யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

நினைவுகூரப்படவேண்டிய மாமனிதர் - Dr.V

Published by யாத்ரீகன் under on வியாழன், ஜூலை 27, 2006
இந்த மாமனிதரையும், அவரின் மருத்துவமனையைஉம் கிட்டதிட்ட அனைவருமே கணித்துவிட்டனர்...

தெரியாதவர்கள் வருத்தம் கொள்ளவேண்டாம், அவர் யாரென்று தெரிந்துகொண்டு மரியாதை செய்ய மற்றொரு தருணம் இது..

யாரவர் ?

அறுவைசிகிச்சை செய்யப்பட்ட சுமார் 2 மில்லியன் மக்களிடமும், 1,60,00,000 வெளி நோயாளிகளிடமும் அன்புடன் Dr.V என்றழைக்கப்பட்ட , திரு. கோவிந்தப்பா வெங்கடசாமி அவர்களே இந்த கட்டுரைக்கதாநாயகர், மாமனிதர்.


இந்த 83 வருட இளைஞரே மதுரை அரவிந் கண் மருத்துவமனையை உருவாக்கியவர். சற்று மனதை கனக்கச்செய்யும் செய்தி, சமீபத்தில் காலமாகிவிட்டார் என்பதே.

கண் மருத்துவத்துறையில் அவர் ஒரு சகாப்தம், இலவச கண் சிகிச்சை முகாம்களை 1970லிலேயே நடத்திக்காட்டிய முன்னோடி.

அவரின் அரவிந்த கண் மருத்துவமனையின் செய்ல்பாடுகளை, பல உலகநாடுகளில் உள்ள மருத்துவமனைகள் வந்து படித்துச்சென்று, செயல்படுத்தி வருகின்றன..

சில மாதங்களுக்கு முன்பு கூட Dr.V, கிட்டத்திட்ட அனைத்து தினங்களுக்கும் அரவிந்திற்கு வருகை தந்து வேலை செய்துகொண்டிருந்தார். மருத்துவமனைக்கு சீக்கிரம் செல்பவர்கள், அவர் அங்கே தன் பிரார்த்தனையுடன், அந்த நாளுக்காக ஆயத்தமாவதைக்கண்டிருக்கக்கூடும்... அவர் சொல்லிக்கொள்வதைப்போல..

"..புனிதமான வேலைக்கான சிறப்பான கருவியாய்..."

சமீபத்தில் கோமாவில் சென்ற இவர், அதிலிருந்து மீண்ட உடனே, மருத்துவமனையை சக்கர நாற்காலியில் சுற்றிச்சென்று, வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தாரென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.... என்ன ஒரு அர்பணிப்பு..

தன் வாழ்நாள் முழுவதும், சிறிதென்பதை மறுத்து வந்த Dr.V தனக்குத்தானே எப்பொழுதும் கேட்டுக்கொள்கிறார், "என் பணி என்னை எப்படி ஒரு மேலும் சிறந்ததொரு மனிதனாக மாற்ற முடியும், எப்படி இந்த உலகை சிறந்ததாக மாற்ற முடியும்" என்று.

இத்தகைய தனித்துவமானதொரு நோக்கத்தை முன்னிருத்தி அவரிடம் "உங்களுக்களிக்கப்பட்ட பரிசாக/வரமாக எதை கருதுகின்றீர்கள்" என்று கேட்டதற்கு, "பலர் தங்களுக்கு பார்வை அளித்ததற்கு என்னை வாழ்த்துகின்றனர், என்னைப்பொருத்தவரை, என்னிடமிருப்பதைக்காட்டிலும், பிறருக்கு என்னால் அளிக்க முடிந்ததையே மிகப்பெரும் பரிசாக/வரமாக நினைக்கின்றேன்" என்பதுதான் அவரின் பதிலானது.

