யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

முணுமுணுப்பு

Published by யாத்ரீகன் under on வெள்ளி, அக்டோபர் 19, 2007
கண்ணாடிப்பெட்டகத்தினுள் நான் வைரம் ஒன்றைப்பார்த்தேன்
வைரம் ஒன்றைப்பார்த்ததும் அவள் கண்கள் நியாபகம் வந்ததடா
வைரம் வாங்கப்பணமில்லை
இருந்தும் எனக்குப்பயமில்லை
கடைக்காரனை கொன்றுவிட்டேன்
கையில் எடுத்து வந்து விட்டேன்.....

PiT - உணவுப்பொருட்கள் - அக்டோபர் மாத போட்டி முடிவுகளுக்கு முன்னால்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், அக்டோபர் 16, 2007
களப்பணியாக, ஓட்டல் ஓட்டலாக அலைந்து திரிந்தவர்களுக்கும், அவரவர் தங்கமணியை தொந்தரவு செய்து பாராட்டுக்களுக்கு (?) நடுவே க்ளிக்கியவர்களுக்கும், மெகா சீரியலுக்கு மட்டுமின்றி புகைப்படபோட்டிக்கும் சேர்த்து கொஞ்ச நேரம் பட்டனி போட்டு போட்டி போட்ட அம்மணிகளுக்கும்,நாம் சமைத்ததை நாமே சாப்பிடாவிட்டால் & நாமே புகைப்படமெடுக்காவிட்டால் வேறு யார் செய்வார் என்று மனம்தளராத பேச்சிலர் உடன்பிறப்புகளுக்கும் நன்றி, நன்றி, நன்றி !!!!!


PiT குழுவினர் நடத்தும் புகைப்பட போட்டி அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது என்று சொல்லலாம். இந்த வலைத்தளத்தில் வரும் பாடங்களை படிப்பவர்களுக்கு, களத்தில் இறங்கி படித்ததை பயன்படுத்திப்பார்க்க வாய்ப்பாய் மட்டுமின்றி, மேலும் முயற்சிகள் செய்து பார்க்க படிப்பவர்களை ஊக்கமூட்டுவதாகவே செயல்படுகின்றது.


இதுவரை வந்த புகைப்பட தலைப்புகளும் சரி, புகைப்படங்களும் சரி, தங்களிடையே இருக்கும் தொகுப்பிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து அனுப்புவதையே அதிகமாக கொண்டிருந்தது (என்னையும் சேர்த்துதான் ;-) , இதில், படித்ததை பயன்படுத்துதல் என்ற பேச்சுக்கே இடமின்றி போனது.


இம்முறை சர்வேசன்/ஆனந்த்/சிவிர்/நாதன் அவர்களின் தேர்வுகளில் "உணவு" என்ற தினமும் நாம் காணும் காட்சி தேர்வானது. அட உணவுதானே என்றில்லாமல் அதிலும் வித்தியாசங்கள் காட்ட தேவையானதை சிவிர்-இன் பதிவு சரியான நேரத்தில் அமைந்தது, பங்கேற்பாளர்களுக்கு போட்டியின் நோக்கத்தை புரியச்செய்தது.


பழைய புகைப்படங்களை எடுத்து போடும்போதே அசத்தும் நம் மக்கள், இம்முறை கற்றதை பயன்படுத்தி அசத்தியுள்ளார்கள். சென்ற முறை போன்று அதிக அளவில் போட்டியாளர்கள் இல்லாதபோதும் படங்களின் தரம் நடுவர்களின் தேர்வை சென்ற முறை போலவே கடினமாக்கியிருந்தது.


போட்டியாளராய் மட்டுமின்றி நடுவராக பணி புரிதலும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தது. முக்கியமாய் முதல் பத்து படங்கள் தேர்வு செய்தபோது கவனிக்கவேண்டிய விஷயங்கள், எதில் எல்லாம் சாதரண விஷயங்கள் என்று நினைத்திருந்தோமோ, அதில் எல்லாமும் கவனம் வேண்டும் என்பது ஒரு முக்கியமான பாடம்.


