யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

இமயமலைச்சாரலில் ஒரு பயணம் - 2

Published by யாத்ரீகன் under , , , , , on ஞாயிறு, பிப்ரவரி 11, 2007

Chamba, originally uploaded by tcesenthil.

சம்பா பள்ளத்தாக்கு






Mountain Cricket, originally uploaded by tcesenthil.

பள்ளத்தாக்கிலும் கிரிக்கெட்டா :-)





Indian Swiz, originally uploaded by tcesenthil.

இந்தியன் சுவிட்சர்லாந்துு





சம்பா பள்ளத்தாக்கிலுள்ள கிராமங்களின் குழந்தைகள்ு






A Village on top of Khajiar, originally uploaded by tcesenthil.

காஜியார் மலையுச்சியில் ஒரு கிராமம்ு





பாதி உறைந்த ஏரி

இமயமலைச்சாரலில் ஒரு பயணம்

Published by யாத்ரீகன் under , , , , , on ஞாயிறு, பிப்ரவரி 11, 2007

Kalatop Village Girl, originally uploaded by tcesenthil.

பள்ளத்தாக்கில் ஒரு உலக அழகி




A Winter Deserted Village, originally uploaded by tcesenthil.

குளிர்காலத்தில் காலிசெய்யப்படும் ஒரு கிராமம்





Our Accomodation, originally uploaded by tcesenthil.

8000 ஆயிரம் அடி உயரத்தில் ஸீரோ டிகிரியில் நாங்கள் தங்கியிருந்த இடம்




கலாடாப்பில் எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்குமிடம்




காஜியார் மலையுச்சியில் ஒரு கிராமம்ு

தாஜ்மஹாலில

Published by யாத்ரீகன் under , , on ஞாயிறு, பிப்ரவரி 11, 2007

Taj on a different Eye, originally uploaded by tcesenthil.

ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் தாஜ்மஹால்



தாஜ்மஹாலில் சூரிய அஸ்தமனம் - கொஞ்சம் வித்தியாசமாய் அஸ்தமனத்தில் தாஜ்ஜை எடுக்காமல் அதன் மேடையை எடுத்தது.




Taj Works, originally uploaded by tcesenthil.

தாஜ்மஹாலில் உள்ள வேலைப்பாடுகளில் சில





Taj Works, originally uploaded by tcesenthil.

தாஜ்ஜின் சுவர்களில் உள்ள வேலைப்பாடுகள்

ஒரு ஒன்றரை மணிநேரம் இருக்குமா உங்களிடம் ?

Published by யாத்ரீகன் under , , , on ஞாயிறு, பிப்ரவரி 04, 2007

முக்கியமான தேர்வு ஒன்று. அவ்வளவாய் பரிச்சியமாய் இல்லாத மொழியில் தாய் மொழி பாடத்திற்கான கேள்விகள், அதனால் பதில்கள் தெரிந்திருந்தாலும் பொருத்த முடியாமலிருப்பதால் கொஞ்சம் பதட்டம். இத்தனைக்கும் இடையே எப்படி தேர்வு எப்படி எழுதுவீர்கள்.

தேர்வுத்தாள் நமக்கு உரியதுதானா என்ற கேள்வி முதலில் தோன்ற, பின் யோசிக்கையில் கோர்வை கோர்வையாய் பதில்கள் எழுதுவதற்கு ஏதுவாய் வரவில்லை, முதலில் யோசித்து, பின் அது சரியாய் தோன்றவில்லையென்றால் அதில் திருத்தம் செய்து எழுதுவோம், எழுதுகையிலும் திருத்தம் தோன்றும், ஆங்காங்கே அடித்தல் திருத்தல், கொக்கி போட்டு இரண்டு வார்த்தைகளிடையே ஒரு வாக்கியமே புதிதாய் சேர்த்தல் என பல ஒட்டு வேலைகள் நடக்கும். இறுதியில் ஒரு முறை பதில்கள் விட்டுப்போயுள்ளனவா, எழுதியவை சரியா என ஒரு சரிபார்த்தல்.