அவரின் மருத்துவமனைகளில் நடைபெரும் ஆராய்ச்சிகளை வரவேற்கும் Dr.V, அதே நேரத்தில், நிபுணர்கள் (Consultants) ஏழைகளைப்பற்றி பேசும்போது உடனே சொல்கிறார், "அரவிந்தில் உள்ள எவரும் ஏழைகள் என்ற சொல்லை பயன்படுத்துவதுகூட கிடையாது". "ஏழை என்பது பண்பற்ற சொல், ஏழைகள் என்ற சொல்லை ஒருவர் பயன்படுத்தும்போது, அது அவரை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வது மட்டுமில்லை, அவர் எந்த வகையில் ஏழை என்பதை அவர் கண்களிலிருந்து மறைத்துவிடுகின்றது..."

மேலும், "நீங்கள் இலவச மருத்துவமனைக்கு தனியாக தகுதி பெறத்தேவையில்லை, நாங்கள் யாரையும் கேள்விகள் கேட்பதில்லை, நாங்கள் சில நேரம் பணக்காரர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கின்றோம், நாங்கள் வியாபாரம் நடத்தவில்லை, அவர்களுக்கு பார்வை அளிக்கின்றோம்" என்று அவர் சொல்லும் போது, அவர் செயல்களில் உள்ள உன்னதம் புரிகின்றது.

இதோடு நிற்காத அவர், 1978-ஆம் ஆண்டு "சேவா பவுண்டேசன்" எனும் தொண்டு நிறுவனத்தையும் தொடங்கினார். இந்த நிறுவனம் இபோது நேபாள்,திபெத்,கம்போடியா,பங்களாதேஷ்,எகிப்து,டான்சானியா மற்றும் Gஉஅடெமல போன்ற நாடுகளில் எல்லோராலும் பெறக்கூடிய கண் சிகிச்சையை செய்து வருகின்றது.

இவரைப்பற்றிய சில சுவாரசியமான நிகழ்வுகள்:
Dr.V, சுவற்றில் சாய்ந்தபடி கொஞ்சம் நிலைதடுமாறியவரைப்போல் நின்றுகொண்டிருக்கின்றார், அதைக்கண்ட மருத்துவர் ஒருவர் உதவி செய்ய முயல, அதற்கு அவரின் பதில், "உன்னால் எனக்கு உதவ முடியாது, நான் இந்த சுவற்றை சாய்ந்துவிடாமல் பிடித்துக்கொண்டிருக்கின்றேன்" என்றாராம் :-) , தன்னம்பிக்கையையும் நகைச்சுவையுணர்வோடு.

மருத்துவமனையின் புதிய வாயிற்காப்பான், இவரை அறியாமல், மக்களின் வழியை மறிக்காமல் உட்காருங்கள் பெரியவரே என்று கூறியதும், அதன் படியே வரவேற்பறையில் உட்கார்ந்து விடுகின்றார். அவரை அறிந்தவர்கள் வந்து ஏன் என்று கேட்டதற்கு, "என்னால் இப்போது செல்ல இயலாது என்று கூறி விட்டனர், அதனால் காத்திருக்கின்றேன்" என்றாராம்.

ஒருநாளுக்கான அதிக அறுவைசிகிச்சைகள் (155) செய்த உஷா அவர்களிடம் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி, "கிராம முகாம் ஒன்றை முடித்துவிட்டு 102 டிகிரி காய்ச்சலுடன் மருத்துவமனையில் சேர்ந்த அவரை, காலையில் மருத்துவமனை வந்த Dr.V, "என்ன ஆனது " என்று கேட்க, "காய்ச்சல்" என்ற பதிலை கேட்ட அவர் சிறித்துக்கொண்டே, "என் காய்ச்சல் 104, உன்னுடையது ?" என்று சிரித்துக்கொண்டே கேட்டதுதான் தாமதம், உஷா படுக்கையை விட்டு வேலைக்குச்செல்கிறார். என்ன ஒரு மன/உடல் உறுதி.