போட்டிக்கான இறுதிப்படங்கள் தேர்வு செய்யும் நிலையில் இருப்பதால், கொஞ்ம் சுவாரசியத்தை உண்டாக்க, இந்த டாப் ட்வெல்வ் + ஒன் புகைப்படங்கள். (அட இல்லிங்க, இதை தேர்வு செய்யும் போது கோர்ட் சூட் போட்டு நாற்காலியெல்லாம்... அந்த கூத்தெல்லாம் இல்லீங்க..) இதில் இருக்கும் வரிசை நிலை எதையும் குறிப்பதில்லை.

ஒவ்வொரு படங்களுக்கும் கமெண்டுகளை சேர்த்துக்கொண்டிருக்கின்றோம், சிறிது தாமதமானதுக்கு மன்னிக்கவும் மக்களே !!!!


விரைவில் முடிவுகளை !!! அதுவரை கெஸ் செய்வது ஒரு போட்டியாக நடக்கட்டுமே... சர்வேசன் ஒரு சர்வே ? ;-)

முதல் சுற்றுக்கு தேர்வானவை













ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 4

Published by யாத்ரீகன் under , , on திங்கள், அக்டோபர் 01, 2007

















ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 3

Published by யாத்ரீகன் under , , on திங்கள், அக்டோபர் 01, 2007
அஜந்தா, பவுத்த குகைகளில் புத்தர் மற்றும் புத்தரின் வாழ்க்கைச்சம்பவங்கள்.

1. புத்தரின் மரணப்படுக்கை (?) என்று சொல்வது தவறு, புத்தர் இறுதி நிர்வாண நிலை அடைந்த தருணம்.



2. புத்தரின் பாதத்தின் வழியே அவரின் ஆன்மா மேலுலகத்திற்கு செல்வதைப்போன்று செதுக்கப்பட்டிருக்கும் சிற்பம், மேலே உள்ள சிற்பத்தின் தொடர்ச்சி இது, படத்தில் தோன்றுவதை விட மிகவும் நீளமான சிலை. இன்னும் கூர்ந்து நோக்கினால், மேலுலகத்தில் உள்ளவர்கள் புத்தரின் வருகையால் மகிழ்ந்திருப்பதை மேலுள்ள மற்ற சிலைகளின் முக உணர்ச்சிகளில் காணலாம்.



3. அதே தருணத்தில், பூலோகத்தில் உள்ள மக்கள், புத்தரின் பிரிவால் அழுவதைக்காணலாம்.


people weaping for budhas death, originally uploaded by யாத்திரீகன்.

4. போதிக்கும் நிலையில் உள்ள புத்தரின் அனைத்து சிலைகளிலும் காணப்பட்ட முத்திரை. விரல்களும் , முத்திரையும் சிறப்பாய் செதுக்கப்பட்டிருப்பதை காணலாம்.


Budha with Teaching Mudhra, originally uploaded by யாத்திரீகன்.


5. புத்தவிகாரங்களினுள் காணப்படும் புத்தரின் சிலை.அங்கிருக்கும் ஓவியங்களுக்கு பாதிப்பு வராதவகையில் சிறப்பான விதத்தில் ஒளியமைப்பு செயப்பட்டிருந்தது.




6. விஸ்வகர்மா குகை எனக்கூறப்பட்ட மிகவும் அழகான ஒரு குகையின் வாயிலில் இருந்த புத்தர் சிலை ஒன்று. பாதத்தினருகே புத்தர் அணிந்திருக்கும் ஆடையை செதுக்கியிருப்பதை பாருங்கள்.




7. சாவில்லாத வீட்டிலிருந்து ஒரு தாயை கடுகைக்கொண்டு வரச்சொல்லி, தவிர்க்க முடியாத வாழ்வியல் அங்கம் சாவு என்று உலகுக்கு உணர்த்தும் ஒரு காட்சி.




