கொல்கத்தா துர்கா பூஜா - இறுதி பகுதி
Published by யாத்ரீகன் under on திங்கள், அக்டோபர் 09, 2006

கொல்கத்தாவில் நுழைந்ததும் முதல்காட்சி, துர்கா பூஜை துவங்கும் போது கங்கை நீர் கொண்டு வருவது.






மேலே இருப்பது "டம் டம்" என்ற இடத்தில் உள்ள பந்தல் , முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்தது, உலோகத்தால் செய்ததைப்போல் இருப்பினும் அது வெறும் பெயின்ட் பினிசிங் டச் தான். சிலையில் உள்ள நுணுக்கத்தை பாருங்கள், சிலையின் விரல்கள், புடவையின் வேலைப்பாடுகள், கண்கள் என எல்லாவற்றையும் கவனம் எடுத்து செய்திருப்பதை.
இங்கே கற்பனைத்திறனை அசுரனை கொல்லுவதை சித்தரித்த விதத்தில் காணலாம். பார்த்ததிலேயே கொடூரமான சிலைகளில் இரண்டாவது. தேவியின் கண்களின் உள்ள கோபம், அசுரனின் கண்களில் உள்ள உணர்ச்சிகள், எவ்வளவு தத்ரூபம்.
இந்த தேவி சிலையை பாருங்கள், டிபிக்கல் பெங்காலி பெண்ணை போல கண்கள் :-) (இந்த பந்தலை முழுவதுமாய் பஞ்சு பொம்மைகள் வைத்து செய்திருந்தார்கள்)
ஏர்போர்ட் செல்லும் வழியில் , ஸ்ரீபூமி எனும் இடத்தில் முழுவதுமாய் மூங்கில்களால் இழைத்த பந்தலையும், சிலையையும் கண்டோம். மூங்கிலாயினும், சிலையின் சேலை மடிப்புகள், அதில் உள்ள அலங்காரங்கள் என அட்டகாசம். (கிட்டதிட்ட 2 மணிநேரம் ஆனது இந்த பந்தலை பார்ப்பதற்கான வரிசையை கடப்பதற்கு)
இந்த பந்தல் மிகவும் சுவாரசியமானதாய் இருந்தது, கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டதை போல பந்தல்,உள்ளே சிலைகள் மிகவும் பாந்தமாய், பெங்காலிப்பெண்களின் சாயலை கொண்டு :-)
எந்த ஒரு பரிசோதனை முயற்சியும் இல்லாமல், பழங்காலத்தில் எப்படி பெங்காலி துர்கா சிலைகள் இருந்தனவோ அதுமாதிரியாய் ஒரு சிலை. மிகவும் ஒரிஜினலாய் :-)
பூஜையின் போது எல்லா விளம்பரங்களிலும் காணப்படும் ஒரு அடையாளம், வெறும் கோடுகளால் அவுட்லைன் மட்டும் இடப்படும் "இரு பெரும் கண்கள், ஒரு மூக்கு வளையம்".