யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

இராச இராச சோழன்

Published by யாத்ரீகன் under , , , , , on செவ்வாய், மே 08, 2007
மாமன்னன் இராச இராச சோழன்



இராசேந்திர சோழன் பற்றிய குறிப்பு (பொன்னியின் செல்வன் நியாபகம் வருகின்றதா ?)



இராசேந்திர சோழனின் கீழ் பரவிய சோழ சாம்ராஜ்யம், கடல் கடந்து நாடு கடந்து




மாளிகைமேடு - முதலாம் இராசேந்திர சோழனின் ஆட்சிக்குப்பின்னால் இருந்த சோழர்கள் வழுவிழந்த நிலையில், படையெடுத்து வந்த பாண்டிய மன்னர்களால் இடித்து தள்ளப்பட்டது என்று கூறப்படுகின்றது. சுட்ட செங்கல்கள் மூலம் கட்டிய பெரும் அரண்மனை சுவர்கள், அங்கிருந்து கிடைத்திருக்கும் பல வெளிநாட்டு பழங்கால பொருட்கள் என தன்னுள் ஒரு மாபெரும் இரகசியத்தை பூமித்தாய் புதைத்து வைத்திருக்கும் மற்றுமொரு இடம்.




இராச இராச சோழனின் முத்திரை பத்திரம், இதுவே தஞ்சை பெரிய கோவிலை இவர்கள் எழுப்பியதற்கானதொரு மிகவும் முக்கியமான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னம்.

மேலும் சுவையான தகவல்கள்






கங்கை கொண்ட சோழபுரம் - ஒரு காலவெளிப்பயணம்

Published by யாத்ரீகன் under , , , , , on செவ்வாய், மே 08, 2007
வடக்கே கங்கை கரையோரம் கொண்ட தன் வெற்றியை கொண்டாட பேரரசன் மகன், உருவாக்கிய சோழர்கால தலை நகரமான கங்கை கொண்ட சோழீச்வரம்.
சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள். முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க



தன் தந்தையின் படைப்பான பிரகதீஸ்வரர் கோவில் போன்ற தோற்றத்தில் உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுர கோவிலின் நுழைவாயிலில்.

தஞ்சை பெரிய கோவிலைப்போலவே இங்கேயும் உள்ள ஒரே கல்லில் உருவான நந்தி. இங்கே வழிபாடு அவ்வளவாய் இல்லாததும் ஒரு விதத்தில் நல்லது, இந்த நந்தி சிலையில் உள்ள வேலைப்பாடுகளை அருகே இருந்து இரசிக்க முடிந்தது.


தஞ்சை கோவில்களுள் உள்ள துவாரகபாலர்கள் சிலைகளின் அமைப்பு மிகவும் பிரசித்தி பெற்றவை, இதனருகே நாங்கள் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில் நண்பன் ஒருவன் எடுத்த புகைப்படம். ஆறடி உயரம் உள்ள நாங்கள் எங்கே, அந்த சிலையின் உயரம் எங்கே !!!

எங்களுள் எழுந்த மிகப்பெரும் கேள்வி, யாருக்காவது விடை தெரியுமா ??

கேள்வி: கோவிலை கட்ட தீர்மானித்த உடன், எங்கிருந்து ஆரம்பித்திருப்பார்கள் ? அவ்வளவு பிரமாண்ட சிலைகளை எங்கிருந்து செதுக்க துவங்கிருப்பார்கள் ? கோவிலின் வெளியே செதுக்க துவங்கியிருந்தால், தூண்களை நிறுவுவதற்கு முன் உள்ளே கொண்டு வந்திருக்க வேண்டும், இப்படி பல கேள்விகள் !!!!

ஒரு கால இயந்திரம் இருந்தால் , தஞ்சை ஆண்ட சோழர்கள், பல்லவர்கள் காலம், பாண்டியர்கள் காலம், விஜயநகர காலம், ஹம்பி நகரம் செழிப்பாக இருந்த காலம் என்று சுற்றி வரவேண்டும் !!!!


பண்ணிரண்டரை அடி உயரம் உள்ள கோபுர கலசம்


வெயில் கொடுமை !!! :-)


பெரிய கோவிலைப்போலவே உள்ள கங்கை கொண்ட சோழபுர கோவில்


நடராசர் சிலையின் முகத்தில் உள்ள புன்சிரிப்பையும் நளினத்தையும் பாருங்கள், இதை செதுக்கியவர் எவ்வளவு அனுபவித்து செய்திருக்கவேண்டும்.


கோபுரத்தின் மேலே இருந்த பல சிற்பங்களில் ஒன்று, 12X புகைப்பட கருவி பயன்படுத்தியதன் பயன்.


கோவிலின் மேலே இருந்த அதிகம் கவனிக்கப்பட்டிராத ஒரு பெண்ணின் சிலை, எந்த நாட்டுப்பெண்ணோ !!! இது போல் இங்கிருக்கும் "வடபுரமிருந்த சிவன் மன்மதனை எரிக்கும்" சிற்பம் மிகவும் அழகானது என்று கேள்விப்பட்டிருந்தோம், ஆனால் அதை இறுதி வரை கண்டு பிடிக்க முடியவில்லை :-(

கோபுரத்தின் மேலிருந்த பட்டைகள்.