8. மஹாயனா எனப்படும் காலகட்டங்களில், புத்தர் என்பவர் உருவ வழிபாடில்லாமல், தூண்களாய், ஸ்தூபங்களாயும் உருவகப்படுத்தப்பட்டிருந்தார்.




9. ஹனாயனா எனப்படும் அதற்கு அடுத்து வந்த காலகட்டங்களில், புத்தரின் உருவ வழிபாடு தோன்றியது. இந்த இருவகை விஹாரங்களே, அஜந்தா குகைகள் என்பவை, ஒரு மூச்சில் செதுக்கப்பட்டவையல்ல, பல காலகட்டங்களில் செதுக்கப்படவை என்பதற்கான ஆதாரம்.






ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 2

Published by யாத்ரீகன் under , , on சனி, செப்டம்பர் 29, 2007
இவை இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் (இலை, பழங்கள் மற்றும் மூலிகை சாறுகளால் பிழியப்பட்டு எடுத்த இயற்கை வண்ணங்கள்). ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆனாலும், இயற்கை சீற்றழிவுகளைத்தாண்டி, பல மனிதர்களின் பொறுப்பற்ற செயல்களையும் தாண்டி இவை இருப்பது மிகவும் பிரமிக்கத்தக்கது.
1. அங்கிருந்த குகை ஒன்றின் மேற்பரப்பில் இருந்த ஒரு சிறு தேவதையின் ஓவியம் ஒன்று. என்னமாய் கொழுக்மொழுகென்று இருக்கின்றது.

2. மேலிருந்த வண்ணப்பூக்களின் ஓவியம் ஒன்று, இதிலிருந்த நீல நிறம் இன்னும் வரையப்பட்டபோதிருந்த வனப்பிருந்ததைபோன்றிருந்தது.

3. மற்றுமொரு மேற்கூரை ஓவியம். இந்த ஓவியம் சிறிது சிதைந்திருந்தாலும், அதன் அழகும்,நேர்த்தியும் சிறிதும் குறைவின்றி இருந்தது.

ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 1

Published by யாத்ரீகன் under , , on சனி, செப்டம்பர் 29, 2007
மேற்கு, இந்தியாவில் இந்த திசையில் இன்னும் எந்த இடமும் பார்த்திராத குறை வெகு நாளாக உறுத்திக்கொண்டிருந்தது. இம்முறை வேறொரு பயணம் திட்டமிட்டபடி நடக்காததால், மிக சந்தோஷமாய் கிளம்பிவிட்டோம் அஜந்தா-எல்லோரா-பூனே என்று; சிறிது நாட்கள் சுற்றிக்கொண்டிருந்தோம்.

அஜந்தா - சிறு வயதில் சரித்திரப்பாட மனனம் மட்டுமே செய்திருந்த இடம். பின்பு என்ன வகையான இடம் என்று தெரிய வந்தபோது வாழ்நாளில் என்றாவது ஒருநாள் சென்று வரவேண்டும் என்றானது.

அவுரங்காபாத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ளது அஜந்தா குகைகள். இது பல குகைகளை ஒரே இடத்தில் செதுக்கியிருக்கும் இடம்.

குகை என்று ஒருவித எண்ணத்தில் சென்ற எங்களுக்கு இதன் அமைப்பு மிகவும் பிரமிக்கதக்கதாய் இருந்தது. அடர்ந்த கானகத்தினுள், பள்ளத்தாக்கினுள், கீழே ஓடும் ஆறு, அருகே பெரிதாய் இருக்கும் அருவி என.. எப்படி இதை செய்து முடித்திருப்பார்கள் என்று.

இதை முதலில் யோசித்ததிலிருந்து, இறுதியில் செய்து முடித்தவரை எவ்வளவு உழைப்பு, கற்பனை இருந்திருக்கும் என்று பிரமித்தபடியே மயங்கியிருந்தோம். பல கால கட்டங்களில் செதுக்கப்பட்ட குகைள் இவை.