எல்லாம் சரியாய் இருந்தும் உங்கள் கருத்துக்களை, உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை அப்படியே தலைகீழாய் உங்கள் பேனா புரிந்து கொண்டு எழுதினால் எப்படி இருக்கும் ?
குழப்புகிறதா ? ஒரு நொடி கண்ணைக்கட்டிக்கொண்டு உங்கள் நண்பரை அல்ல, உங்களூக்கு முன்னே பின்னே தெரியாத ஒருவரை, எப்படி இருக்கும் அவர் கையெழுத்து என்று தெரியாமல், தேர்வு செய்து, அவரிடம் பதில்களை சொல்லி எழுதியபின் வாங்கிப்பாருங்கள் நான் சொல்ல வருவதின் சிரமம் புரியும்.

நேற்று லயோலா கல்லூரியில் தமிழ் இலக்கியம் (Tamil Literature) படிக்கும் பார்வை குறைபாடுள்ளவர்களின் தேர்வு (Internals), அதற்கு எழுத்தராக (Scribe) போயிருந்தேன்.

தேர்வுகளில் ஒரு பெஞ்சில் ஒருவர் வீதம், அடுத்தடுத்த பெஞ்களில் உட்காரச்சொல்வார்கள் என்று நினைத்து அனைவரும் உட்கார்ந்திருந்த வேலையில், ஒரு பெஞ்ச் இடையில் காலியாக விட்டு உட்காரவும் என்று கோரிக்கை வந்த உடன் தான் உணர்ந்தேன் சொல்லும் பதில்கள் அடுத்த பரிட்சையாளரால் கேட்டுவிடப்படக்கூடாது என்று.

பின் எங்களுக்கான பயிற்சியாளர் ஒவ்வொருவராய் அழைத்து வரப்பட்டு எங்களருகில் அமரவைத்து சென்று விட்டனர். அவர்களில் முழுதாய் பார்வை இல்லாதவர் முதற்கொண்டு கண்களுக்கு மிக மிக அருகில் வைத்து மட்டுமே படித்தால் தெரியும் நிலை கொண்டவர் வரை இருந்தனர்.

கொஞ்சம் இறுக்கமான சூழ்நிலையா என்று சொல்லத்தெரியவில்லை ஆனால் முதல் சில நிமிடங்கள் மவுனத்திலேயே கரைந்தது. எப்படி ஆரம்பிப்பது என்று எனக்கும் புரியவில்லை, அனுதாபமாய் பட்டுவிடக்கூடாது என்பதில மிகுந்த கவனமாய்யிருந்தேன். யார் அருகில் உட்கார்ந்திருக்கிறாகள், ஆணா, பெண்ணா என்று தெரியாத நிலையில் அருகில் இருப்பவர் என்றே அந்த அறை ஒரு கனமான மவுனப்போர்வை கொண்டு போர்த்தியது போலிருந்தது.

"வணக்கம், எம்பேரு..." என அரம்பித்த உடன், சகஜமாய் பேச ஆரம்பித்து விட்டோம். இன்றைய பாடம் என்னவென்பதில் தொடங்கி, சென்னையின் காலைப்பனி வரை பேச ஆரம்பித்து விட்டோம்.

தேர்வுக்கான கேள்வித்தாள்கள் பார்த்ததில்தான் எனக்கு அடுத்த ஆச்சர்யம். ஆங்கிலத்தில் கேள்விகள், அதுவும் சாதரண ஆங்கிலம் இல்லை, "டிஸ்பொசிசன் ஆட்ரிபூசன்(Disposition Attribution), சோசியல் ஸ்க்கீமா (Social Schema)..." என என்னால் தமிழாக்கம் செய்ய இயலாத ஆங்கிலம். (என் நிலமைதான் அப்படி என்று நினைத்து சுற்றி முற்றி திரும்பினால் அங்கிருந்த அனைவருக்கும் இதே நிலமைதான்).