தஞ்சை - ஒரு காலவெளிப்பயணம் - 3

Published by யாத்ரீகன் under , , , , , on செவ்வாய், மே 08, 2007
சமீபத்தில் தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள். முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க




பெரிய கோவிலின் நுழைவாயிலில் உள்ள கோபுரம், ஒரு அற்புதத்தை காண தயாராகுங்கள்


நம் முன்னோரின் அறிவியல்/கட்டிடத்திறன் உலகப் புகழ் பரப்பும் தஞ்சை பெரிய கோபுரம். இதன் உச்சியில் இருப்பது 80 டன் எடையளவு கொண்ட இரு கற்கள் (40+41), இதை எந்த தொழில்நுட்பம் கொண்டு 150 அடிகளுக்கு மேல் கொண்டு சென்றார்கள், எப்படி உச்சியில் வைத்தார்கள், எல்லாவற்றிற்கும் மேலே இந்த கோவில் முழுவது கிரானைட் எனப்படும் கடின பாறையினால் ஆனது, தற்போதைய காலத்திலேயே, 50 டன் அளவுள்ள ஒரே கிரானைட் கல்லை உடைத்து செதுக்குவதற்கு பல நாட்களும், பெறும் முயற்சியும் தேவை, இந்நிலையில் அவர்கள் எப்படி இந்த கோபுரத்தை மட்டுமின்றி கோவில் முழுவதையும் செதுக்கினார்கள் ?! ஆச்சரியமே...


தஞ்சை கோவிலின் புகழ் பெற்ற ஒரு கோணம், அந்தி மயங்கும் மாலை வேளையில்.


நவக்கிரகங்கள் லிங்கங்களாய், இதில் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை, ஆனால் இதிலிருந்த ஓளி அமைப்பில் ஒரு இனம் புரியாத உணர்வு...


கோவில் சுவர்களில் உள்ள ஓவியங்கள், இதை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை என நினைக்கின்றேன், நாம் கோவில்களை ஆன்மீக தளங்களாய் மட்டுமே பார்க்கின்றோம் :-( , இதில் பொதிந்து இருக்கும் அறிவியல் திறன், கலைத்திறன் என எப்போது நம் தலைமுறையிடம் சுட்டுக்காட்ட பழகப்போகின்றோம் ?


ஒற்றைக்கல்லினால் ஆன பிரமாண்ட நந்தி, இதை செதுக்கும் போது தவறிழைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் ?!?! இது என்ன காகிதமா அழித்து விட்டு முதலிலிருந்து தொடங்க ?!


கோவிலின் முன்புறமிருந்து


காணக்கிடைத்த பொம்மலாட்டம்

நந்தியின் பின்புறம். (நந்தனுக்காக ஒதுங்கியதாக சொல்லப்படும் நந்தி எந்த கோவிலில் ?)

தஞ்சை - ஒரு காலவெளிப்பயணம் - 2

Published by யாத்ரீகன் under , , , , , on செவ்வாய், மே 08, 2007
சமீபத்தில் தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள். முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க



சரபோஜி மன்னரின் தொகுப்பிலிருந்த ஒரு தஞ்சாவூர் ஓவியம், 3D effect தெரியும் இந்த ஓவியங்களை, அந்த 3D effect-க்காக அவர்கள் வரையும் முறையை கண்டுபிடிக்க எவ்வளவு கற்பனைத்திறனோடு யோசித்திருப்பார்கள், எளிதான முறை ஆனால் அதன் பலன் அருமை.



சரபோஜி மன்னரின் தர்பார், வட இந்தியாவில் பல பழங்கால அரண்மனை தர்பார்களை பார்த்திருந்தும், இதன் வசீகரம் தனி. அள்ளித்தெளித்த வண்ணங்களா காரணம் என்று தெரியவில்லை :-)


தர்பாரின் மேற்க்கூடம்

கலைநயம் மிக்க பல சுதை சிற்பங்களும், வளைவுகளும், வண்ணங்களும் ஒரு சேர

தர்பார் சுவற்றிலுள்ள ஒரு பிரமாண்ட்ட தஞ்சாவூர் ஓவியம்.

தஞ்சை - ஒரு காலவெளிப்பயணம்

Published by யாத்ரீகன் under , , , , , on செவ்வாய், மே 08, 2007
சமீபத்தில் தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள்.
முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க


தஞ்சை கலைக்கூடம் செல்லும் வழியில் உள்ள ஒரு நுழைவாயிலின் மேலே



உடல் வளைவுகளும், ஆபரணங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடும் அசர வைக்கின்றன



தாராசுரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிற்பங்களில் ஒன்று, அற்புதம் என்ற ஒரு சொல்லிற்குள் அடங்காது இதன் அழகும், நுணுக்கமும்



தட்சிணாமூர்த்தியின் முகத்தில் உள்ள சாந்தமும், உருத்திராட்சத்தின் வேலைப்பாடும், சடாமுடியில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடும் இரசிக்க சில மணிநேரங்கள் பத்தாது




சரியான பராமரிப்பில்லாமல் உள்ள ஒரு தஞ்சாவூர் ஓவியம்



கலைக்கூடத்தின் ஒரு பகுதியில் உள்ள அழங்கார வேலைப்பாடுகள்

மணிக்கூண்டின் மேலிருந்து தஞ்சை பெரிய கோபுரம், எவ்வளவு கம்பீரமாய் ..