அஜந்தாவில் பெரும்பாலும் பவுத்த குகைகள், இங்கிருக்கும் குகைகள் இதிலிருக்கும் பவுத்த ஓவியங்கள், புத்த விகாரக குகைகள் உலகப்புகழ் பெற்றவை.

இங்கே மிகவும் குறிப்பிடத்தக்கவை, இங்கிருக்கும் ஓவியங்கள். இவை இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் (இலை, பழங்கள் மற்றும் மூலிகை சாறுகளால் பிழியப்பட்டு எடுத்த இயற்கை வண்ணங்கள்). ஆயிரம் வருடங்க்களுக்கு மேல் ஆனாலும், இயற்கை சீற்றழிவுகளைத்தாண்டி, பல மனிதர்களின் பொறுப்பற்ற செயல்களையும் தாண்டி இவை இருப்பது மிகவும் பிரமிக்கத்தக்கது.
1. அங்கிருக்கும் குதிரை லாட 'யு' வடிவிலான பள்ளத்தாகின் சுவர்களில் தான் அஜந்தா குகைகள் இருக்கின்றன. கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆறு தெரிகின்றதா ? எப்படி செதுக்கியிருப்பார்கள் இந்த குகைகளை ???


2. அஜந்தாவின் கடைசி குகைகளில் இருந்து அழகிய ஜன்னல்கள் வேலைப்பாட்டுடன்.



3. அங்கிருக்கும் தூண்களில் உள்ள ஒரு சிறு வேலைப்பாடு. எத்தனை நுணுக்கமான கலைநயம், காலத்தை தாண்டி நிற்கும் கலை.




4. மற்றுமொரு அழகான தூண்.



5. இங்கிருக்கும் தூண்களைப்பார்த்தால் மலையில் செதுக்கியதைப்போலா இருக்கின்றது ? எவ்வளவு நேர்த்தியாய் செதுக்கப்பட்டு, வரிசையாய் கொஞ்சம் கூட அங்கிங்கு விலகாதபடி ஒரே நேர்க்கோட்டில். இத்தனை ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் அப்படியே இருக்கின்றது ஆச்சர்யம்.


ஓஓஓஓஓஓ

Published by யாத்ரீகன் under , on சனி, செப்டம்பர் 29, 2007
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்த்னை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
ஓஓஓஓஓஓ, கரு வாசல் தொட்டு வந்த நாள் தொட்டு
ஓஓஓஓஓஓ, ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓஓஓஓஓஓ, கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓஓஓஓஓஓ, கண் மூடிக்கொண்டால்
ஓஓஓஓஓஓ …

போர்களத்தில் பிறந்துவிட்டோம், வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம், முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில், தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து,கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்

ஓஓஓஓஓஓ, அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓஓஓஓஓஓ, இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓஓஓஓஓஓ, மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
ஓஓஓஓஓஓ, அந்த கடவுளை கண்டால்
ஓஓஓஓஓஓ …

அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை, படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார், அட கெட்டவன் யார், கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே,பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை
நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
ஓஓஓஓஓஓ, பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,

ஓஓஓஓஓஓ, மறு பிறவி வேண்டுமா
ஓஓஓஓஓஓ …

வண்ணங்கள் - புகைப்படபோட்டிக்கு

Published by யாத்ரீகன் under , , on திங்கள், செப்டம்பர் 10, 2007





ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள், originally uploaded by யாத்திரீகன்.

கல்கியின் பார்த்திபன் கனவில் பார்த்திபன் அரண்மனையின் சுரங்க அறையில் உள்ள சித்திரங்களைப்பார்த்து பிரமித்து நிற்பதை போன்று உணர்ந்தேன்




