமின்றி, பந்தல்களின் அமைப்பும் அலங்காரமும் ஒரு குறிப்பிட்ட தீம் நோக்கி இருக்கும்.

இரவு முழுவதும் பெங்காலிகள் தங்கள் குடும்பத்தோடு ஒவ்வொரு பந்தல் பந்தலாக சென்று வழிபடுவது மட்டுமின்றி, போகும் வழியெங்கும் குதூகலத்துடன் விளையாடுவதும், விதவிதமாய் சாப்பிட்டு மகிழ்வதும் என, ஒரு ஆன்மீக திருவிழாவாய் தெரியவில்லை :-)

துர்கா பூஜையின் போதுதான் அவர்கள் அனைவரும் குளித்து புதுத்துணி அணிவார்கள் என்றொரு வதந்தியும் உண்டு ;-)

இதோ இப்பொழுதே இடிந்து விழப்போகும் என்ற நிலையில் இருக்கும் வீடு கூட வித விதமாய் வண்ண விளக்குகளும், பந்தல்களும் கொண்டிருப்பதை காணுகையில் இவர்களுக்கு இருப்பது கடவுள் நம்பிக்கையா இல்லை.... என்று சந்தேகம் வருகின்றது..

எது எப்படியோ, கொல்கத்தாவே விழாக்கோலம் பூணும் நேரமிது, மக்கள் கூட்டத்தையும், உற்சாகமான ஒரு சூழ்நிலையையும் விரும்புவர்கள் கட்டாயம் வரவேண்டிய இடமும் நேரமும் இது.


பந்தல்கள் அனைதையும் கண்டு முதல் மூன்று இடங்கள் அறிவித்து பரிசளிப்பது ஒரு வழக்கம், இதில் முதல் பரிசு பெறுவதென்பது ஒரு பெரும் பெருமை.


மேலே இருப்பது "டம் டம்" என்ற இடத்தில் உள்ள பந்தல் , முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்தது, உலோகத்தால் செய்ததைப்போல் இருப்பினும் அது வெறும் பெயின்ட் பினிசிங் டச் தான். சிலையில் உள்ள நுணுக்கத்தை பாருங்கள், சிலையின் விரல்கள், புடவையின் வேலைப்பாடுகள், கண்கள் என எல்லாவற்றையும் கவனம் எடுத்து செய்திருப்பதை.


இங்கே கற்பனைத்திறனை அசுரனை கொல்லுவதை சித்தரித்த விதத்தில் காணலாம். பார்த்ததிலேயே கொடூரமான சிலைகளில் இரண்டாவது. தேவியின் கண்களின் உள்ள கோபம், அசுரனின் கண்களில் உள்ள உணர்ச்சிகள், எவ்வளவு தத்ரூபம்.
இந்த தேவி சிலையை பாருங்கள், டிபிக்கல் பெங்காலி பெண்ணை போல கண்கள் :-) (இந்த பந்தலை முழுவதுமாய் பஞ்சு பொம்மைகள் வைத்து செய்திருந்தார்கள்)
ஏர்போர்ட் செல்லும் வழியில் , ஸ்ரீபூமி எனும் இடத்தில் முழுவதுமாய் மூங்கில்களால் இழைத்த பந்தலையும், சிலையையும் கண்டோம். மூங்கிலாயினும், சிலையின் சேலை மடிப்புகள், அதில் உள்ள அலங்காரங்கள் என அட்டகாசம். (கிட்டதிட்ட 2 மணிநேரம் ஆனது இந்த பந்தலை பார்ப்பதற்கான வரிசையை கடப்பதற்கு)

இந்த பந்தல் மிகவும் சுவாரசியமானதாய் இருந்தது, கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டதை போல பந்தல்,உள்ளே சிலைகள் மிகவும் பாந்தமாய், பெங்காலிப்பெண்களின் சாயலை கொண்டு :-)
எந்த ஒரு பரிசோதனை முயற்சியும் இல்லாமல், பழங்காலத்தில் எப்படி பெங்காலி துர்கா சிலைகள் இருந்தனவோ அதுமாதிரியாய் ஒரு சிலை. மிகவும் ஒரிஜினலாய் :-)



பூஜையின் போது எல்லா விளம்பரங்களிலும் காணப்படும் ஒரு அடையாளம், வெறும் கோடுகளால் அவுட்லைன் மட்டும் இடப்படும் "இரு பெரும் கண்கள், ஒரு மூக்கு வளையம்".