யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.
கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 1 (எல்லோரா - கயிலாசநாதர் குகைக்கோயில்)

Published by யாத்ரீகன் under , , , , , , on புதன், பிப்ரவரி 27, 2008
சென்ற தொடரில் எல்லோராவின் கலைக்களஞ்சியத்தின் சில முக்கிய இடங்களைப்பார்த்தோம், அவற்றுள் மிக அற்புதமாய் நான் உணர்ந்த ஒரு குகை தான் "கைலாச நாதர் குகைக்கோயில்" . மற்றுமொரு குகையென 16 என்று இலக்கமிடப்பட்டே அழைக்கபடுகின்றது என்ற போதிலும், இது சிறப்பாக கருதப்படுவது, உருவத்தின் பிரமாண்டத்திற்கு மட்டுமின்றி, கலை நயத்திற்கு மட்டுமின்றி, இந்த குகைக்கோயில், அறிவியல் மற்றும் பொறியியல் முறையிலும் நம்மை அசத்த வைக்கும்.

இங்கே பொறுமையாய் காண பல சிறப்பம்சங்கள் உள்ளன என்பதால் இதை தனி தொடராக பதிய நினைத்திருந்தேன் .. படித்து, பகிர்ந்து மகிழ்வோம் :-)

கிழே இருப்பது தான் கைலாச நாதர் கோயில் எனப்படும் குகைக்கோயில். மிக மிக பிரமாண்டமாய் இருக்கும் இதன் உருவத்தை படத்தில் புள்ளியென தெரியும் மக்களை பார்த்தால் தெரியும். இத்தனை பிரமாண்டத்திலும் இதன் கலை நயம் சிறிதும் குறைந்ததில்லை.






சரி இவ்வளவு பில்டப் கொடுத்தாச்சே, அப்படியென்ன இந்த குகையில் ?

ஆச்சர்யம் #1:
எந்த ஒரு குகைக்கோயிலோ அல்லது குகைச்சிற்பமோ எப்படி செதுக்கப்பட்டிருக்கும் ?


முதலில், குகைப்பாறையின் பக்க வாட்டில் தொடங்கி, குடைந்து கொண்டே உள்ளே சென்று சிற்பங்களும், கோயில் போன்ற அமைப்பும் பாறையினுள் செதுக்கத்தொடங்குவார்கள்.


இயல்பான இந்த முறைக்கு நேர்மாறாய் செதுக்கப்பட்டது தான் இந்த குகை. எப்படி ? , ஒரு பெரும் பாறையை, அதன் மேல் அமர்ந்து கொண்டு செதுக்கத்தொடங்கி உள்ளே இறங்கி, மேலிருந்து கீழ் எல்லா சிற்பங்களையும், கோயில் அமைப்பையும் செதுக்கத்தொடங்கினால் எப்படி இருக்கும் ? அப்படித்தான் இந்த குகைக்கோயிலும், அதன் உள்ளே இருக்கும் சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன. மேலோட்டமாய் பார்த்தால் வித்தியாசம் மிகவும் எளிதாய் தெரியலாம், ஆனால் மேலே பாறையை குடைய ஆரம்பிக்கும் போது, எவ்வளவு கிழே செல்ல வேண்டும், ஒவ்வொரு உயரம் கிழே செல்ல செல்ல எவ்வளவு பாறை எடுத்து விட வேண்டும் என கணக்கிடுவதும், என்ன செதுக்கப்போகின்றோம் என உருவகப்படுத்தி பார்ப்பதிலும் உள்ள கஷ்டங்கள் மிக மிக அதிகம். சாதரண முறையில், கரியை வைத்து கோட்டுருவம் வரைந்து விட்டு எளிதாய் செதுக்கி விடலாம் , ஆனால் இங்கே உள்ளே சென்று குடைவதற்கு எப்படி அளவுகளை குறித்துக்கொள்வது ?


இங்கிருந்து தொடங்குகிறது ஆச்சரியம்...