கொஞ்சம் எக்ஸ்ட்ரா கலர்ஸ் கீழே - போட்டிக்கு இல்லை




கனவே கலையாதே

Published by யாத்ரீகன் under on வியாழன், ஆகஸ்ட் 30, 2007

கூட்டிலிருக்கும் பறக்கப்போகும் குஞ்சுகளின் கதகதப்புக்காக

பறக்கத்தயாராய் இருப்பதின் இறகுகளை பிய்த்து எரிக்கும்

நிகழ்காலத்தை குறை சொல்லிப்பயனில்லை

இதை விட பலம் வாய்ந்த சிறகுகளை வளர்த்துக்கொள்ள மற்றுமொரு வாய்ப்பு

ஆயினும் குருதி கசியும் வலியினை மறக்க இயலவில்லை


இதமான நீலம் எங்கும் பரவியிருந்த தருணம்

Published by யாத்ரீகன் under , , , on ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2007

இதமான நீலம் எங்கும் பரவியிருந்த தருணம்

- இடம்: மெரீனா , மாலை 5 மணி




எங்களிடையே பெண்கள் - 1

Published by யாத்ரீகன் under , on திங்கள், ஜூலை 30, 2007
பெண்கள்

கடவுள், அரசியல் போன்றவற்றை விட அதிகம் விவாதிக்கப்படும் கருப்பொருள். எப்பொழுதிலிருந்து விவாதிக்க தொடங்கினோம் என்று சரியாக நினைவில்லை. அது என் ஆள், இது உன் ஆள் என ஆறாப்புலயே, ஆள் என்றால் என்னவென்றெல்லாம் தெரியாமல் தூரத்திலிருந்தே காமிக்க பயன் படும் பொருள்களாகத்தான் தொடங்கியது. எட்டாப்புலிருது எதெடுத்தாலும் சண்டை, சண்டை போடுவது சரிதானெறெல்லாமல் வீம்புக்கென்றே திரிந்த காலங்களில் இனிமையான நட்பென்பதை தவற விட்டுக்கொண்டிருந்தோம்.

கல்லூரியில், வீம்பே அடையாளமானது, தனித்திருக்க காரணமானது ஆனால் அதுவே பல உயிர் தோழிகளை அடையாளம் காட்ட உதவிக்கொண்டிருந்தது. கல்லூரியில் அதிகம் டாப் டென் அலசுவதற்கும், கூட்டை கலைப்பதுமென தான் பெண்கள் எங்களுக்கு அறிமுகமாகிக்கொண்டிருந்தனர். மிகவும் ஆர்வமுள்ள அரட்டைகள் அப்பொழுது எங்களுக்குள் தொடங்கியதில்லை.

தினந்தோறும் புதிய மனிதர்களும், மொழிகளும், நினைத்தேபார்த்திராத அனுபவங்களும் எங்களை கொஞ்ம் கொஞ்சமாய் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்த நேரம். தினசரி வாழ்வே, 6 பெண்களின் நடுவேதான் என்று ஆனபோது, கண்கள் மட்டுமல்ல மெல்ல மெல்ல மனசும் விழித்துக்கொண்டு தன் கண்ணையும் வைத்துக்கொண்டு பார்க்க ஆரம்பித்தது. ஒவ்வொருத்தரும் ஒரு இரகம் என்பதை மூளை முன்பே உணர்ந்திருந்தும், மனமும் அதை புரிந்து கொள்ளத்தொடங்கியது. ஒவ்வொருவருக்குள்ளும் கூட ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு சூழ்நிலையும் வெவ்வேறு முகங்களை அடையாளம் காட்டத்தொடங்கியது. நல்ல தோழி என தொடங்கி, விரோதி என்ற நிலை தொடர்ந்து, யாரையும் எந்த ஒரு வட்டத்துக்குளேயும் அடைக்க, நம்மையும் அவர்களுடனான நம் உறவையையும்தான் சேர்த்து உரைகல்லில் உரசிப்பார்க்க வேண்டியதின் நிதர்சனம் புரிந்து கொண்டிருந்தது, அதில்லாமல் தனிப்பட்ட விமர்சனங்கள் எவ்வளவு சீக்கிரம் அர்த்தமற்றவையாக் போய்க்கொண்டிருந்தது.