ஆசிரியர்களிடம் கேட்டால், அவர்களுக்கு நாங்கள் சொல்லித்தந்து விட்டோம், நீங்கள் தமிழாக்கம் கூட செய்ய வேண்டாம், அவர்கள் சொல்வதை மட்டும் எழுதுங்கள் என்று பதில்.

சொல்வதை மட்டும் எழுதுவதா, அவர்கள் சொல்லும் விடைகள் தவறாய் தெரியும் தருணத்தில் நாமே சரியான பதிலை எழுதுவதா என்று ஒரு பெரிய தயக்கம்.

ஒருவழியாய் என்னருகில் உட்கார்ந்த பிரபுவும் விடைகளை யோசித்து சொல்ல, முதல் பகுதி முடிக்கையில் ஒரு அறிவிப்பு. "தமிழ் இலக்கிய கேள்வித்தாள்கள் மாறிவிட்டன என்று". புதிய கேள்வித்தாள்கள் விநியோகிக்கப்பட்டு மீண்டும் தொடங்கினோம்.

ஆரம்பத்தில் சொன்ன அனைத்து தடைகளும், குழப்பங்களும், தோன்ற, கேள்விகள் புரியாவிட்டால் தமிழாக்கம் செய்ய முடிந்தவற்றை செய்தோம். அப்படியும் மிஞ்சியவற்றில், பிரபு, அருகிலிருந்த மாணவரை கேட்கச்சொல்லுமாறு சொன்னதும் என்ன செய்வதென்றே புரியவில்லை.

கேட்காமலிருந்து, கேட்டது போல் ஏமாற்றுவதா ? இல்லை கேட்டு உதவி பண்ணுவதா என்றும் புரியவில்லை.

ஒருவழியாய், முடிந்த வரை தமிழாக்கம் செய்து, கேள்வியை விரிவாய் விளக்கியும் முடிந்த வரை உதவி செய்து கொண்டிருந்தேன். பிரபுவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் பதில்கள் நினைவுக்கு வர, தாள்கள் நிரம்பத்தொடங்கின.

ஒவ்வொரு பகுதியாய் முடித்து , இப்போது இறுதிப்பகுதியில் 1200 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு பதில் வேண்டும். கேள்வி "Explain about factors influencing Interpersonal Attraction".

எளிதான கேள்விதானே என்று நினைத்து பதிலை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்த எனக்கு, "பார்த்த உடனே பிடித்துபோகும் அழகு, பழகும் போது இருவருடைய பார்வையும் ஒன்றாய் இருப்பது .. " என்று பதில்கள் என் மனதில் தோன்ற தோன்ற...... எப்படி இருந்தது என்று சொல்லத்தெரியவில்லை.

யோசித்து யோசித்து பிரபு பதில் சொல்லச்சொல்ல, அதை நான் தயக்கத்துடனே எழுதிக்கொண்டிருக்கையில், பிரபுவிடமிருந்த கனத்த மவுனத்திற்கு பின் "இதுக்கு மேல என்னண்ணா சொல்ல ? அவ்வளவுதான் தெரியுது...... , சரியாத்தானே எழுதுரீங்க, நீங்க எப்படி எழுதுவீங்கனே தெரியாது, வெறும் கோடு கோடாத்தான் தெரியுது, பார்த்து எழுதுங்கண்ணா, 15 மார்க் எடுக்கனும் பாஸ் பண்ண....".

எப்படி பதில் சொல்வதென்று தெரியாமல், சில இடங்களில் பிரபு சொல்ல சொல்ல அந்த திருத்தங்களுக்காக அடித்தல்கள் பண்ணதை நினைத்து கஷ்டப்பட்டுக்கொண்டேயிருந்தேன்.

பின் ஒருவழியாய் ஒன்னரை பக்கங்களில் பதிலை நிரப்பி, பதில்கள் நிரம்பிய தாளை கொடுக்க காத்திருக்கையில்... "அண்ணா, நீங்க காதலிச்சிருக்கீங்களா ? உங்களுக்கு பிடித்த பெண் இருக்காங்களா ?.." என்ற கேள்வி பிரபுவிடம்.