ஒரு முறை, டெல்லியைச்சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அரவிந்திற்கு வருகை தந்து, "எனக்கு ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும், இந்த மருத்துவமனை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது, உங்களால் என்னுடன் வரமுடியுமா" என்று கேட்டதற்கு, Dr. V, "உங்களிடம் தான் அதற்கு சாத்தியமான பணம் உள்ளதே உங்களால் முடியும்", என்று பதில்ளளிக்க. அந்த தொழிலதிபர், "எனக்கு வெறும் மருத்துவம்னை வேண்டாம், அரவிந்தின் கலாச்சாரத்துடன் ஒரு மருத்துவமனை வேண்டும், இங்கே மனிதர்கள் விலைமதிக்கப்பட்டவர்களாய் இருக்கின்றார்கள், பணத்தை விட அவர்களே மதிக்கப்படுகின்றார்கள். அவர்களிடம் ஒரு கருணை தெரிகின்றது, எப்படி உங்களால் முடிகின்றது".


இவர் வாங்கிய விருதுகள்:
* இந்தியாவின் உயர்ந்த பத்மஷிரி விருது
* ஹெலன் கெலர் சர்வதேச விருது
* AAOவின் IAPB (International Blindness Prevention) விருது
* உலக சுகாதார மையத்தின் "எல்லோருக்கும் உடல்நலம்" விருது (WHO Award for Health for Al)
*Academy International Blindness Prevention Award
*International Social Entrepreneurship Award
*Medal of the Presidency of the Italian Republic
* Demonstrated the link between vitamin A deficiency and childhood blindness.
* Developed and pioneered the concept of eye camps and safe assembly-line techniques, which have become models for blindness prevention and treatment programs worldwide.
* Personally performed over 100,000 successful eye surgeries.
* While at the Government Erskine Hospital, introduced the following for the blind:
* Eye Camp Programme (1960)
* Rehabilitation Center for the Blind (1966)
* Low Vision Aid Clinic (1968)
* Glaucoma Demonstration Center (1968)
* Ophthalmic Assistant Training Program (1973)
* Rural Rehabilitation for the Blind Project (1973)


இவரின் முக்கியமான ஆராய்ச்சி, மருத்துவம் மற்றும் மேலாண்மை பற்றிய சாதனைகள்:
* Lifetime Service Award from the International Agency for the Prevention of Blindness,

* 1982 Honorary Doctorate from University of Illinois,
* 1985 Lions Clubs’ Melvin Jones Fellow Award,
* 1987 Harold Wit Lectureship, Harvard Divinity School,
* 1991 Pisart-Lighthouse for the Blind Award,
* 1992 International Blindness Prevention Award, American Academy of Ophthalmology,
* 1993 Susrata Award, Asia Pacific Academy of Ophthalmology

இவரின் புத்தக படைப்புகள்
கண் மருத்துவ உலகில் மிக முக்கியமான, புகழ்பெற்ற ஆராய்ச்சிக்கட்டுரைகள்கண் பார்வை பரிபோவதை தடுபதைப்பற்றியதான இவரின் பல கட்டுரைகள் மிக புகழ்பெற்றவை..


வாழ்க அவர் புகழ்

அவரின் நோக்கங்கள் அவரின் குடும்பத்தினரால் சீராக நடைபெறுகின்றது, அவர்களுக்கும் நன்றி/வாழ்த்துக்கள்...

இவரைப்பற்றிய கதையை உங்கள் குழந்தைகளிடம் கூறுங்கள், விதைகள் வீரியமாய் இருக்கட்டும்

அவர் கைகளுக்கான கருவிகளைப்பற்றி சொல்வது போல...
"..சிறப்பாய் தேவைக்கேற்றபடி உருவாக்கப்பட்ட சிறந்ததொரு கருவி"..