ஆச்சர்யம் #2:

மொத்த கோயிலின் நிலப்பரப்பு எதேன்சில் உள்ள பார்த்தேனான் ஐ விட இரு மடங்கு பெரிது என்ற போதிலும் ஒரே பாறையில் குடையப்பட்ட கோயில் இது.


ஆச்சர்யம் #3:

5 வருடம் , 10 வருடம் என முடியவில்லை இந்த கோயில். கிட்டதிட்ட 100 வருடங்கள் எடுத்திருக்கின்றன. 2 இலட்சம் டன் எடையுள்ள பாறை அகற்றப்பட்டிருக்க வேண்டுமென கணிக்கப்படுகின்றது.





ஆச்சர்யம் #4:

இத்தனை களேபரத்திலும், எவ்வளவு நுணுக்கமாய், இரசித்து இரசித்து செதுக்கப்பட்டிருக்கும் என என்ன வைக்கும் வேலைப்பாடுகள், அங்கிருக்கும் ஒவ்வொரு கல்லிலும் தெரியும்.





உள்ளே நுழைந்ததும் ஆச்சர்யப்பட்டு நிமிர வைக்கும் ஒரு கோபுரம்




சாதரணமாக ஒரு குகைக்கோயிளுக்குள் செல்லும் போது இருட்டு, குறைந்த காற்று, வவ்வால்களின் எச்சம் என பல விடயங்கள் நம்மை அங்கிருக்கும் அழகை இரசிக்க விடாது. ஆனால் இந்த குகையின் வித்தியாசமான குடைந்த முறை, வெளிச்சத்தை மேலிருந்து கொண்டு வருவதால், உள்ளிருக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமாய் இருக்கின்றது.


ஏதோ ஒரு கல்லின் உள்ளே மேலிருந்து ஓட்டை போட்டு, அதனுள் நிறைய சிற்பங்களாய் செய்துவிட்டு, அதனுள் நம்மை இறக்கி விட்டு சென்றது போல் ஒரு உணர்வு .. எங்கு நோக்கினும் சிற்பங்கள் , மேலிருந்து வரும் வெளிச்சம் அத்தனையும் அழகாய் காட்ட .. எனக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை .. அனுபவித்து பார்க்க வேண்டிய தருணம் அது ...



உள்ளிருக்கும் ஒரு கோபுரத்தின் க்ளோஸ் அப் ஷாட் , அதன் வேலைப்பாடுகளைக்காட்ட ..


அடுத்த பகுதியில், உள்ளிருக்கும் சிற்பங்களையும் .. மேலும் சில ஆச்சர்யங்களையும் பார்க்கலாம்...

கற்களின் காவியம் - எல்லோரா - இறுதிப்பகுதி

Published by யாத்ரீகன் under , , , , , on புதன், ஜனவரி 16, 2008
"கற்களின் காவியம் - எல்லோரா" தொடரை தொடர்ந்து படித்து வந்தவர்களுக்கும் , பின்னூக்(ட்ட)மளித்தவர்களுக்கும் மிக்க நன்றி . இத்தொடரில் வந்தவை மட்டும் எல்லோரா அல்ல, இதை விடவும் அறிய , அழகிய சிற்பங்கள் இருந்திருக்கலாம், எங்கள் கண்களில் தென்படாமல் போயிருக்கலாம். பலரை இந்த இடங்களுக்கு போக தூண்டுவதே இந்த தொடரின் நோக்கமாக வைத்து முயற்சி செய்தேன்.

இதன் முந்தைய பகுதிகள் இங்கே ...

முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி
ஐந்தாம் பகுதி

நாம் பார்த்த பிரமாண்டமான சிலைகள் உள்ள குகை இருந்த சுற்றம் எப்படி இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள் ? வேறொன்றும் இல்லாத அடர்ந்த காடாகவா ? சற்றே கிழே பாருங்க. இந்த புகைப்படம் , இதுதான் குகையின் பின்புறம்.