காரணம், இந்த பகுதிக்கான அவர்களின் பதிலில் பிறரைப்பற்றிய புரிதல் பற்றியும், அதில் வரும் காதல், திருமணம், ஊடல் பற்றியும் இருந்த குறிப்புகளே.

ஆவடியில் தங்கியிருக்கும் பிரபு, தினமும் லயலோ வந்து செல்ல 1 மணிநேரத்திற்கும் மேல் பயணிப்பதையும், இதிலே பேருந்தில் கூட்டமிருந்தால் கொஞ்சம் கஷ்டம் என்று சொன்னதை கேட்டு, எத்தனை பேருக்கு இறங்குகையில் உதவியுள்ளோம் என்று யோசித்து பண்ணிப்பார்த்துக்கொண்டிருந்தேன். முதல் நொடியில் தோன்றும் தயக்கம் தொலைத்து சில வருடங்க்கள் ஆகிவிட்டன, அதற்கு முன் யோசித்து முடிப்பதற்குள் அந்த கணம் முடிந்து போவதும், பின் அதை நினைத்து குற்ற உணர்வு கொள்வதுமாய் தன் முன்பிருந்தேன்.

பரிட்சையின் முடிவுகளுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு லயலோ விட்டு வெளியே வருகையில், யாருமில்லாத அந்த வராண்டவில் விழுந்த வெயிலும், அந்த பெரிய தூண்களின் நிழல்களும், எங்கோ கூவிக்கொண்டிருக்கும் பறவையின் சப்தமும், கடற்கரை மணலில் ஆழப்பதியும் கால் தடங்களைப்போல, என் நினைவுகளில் இறங்கிக்கொண்டிருந்தன.

ஒரு ஒன்றரை மணி நேரம் அவர்கள் வாழ்வில் மட்டுமல்ல, உங்கள் மனதிலும் ஒரு மாற்றம் கொண்டு வரும். nasrivatsan@gmail.com -ஐ அணுகலாம்.

கனவுப்பயணத்திற்கான முதலடி

Published by யாத்ரீகன் under on வெள்ளி, டிசம்பர் 29, 2006
1010101101010101101010101011010101010110101010101101010
101010101 பயணம் 1011010110101010101101010101011010101
1010101010110101010101101011010101010110101010101101010
101010010101010 இமயமலைச்சாரல் 10101010110101010101
1010100101010101101010101011010101010110101010101101010
10101011010101011010101010110 ஏகாந்தம் 1011010101010111
101010101 கனவு 01010111000001010101011010101010110100
1010101010110101010101101010101011010101010110 குளிர்100
1010101010110010111111 பனி 0101011011010101010111010100
1010101010110101010101101011010101010110101010101101010
1010101010110101010101101011010101010110101010101101010
1010101010110 புகைப்படம் 10101010110101011010101010110
1010101010110101010101101010101011010110101010101101010
101010101011010101101010101 உற்சாகம் 01010101011001010
1010101010110101011010101011010101010110101010101101010
101010101011 குதூகலம் 10101010110101101010101011010101
1010101010110101010101101010101001010110101010101101010
1010101010110101101 காதல்கோட்டை 1010101010110001010
1010101010110101101010101011010101010110101010101101010
1010101010110101101010101011010101010110101010101101010
0101010101101011010101010110101010101101010101011010101
1010110101010101101010101011010101010110101010101101010
புத்தாண்டு வாழ்த்துக்கள்
11010110101010101101010101011010101010110101010101101010
11010110101010101101010101011010101010110101010101101010
01010110101010101101010101011010101010110101010101101010
01010110101010101101010101011010101010110101010101101010