நினைவுகூரப்படவேண்டிய மாமனிதர் - பாகம் 2

Published by யாத்ரீகன் under on புதன், ஜூலை 26, 2006
இந்தியாவின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் பிறந்து, நாட்டின் மருத்துவத்துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவரைப்பற்றி முன்னோட்டத்தை சென்ற பதிவில் பார்த்தீர்கள், கண்டுபிடித்தீர்களா ?

புதிர்கள் தொடர்கின்றன....

இவர் மருத்துவராக தன் வாழ்வை தொடங்கியபோது இந்தியாவிலேயே மொத்தம் 8 கண் மருத்துவர்களுக்கு மேல் இல்லை. அச்சமயம் சுமார் 20 மில்லியன் மக்கள் கண் படலத்தால் பார்வையற்று இருந்தனர், இது நம் நாட்டில் சமச்சீரற்ற உணவு மற்றும் மரபணு காரணமாய் இத்தகைய நிலை இருந்தது.

இன்று இவரின் மருத்துவமனை, உலகத்தின் மிகப்பெரும் தனியாள் கண் அறுவைசிகிச்சை சேவை தரும் இடம். இவரினால் ஆர்வமூட்டப்பட்ட இவரின் குடும்பத்தினர், சுமார் 1,488 கிராமங்களை கண்டு கண் மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளனர்.

எல்லாவற்றிலும் ஆச்சரியமானது, இந்த மருத்துவமனை அரசாங்கத்திடமிருந்து ஒரு பைசா உதவியும் பெருவதில்லை, மாறாக அவை சுயசார்புடயவைகளாக இயங்கி வருகின்றது.
இம்மாமனிதரிடம் மற்றுமொரு வியக்க வைக்கும் விஷயம், தான் வாழ்ந்த வரை மருத்துவமனையின் வருமானத்திலிருந்து ஒரு ரூபாய் கூட எடுத்துக்கொள்ளாமல், தன் ஓய்வூதியத்திலேயே வாழ்ந்தது. எத்தகைய மன உறுதி, அதை வாழ்நாள் முழுதும் செயல்படுத்திய விதம்.

இத்தகைய குறைந்த/இலவச சேவையை எப்படி தர முடிகின்றது இவரால் என்று கேள்வி எழுகின்றதல்லவா ? இதோ இப்படித்தான்..

கண்படல அறுவைசிகிச்சை செய்யப்படும் முறையை சிறிது மாற்றி அமைத்தன் மூலம் அவரால் இதை சாதிக்க முடிந்தது. ஒரு மருத்துவக்குழுவுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம், அறுவைசிகிச்சையின் 70 சதவிகித வேலையை அவர்கள் செய்துவிட, மருத்துவர்கள் அதிகமான சிகிச்சைகள் செய்ய முடிந்தது.

இதைவிட மிக முக்கியமானதொரு மாற்றம், அந்த மருத்துவமனை தனக்கு தேவையான "Intra-Ocular" லென்ஸ்களையும், கண் சிகிச்சைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் குறைந்த விலையிலும், மொத்த உற்பத்தி செய்துகொள்ளதொடங்கின.

இத்தகைய குறைந்த செலவுத்திறன் கொண்ட உற்பத்தியை, புதிய கட்டண திட்டங்களுடன் சேர்க்கும்போது, அதன் பலன் எல்லா வகையான மக்களுக்கும் கிடைக்கின்றது.

இவர்களின் "Aurolab" என பெயரிடப்பட்ட உற்பத்திக்கூடத்தில் உருவான பொருட்கள் உலகெங்கிலும் 120 நாடுகளில் கண் மருத்துவர்களாலும், மருத்துவமனைகளாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆக குறைந்த செலவு என்ற பெயரில் தரம் ஒன்றும் குறைவதில்லை, மாறாக பெரிதாக கூடியே உள்ளது. உலகெங்கும் உள்ள உற்பத்தியில், இங்கே மட்டுமே 10 சதவிகித தேவை நிறைவேற்றப்படுகின்றது என்பதை படிக்கும்போது, இந்த சின்ன ஊரிலா என்று நம்ப முடியவில்லை.