புதிய நட்புகளின் சூழ்நிலையில், முன்பு உணர்ந்திருக்காத அருகிலில்லாத நண்பர்களின் நட்பும், தான் எவ்வளவு விலைமதிப்பில்லாதது என்று மெளனமாய் ஒரு புன்சிரிப்புடன் தூரத்தில் அருகிலேயே இருந்தது.

அனைவருக்குமிடையில் புயல்கள் ஓய்ந்து புரிதல்கள் மெல்ல ஆரம்பிக்கும் நேரம், காலம் தன் இருப்பை பதிவு செய்ய மாற்றங்கள் தொடங்கின, இடங்கள் பெயர ஆரம்பித்த தருணம் அது. ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும், அவர்களைப்பற்றிய பார்வைகளை இன்னும் கூராக்க காலம் தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தது.

வட்டங்கள் பெரியதாய் வரையப்பட, வரையப்பட... நட்பின் தொடர்புக்கு அருகாமையின் அவசியம் கொஞ்சமாய் ஒவ்வொருத்தருக்கும் புரிந்துகொண்டிருந்தது.

இதுவரை பார்த்ததே பெரிய மாற்றங்கள் என்று ஆசுவாசப்படுதிக்கொண்டிருந்த மனத்திற்கு, தொடுவானத்திற்கும் அப்பாலுல்ல கடலின் ஆழத்தையும், ஆகாசத்தின் வர்ணத்தையும் காலம் கோடிட்டுக்காட்டத்தொடங்கியிருந்தது. அங்கிருக்கும் ஆழமும், வர்ணமும்தான் பயணத்தை சுவாரசியமாக்க போகின்றன என புரியப் புரிய, கொஞ்சம் கொஞ்சமாய் மிரட்சி கலைந்து புன்னகைக்கத்தொடங்கினோம்.

அடுத்த கட்டமாய் ஒவ்வொருத்தர் வாழ்விலும் முக்கியத்துவங்கள் மாறத்தொடங்கின, புதிய நபர்கள் எங்களிடையே என்பதல்ல, புதிய நபர்கள் மத்தியில்தான் நாங்கள் என வாழ்வின் நிதர்சனமும் எங்களுகு வழிகாட்டதொடங்கியது.

இப்போது பெரும் கும்பல்களில் மட்டுமே அவர்களை காண முடிந்தது, நெருக்கமான கோஷ்டிகளில் ஆண்கள் மட்டுமே அதிகமாயிருக்கின்றனர்.

இப்போது எங்கள் விவாதத்தலைப்புகளை எடுத்துக்கொண்டு பார்த்தால், அதிகம் விவாதிக்கபட்ட தலைப்பும் சரி, அதிகம் பார்த்திராத கோணங்களிலெல்லாம் சுற்றியெங்கும் நிறைந்திருப்பதாய் உணர்கின்றோம். காற்றைப்போலவே, உடனே பயணித்துக்கொண்டிருக்கின்றதா என்று தோன்றுவதைப்போல், எங்கே சென்றாலும் கேட்க்க முடிகின்றது.

இவ்வளையும் கேட்டுவிட்டு, டைம் ஆகிடிச்சு மாப்ளே வீட்ல சொல்லனும்னு சொல்ற எதிரிகளும் சரி, மச்சி இன்னும் நாலு வருசம் இருக்குடா இத்தயெல்லாம் யோசிச்சிகின்னு, ஜாலியா போய்கிட்டே இருப்போம்னு சொல்ற நண்பர்கள்ம் உண்டு.

இன்றைக்கு சுவாரசியமாய், சூடாய் மோதிக்கொள்ளும் கருத்துகளும், புரிதல்களும் சரி, மனிதர்களைப்போல மாற்றங்களுக்கு உட்பட்டே இருந்திருக்கின்றது. நாளை நகைப்புக்கும், வெட்கத்துக்கும் கூட இழுத்துச்செல்லலாம் இன்று மூச்சு முட்ட விவாதித்துக்கொண்டிருக்கும் பார்வைகள். அவற்றில் கொஞ்சத்தை பதிவு செய்து வைப்போமென்று நினைதிருந்தேன். அடுத்து வரும் பதிவுகளில் எங்கள் so called வயசுக்கோளாறு பட்டறைகளை பகிர்ந்துகொள்கிறேன்.