கொல்கத்தா துர்கா பூஜா - இறுதி பகுதி

Published by யாத்ரீகன் under on திங்கள், அக்டோபர் 09, 2006
கல்கத்தாவின் மற்றொரு புகழ் பெற்ற இடமான சோனாகாச்சிக்கு இன்னொரு முகமும் உண்டு. துர்கா சிலையை செய்யத்தொடங்குவதற்கு முன் இங்கிருக்கும் பெண்களின் காலடி மண்கொண்டே தொடங்குவார்களாம். (ஹிந்தி தேவதாஸ் படத்தில் ஐஸ்வர்யா மாதுரியின் வீட்டுக்கு போவது நியாபகம் உள்ளதா ?) , பூஜை ஒரு பக்கம் படு கோலாகலமாக நடந்து கொண்டிருக்க, அதே தருணத்தில் போலிஸ் கொண்டு சோனாகாச்சியில் உள்ள கூட்டம் ஒழுங்குபடுத்தி அனுப்பப்படுகின்றது. அந்த பெண்களை பார்க்கையில் இத்தனை பூஜை இத்தனை செலவு எதற்கு வீணே என்றுதான் மனது படபடத்துக்கொண்டிருந்தது.



கொல்கத்தாவில் நுழைந்ததும் முதல்காட்சி, துர்கா பூஜை துவங்கும் போது கங்கை நீர் கொண்டு வருவது.


மா துர்கா தலைப்புச்செய்திகளில்
பந்தல் அமைப்பு வேலை தொடங்குகிறது
மர சமையல் பொருள்களினால் ஆன குதிரையும், சாரதியும். அருகிலுள்ள மக்களின் உயரத்தை ஒப்பீடு செய்ய பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
முகம்மது அலி பார்க்கில் உள்ள அலங்கார விளக்கு
ரோட்டோர சூதாட்டமும் கொண்ட்டாட்டத்தின் ஒரு பகுதிதான் ;-)
தோஹல் () என்ற மங்கல வாத்தியம் இந்த விழாவில் முக்கிய பங்கு, அதில் வித்தை காமிக்கும் ஒரு குழு (சால்ட் லேக்கில்) , ஒருவர் தோளில் அமர்ந்த ஒருவர், கிட்டத்திட ஐந்து தோஹல்களை கை,கால், பற்களில் பிடித்துக்கொண்டி இசைக்கும் தருணம். நம்மூர் தப்பை போலவே, நாடி நரம்பை சுண்டி இழுக்கும் இசை.

கொல்கத்தா துர்கா பூஜா - 2

Published by யாத்ரீகன் under on திங்கள், அக்டோபர் 09, 2006
மிக மிக வித்தியாசமான, பிரமாண்டமான பண்டல், காட்டுக்குள்ளிருக்கும் குகை ஒன்றில் குடையப்பட்ட பயங்கரமான காளி கோவில் எனும் தீம். இரத்தமெங்கும் தெளித்திருப்பதை போல் ஒரு உணர்வை உருவாக்கி, மண்டை ஓடுகளும், மிக நீண்ட பாறையில் குடைந்த குகைப்பாதையும், தொங்கும் வேர்களும், இறுதியில் பயங்கரமான காளி சிலையும் என உள்ளத்தை கவர மட்டுமின்றி, உள்ளத்தை கொஞ்சம் உறைய வைத்த பண்டல்.

முழுவதுமாய் சட்டை பொத்தான்களால் ஆன பண்டல், அந்த வித்தியாசத்தை தவிர, இந்த கலை நுணுக்கம் கொண்ட சிலையும் இந்த பண்டலின் கவன ஈர்ப்பை பெற்றது.


துர்க்காவின் உடையில் உள்ள வேலைப்பாடுகள்.



முகம்மது அலி பார்க்கில் உள்ள பந்தல் (கொல்கத்தாவில் மிக மிக புகழ்பெற்ற பண்டல்), ஒருமைப்பாட்டை உணர்த்தும் தீம்கள் எப்போதும் இங்கு உண்டு.