இதன் மூலம் முதலீட்டின் மேல் 30 சதவிகித வருவாய் பெருகின்றனர், மருத்துவர் தென் தமிழகமெங்கும் 5 கண் மருத்துவமனைகள் துவங்குகின்றார்.

இந்த மருத்துவமனையின் வெற்றியை, அவை பணத்தால் அவை ஈட்டி வரும் இலாபத்தை கொண்டு மட்டும் முழுதாய் கூறிவிட இயலாது.

இத்தனை வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் பின்னே நிற்பது நரைத்த முடியுடனும், இயல்பை மாறியுள்ள கைவிரல்களும் கொண்ட ஒரு 88 வயது இளைஞர்.


யார் இந்த மாமனிதர் - சென்ற பதிவின் தொடர்ச்சி

நினைவுகூரப்படவேண்டிய மாமனிதர்

Published by யாத்ரீகன் under on செவ்வாய், ஜூலை 25, 2006

1918 அக்டோபர் 1, தூத்துக்குடியில் வடமலபுரம் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக்குடும்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்று கூடுகின்றது....

அந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் ஏதும் இல்லை, ஆனாலும் காலையில் எருமைமாடுகளை மேய்ச்சலுக்கு எடுத்துச்சென்றுவிட்டு, பின்னர் மூன்று மைல்கள் நடந்து பள்ளிக்கூடம் சென்று படிக்கத்துவங்கினான் அந்தச்சிறுவன்.

பல வருடங்களுக்குப்பிறகு, அதே கிராமத்தில் பள்ளிக்கூடம் தொடங்கிய தருணத்தில், அங்கே பென்சிலோ, பேப்பரோ.. ஏன் சிலேட் கூட அவர்களிடமில்லை. ஆனாலும், ஆற்று மணலெடுத்து தரையில் பரப்பி, விரல்களால் அதிலெழுதி பழகத்தொடங்கினான் அந்தச்சிறுவன்.

1944, கடுமையான உழைப்பின் பயனாக, சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியிலிருந்து மருத்துவராக வெளிவருகின்றார். வெளிவந்ததும், இந்திய இராணுவத்தின் மருத்துவத்துறையில் "Obstetrics" பணிபுரிய சேர்கின்றார்.

வாழ்வின் முக்கியமான இந்த கட்டத்தில், வாழ்வின் மாபெரும் முரண்பாடுகள் "Rheumatoid Arthritis" என்று அவருக்கு அடுத்த தடைக்கல்லாக விழுகின்றது. (நல்ல படிப்பு இருந்திட்ட நேரம், வேலை செய்ய முடியாமற் போனது) இந்த நோய் அவரின் கைகளை தாக்க, கிட்டதிட்ட இரண்டு வருடங்கள் மருத்துவமனையிலேயே இருக்கின்றார். பின்னர் இதனால் கை விரல்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன, தங்களின் இயல்பான உருவத்தை இழக்கின்றன, நான்கே வருடங்களில் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அன்று தொடங்கிய வலி அவரை இறுதி வரை விட்டுப்பிரியவே இல்லை..

இத்தகைய நிலையையும் மீறி, மருத்துவக்கல்லூரிக்கு திரும்பி "Ophthalmology"-இல் பட்டம் வாங்கினார். தன் இயல்பை மீறிய கைவிரல்களுக்கு ஏற்றார்போல் தானே மருத்துவக் கருவிகளை உருவாக்கிக்கொண்டு, அதனால் உண்டாகும் கடும் வலியையும் பொருட்படுத்தாமல் கடும் மன-உறுதியுடனும், உழைப்புடனும் கண்படலம் (Cataract ) அறுவைசிகிச்சை பயிற்சி செய்யத்தொடங்கினார். ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 100 அறுவைசிகிச்சைகள் செய்ய அந்த புதிய கருவிகள் அவருக்கு உதவத்தொடங்கின. காலப்போக்கில்

அவர் தனியொரு ஆளாக, 1 இலட்சம் கண் அறுவைசிகிச்சைகள் செய்து, நாட்டின் வியக்கத்தக்க கண்படல அறுவைசிகிச்சை (Cataract Surgeon) நிபுணராக வேகமாக உருவெடுக்கின்றார்.