என்னிடமிருக்கும் சில போர்ட்ரெய்ட்கள் - 2

Published by யாத்ரீகன் under , , on திங்கள், ஜூலை 30, 2007

இமாலய பயணத்தின் போது மூன்றாம் நாள் சம்பா பள்ளத்தாக்கு நோக்கி செல்கையில் இடையே தென்பட்ட சிறு குழந்தை வியாபாரிகள், நுனி சிவந்த மூக்கும், கன்னங்களும், சிரிப்பதா வேண்டாமென்பதா என்ற யோசனையும், இலைகளூடே விழுந்த வெளிச்சத்தில் மிகுந்த அழகாய்த்தெரிந்தது....





சீனி - நெருங்கிய நண்பர் வட்டதினுள் ஒருவன், எப்போதும்ம்...எங்கேயும்ம்ம்... ஒருவித தேடலுடன் இருப்பவன். 8000 ஆயிரம் அடி உயரத்தில்....





வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணங்கள் மிகப்பெரிதாய் இருக்க வேண்டுமென்பதில்லையே, ஒரு மிட்டாய் சாப்பிடுவதாகக்கூட இருக்கலாமல்லவா.......




சூடாய் ஒரு டீ ஸீரோ டிகிரிக்குளிரில்.......




ஒளி வட்டம் தெரியுதுங்களா...!!!





யாரை எதிர்பார்த்து...!!! (less resolution pic - original lost)




ஒரு வெயில்கால உச்சி வெயிலில், குலசேகரப்பட்டின தென்னந்தோப்பினுள் ஆனந்த குளியல்





நினைவுகளில் தொலைந்திருந்த ஒரு வேளையில்





Cutie, originally uploaded by யாத்திரீகன்.

விளக்குகள் அணைந்த்துக் கொண்டிருக்கையில் ஓடும் இரயிலில் எதிர்பாரத ஒரு அற்புத சிரிப்பு






ISmile, originally uploaded by யாத்திரீகன்.

ஒரிஜினல் படமில்லாததால் ஏகப்பட்ட புள்ளிகள்...

என்னிடமிருக்கும் சில போர்ட்ரெய்ட்கள் - 2

Published by யாத்ரீகன் under , on திங்கள், ஜூலை 30, 2007

Dark, originally uploaded by tcesenthil.

தி டார்க் லார்ட் :-)





Karadu Muradu, originally uploaded by tcesenthil.

சுந்தரகுமார் @ சம்பா பள்ளத்தாக்கில் ஒரு கிராமத்தில் - வெளியே கரடுமுரடாய் தெரிந்தாலும் இவன் ரொம்பபபபப நல்லவன்... :-)

புகைப்பட போட்டிக்கு

Published by யாத்ரீகன் under , , on புதன், ஜூலை 18, 2007
புகைப்பட போட்டிக்கு:
தலைப்பு: இயற்கை
புகைப்படம் முழுவதையும் பார்க்க அதன் மீது க்ளிக் செய்யவும்

திருச்சி-துறையூர் அருகே நாகலாபுரம், நண்பனின் வயல்வெளி. அடர்ந்த பசுமையின் அழகுக்காகவே இந்த புகைப்படம் எனக்கு பிடித்தவைகளில் ஒன்று.



Chilka, originally uploaded by யாத்திரீகன்.

ஒரிசாவில் உள்ள ச்சில்கா ஏரியின் ஒரு முனையில் உள்ள சிறு தீவு, இங்கிருந்த நீரின் நீல நிறமும், ஆள் அரவமற்ற சூழலும், அவளின் இருப்பையும் மீறி கவர்ந்தது..

புகைப்படம் முழுவதையும் பார்க்க அதன் மீது க்ளிக் செய்யவும்