இங்கு வித்தியாசமான தீம் ஏதுமில்லாவிடினும், சிலைகளின் தோற்றம் மிக மிக அழகாய் :-)



பூஜை நடந்து கொண்டிருக்கும் ஒரு சின்ன பண்டல்


மணிக்டாலாவில் உள்ள பிரமாண்டமான மரவேலைப்பாடுகள் கொண்ட பண்டல், முழுவதுமாய் மர கரண்டிகள், பூரிக்கட்டைகள் என மர சமையல் சாமான்கள் கொண்டு நான்கு குதிர்கைகள் இழுக்கும் சாரதி கொண்ட தேர் வடிவில் செய்யப்பட்டது. தேரின் உயரம் 20 அடிக்கும் மேல், (சாரதி மற்றும் குதிரைகள் உயரத்தை கணக்கில் கொள்க).


மிக மிக வண்ணமயமாய் செய்யப்பட்ட சிலை, இதில் மிகவும் கவர்ந்தது சிலையின் கூந்தல். மிக மிக மிக நுணுக்கமாக செய்யப்பட்ட வேலை அது, நிஜமாகவே சவுரி கொண்டு செய்து விட்டார்களா என திகைக்க வைத்தது.

கொல்கத்தா துர்கா பூஜா - 1

Published by யாத்ரீகன் under on வெள்ளி, அக்டோபர் 06, 2006
துர்காபூஜையின் போது பல இடங்களின் பன்டல்கள் என்கின்ற பெயரில் பந்தல்கள் அமைத்து அதில் அசுரனை வதைக்கும் துர்கையின் சிலையோடு, இலக்குமி, சரஸ்வதி, பிள்ளையார் மற்றும் கார்த்திகேயன் (நம்மூர் முருகனைத்தான் இப்படி கூப்பிடுறாங்க, வேலுக்கு பதில் வில் ஆயுதம்.. வேல் தமிழர் ஆயுதமாச்சே ;-) சிலைகளை அமைத்து வழிபடுவார்கள்.

ஒவ்வொரு பந்தல்களிலும் சிலைகள் மட்டுமின்றி, பந்தல்களின் அமைப்பும் அலங்காரமும் ஒரு குறிப்பிட்ட தீம் நோக்கி இருக்கும்.

இரவு முழுவதும் பெங்காலிகள் தங்கள் குடும்பத்தோடு ஒவ்வொரு பந்தல் பந்தலாக சென்று வழிபடுவது மட்டுமின்றி, போகும் வழியெங்கும் குதூகலத்துடன் விளையாடுவதும், விதவிதமாய் சாப்பிட்டு மகிழ்வதும் என, ஒரு ஆன்மீக திருவிழாவாய் தெரியவில்லை :-)

துர்கா பூஜையின் போதுதான் அவர்கள் அனைவரும் குளித்து புதுத்துணி அணிவார்கள் என்றொரு வதந்தியும் உண்டு ;-)

இதோ இப்பொழுதே இடிந்து விழப்போகும் என்ற நிலையில் இருக்கும் வீடு கூட வித விதமாய் வண்ண விளக்குகளும், பந்தல்களும் கொண்டிருப்பதை காணுகையில் இவர்களுக்கு இருப்பது கடவுள் நம்பிக்கையா இல்லை.... என்று சந்தேகம் வருகின்றது..

எது எப்படியோ, கொல்கத்தாவே விழாக்கோலம் பூணும் நேரமிது, மக்கள் கூட்டத்தையும், உற்சாகமான ஒரு சூழ்நிலையையும் விரும்புவர்கள் கட்டாயம் வரவேண்டிய இடமும் நேரமும் இது.


பந்தல்கள் அனைதையும் கண்டு முதல் மூன்று இடங்கள் அறிவித்து பரிசளிப்பது ஒரு வழக்கம், இதில் முதல் பரிசு பெறுவதென்பது ஒரு பெரும் பெருமை.


மேலே இருப்பது "டம் டம்" என்ற இடத்தில் உள்ள பந்தல் , முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்தது, உலோகத்தால் செய்ததைப்போல் இருப்பினும் அது வெறும் பெயின்ட் பினிசிங் டச் தான். சிலையில் உள்ள நுணுக்கத்தை பாருங்கள், சிலையின் விரல்கள், புடவையின் வேலைப்பாடுகள், கண்கள் என எல்லாவற்றையும் கவனம் எடுத்து செய்திருப்பதை.