இத்தகைய அசுரவேகத்தில் 25 ஆண்டுகள் ஓடிவிட, தன் வாழ்வை மட்டுமல்ல, கண் மருத்துவத்துறையை முற்றிலுமாய் மாற்றிவிடப்போகும் மாற்றத்தின் ஊக்கியை கண்டார் - மெடொனால்ட் உணவகத்தின் தங்க நிற வளைவுகள் தான் அவை.

அன்றுதான் அந்த மருத்துவர் யோசிக்கத்துவங்கினார், "மெக்டொனால்ட் பில்லியன் பெர்கர்களையும், கோக்ககோலா பில்லியன் சோடாக்களையும் விற்க முடிந்தால், ஏன் நம்மால் மில்லியன் கண்பார்வை மீட்டுத்தரும் அறுவைசிகிச்சைகளை செய்ய இயலாது" என்று.

ஒரு இளைஞராக அவர் எடுத்த முடிவு, "அறிவாற்றலும்,திறமையும் மட்டுமே இருந்தால் போதாது. அர்த்தமுள்ளதாய் ஒரு செயல் செய்யும் மகிழ்ச்சியும் வேண்டும்". முடிவெடுத்ததும், 65 வயதில் தன் வீட்டை அடமானம் வைத்து, இரண்டே வருடங்களில் 11 படுக்கைகள் கொண்ட கண் மருத்துவமனையை மதுரையில் ஒரு வாடகை வீட்டில் துவங்குகின்றார்.

மருத்துவமனையின் நோக்கம், "இலவசமாக அல்லது குறைந்த செலவில் இயலாத மக்களுக்கு கண்திரை அறுவைசிகிச்சை செய்யவேண்டுமென்பது". அந்த முதல் வருடத்தில் மட்டும், அந்த மருத்துவர் செய்த அறுவைசிகிச்சைகளின் எண்ணிக்கை ஐயாயிரம் (5,000).

இன்று, சுமார் மூவாயிரத்து அறநூறு (3,600) படுக்கைகள், ஐந்து மருத்துவமனைகளில் நாடெங்கும் பரவி, இரண்டு இலட்சத்துக்கும் (2,00,000) மேலான கண் அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துவருகின்றது.

மேலும், அங்கு வரும் 70 சதவிகித நோயாளிகள் ஒன்றுமே அல்லது மிகவும் குறைந்தபட்ச கட்டணத்தையே செலுத்துகின்றனர். இதன் அர்த்தம், ஆயிரக்கணக்கான இயலாத இந்தியர்கள் நாடெங்கிலும் பார்வை பெருகின்றனர். வாழ்க்கையில் ஒளி பெருகின்றனர். வெளிநாடுகளில் 1600 அமெரிக்க டாலர்களுக்கு செய்துவருவதை இவர் வெறும் 10 டாலருக்கு செய்து முடிக்கின்றார்.

இது மட்டுமின்றி இந்த மருத்துவமனைகளின் இத்தகைய குறைந்த செலவில், நிறைந்த தர செயல்பாடு உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளின் வியாபார முன்மாதிரியாய் (Business Model)-ஆக திகழ்கின்றது.

இன்று ஒரு வருடத்தில் 2 மில்லியன் அறுவைசிகிச்சைகள் இந்த மருத்துவமனைகளின் நடைபெருகின்றன.

இத்தனை சாதனைகளுக்கும் உரித்தான அந்த மாமனிதர் மருத்துவர் யார் ? இத்தகைய சிறப்புவாய்ந்த மருத்துவமனை எது ? யோசித்துக்கொண்டிருங்கள்...

அடுத்த பதிவில்....