இங்கே கற்பனைத்திறனை அசுரனை கொல்லுவதை சித்தரித்த விதத்தில் காணலாம். பார்த்ததிலேயே கொடூரமான சிலைகளில் இரண்டாவது. தேவியின் கண்களின் உள்ள கோபம், அசுரனின் கண்களில் உள்ள உணர்ச்சிகள், எவ்வளவு தத்ரூபம்.
இந்த தேவி சிலையை பாருங்கள், டிபிக்கல் பெங்காலி பெண்ணை போல கண்கள் :-) (இந்த பந்தலை முழுவதுமாய் பஞ்சு பொம்மைகள் வைத்து செய்திருந்தார்கள்)
ஏர்போர்ட் செல்லும் வழியில் , ஸ்ரீபூமி எனும் இடத்தில் முழுவதுமாய் மூங்கில்களால் இழைத்த பந்தலையும், சிலையையும் கண்டோம். மூங்கிலாயினும், சிலையின் சேலை மடிப்புகள், அதில் உள்ள அலங்காரங்கள் என அட்டகாசம். (கிட்டதிட்ட 2 மணிநேரம் ஆனது இந்த பந்தலை பார்ப்பதற்கான வரிசையை கடப்பதற்கு)

இந்த பந்தல் மிகவும் சுவாரசியமானதாய் இருந்தது, கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டதை போல பந்தல்,உள்ளே சிலைகள் மிகவும் பாந்தமாய், பெங்காலிப்பெண்களின் சாயலை கொண்டு :-)
எந்த ஒரு பரிசோதனை முயற்சியும் இல்லாமல், பழங்காலத்தில் எப்படி பெங்காலி துர்கா சிலைகள் இருந்தனவோ அதுமாதிரியாய் ஒரு சிலை. மிகவும் ஒரிஜினலாய் :-)



பூஜையின் போது எல்லா விளம்பரங்களிலும் காணப்படும் ஒரு அடையாளம், வெறும் கோடுகளால் அவுட்லைன் மட்டும் இடப்படும் "இரு பெரும் கண்கள், ஒரு மூக்கு வளையம்".

கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 2

Published by யாத்ரீகன் under on புதன், செப்டம்பர் 27, 2006
காவல் சிங்கங்கள்

சக்கரத்திற்கு பக்கத்திலுள்ள சிலைகள் ;-)


பிரமாண்டம்


எங்கு நோக்கினும் அற்புதமடா


நுழைவாயில்


பராமரிப்பு பணிகள்

7 குதிரைகள், 24 சக்கரங்கள் - 7 வார நாட்கள், 24 மணி நேரம்

கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 1

Published by யாத்ரீகன் under on செவ்வாய், செப்டம்பர் 26, 2006
கோனார்க்
மனிதனின் மொழியை கற்களின் மொழி கடந்துவிட்ட இடம் - இரவீந்திரநாத் தாகூர்



கங்கையரசர் நரசிம்ம தேவா - கோனார்க் கோவிலை கட்டக்காரணமாயிருந்தவர்


சூரியக்கடவுள் சிலையின் இடுப்பு ஆபரண வேலைப்பாடு - எவ்வளவு நுணுக்கமான வேலை


கோனார்க் கோவில் - தேரைப்போல் தோற்றம் அளிக்கின்றதா ?


புகழ்பெற்ற கோனார்க் கோவில் சக்கரம் - வெறும் சக்கரம் மட்டுமல்ல சூரியக் கடிகாரமும் கூட


சிங்கம் பலத்தையும், யானை செல்வத்தையும் குறிக்க இரண்டுக்கும் அடியில் உள்ள மனிதனை அழிப்பதை குறிக்கும் சிற்பம்


கோனார்க் சக்கரம்


நடன மண்டபத்தில் ஒரு சிற்பம் - எவ்வளவு பொறுமையும் கற்பனைத்திறனும் இருந்திருக்கும்