பச்சை பசேலேன்ற புற்களும் , அருகில் பெரிதாய் விழும் நீர்வீழ்ச்சியும் என எவ்வளவு இரசனையை இருக்கின்றது இந்த இடம். இதெல்லாம் பார்க்கும்போது , சத்தியமாய் கூண்டுக்குள் இருப்பது போல ஒரு வீட்டை நினைத்துப்பார்க்க கூட முடிய வில்லை :-)

அடர்ந்த கானகத்தினுள், குதிரையின் லாடத்தைப்போன்ற வடிவத்தில் இருக்கும் ஒரு பள்ளத்தாக்கு . அந்த பள்ளத்தாக்கின் ஓரத்தில் ஒரு மிகப்பெரும் நீர்வீழ்ச்சி, பள்ளத்தாக்கின் கிழே அந்த நீர்வீழ்ச்சியினால் உருவான ஆறு ஓடிக்கொண்டிருக்க, அந்த பள்ளத்தாக்கின் சுவற்றில்தான் அஜந்தா குகைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன ..

கிழே உள்ளது , அந்த குகையின் உள்ள ஒரு பின் வாசல், இந்த வாசற்படிகள் , நீர்வீழ்ச்சியினால் உருவாகும் தடாகத்திற்கு கொண்டு செல்கின்றது .

நீண்ட மலைத்தொடரில், பல வருடங்களாக தொடர்ந்து நடந்த கடின உழைப்பு தான் அஜந்தா - எல்லோரா குகைகள் (சிலைகள் / ஓவியங்கள் ). அருகே நீர்வீழ்ச்சியும், பள்ளத்தாக்கும், அடர்ந்த கானகமும் என நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பார்ப்பவர்க்கு அருமையான சூழல்கள், ஆனால் இதை உருவாக்கியவர்களுக்கு ? அந்த முகம் / பெயர் தெரியாத கலைஞர்களுக்கும், இது சாத்தியமாயிருந்த அனைவருக்கும் நன்றிகள்.

வெளிநாட்டில் எல்லாம் ஊர் சுற்றி விட்டு, நம் ஊருக்கு வந்த உடன், சத்யம் , சிட்டி சென்டர் , பெசன்ட் நகர் , பெரிய விடுமுறை விட்டால் உடனே சொந்த ஊருக்கு போவது என பழக்கம் குறைந்து விட்டாலும், அப்படி இருக்கும் சிலரை இந்தியாவிலும் பார்க்க வேண்டிய இடங்கள் எவ்வளவோ உள்ளது என நினைக்க வைத்திருந்தால் மகிழ்ச்சியே ..

பாட புத்தகத்தில் மட்டுமே படித்தால் வரலாறு சத்தியாமாய் கசக்கத்தான் செய்யும், (அருமையான ஆசிரியர் ஆசான் (நன்றி : இராம.கி ஐயா) இல்லாத நிலையில்). கோடை சுற்றுலாதலங்கள் தவிர்த்து உங்கள் மகன்/ மகள்களை இப்படி சுற்றுலா கூட்டிச்செல்லுங்கள், வெளிச்சத்தை நீங்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினால், இருட்டை விட்டு வெளியே சீக்கிரம் வருவார்கள் ..

புத்தகம் படிக்கும் பழக்கம் , தாய்மொழியை நேசிக்கும் பழக்கம் , மற்றவற்றை மதிக்கும் பழக்கம் என்பதோடு .. உலகத்தை கண்களாலும், செவிகளாலும் , மனதாலும் பார்க்க இத்தகைய பயணங்கள் பயன்படும்.

வாருங்கள் பயணிக்கலாம் .... :-)

பி.கு:
அடுத்த பயணத்தொடர், இதுவும் எல்லோரா குகைகளில் ஒன்றான குகை எண் 16 -ஆன "கைலாசநாதர் கோயில்" எனப்படும் குகைக்கோயில். வாயைப்பிளக்கும் ஆச்சர்யத்தை உருவாகிய குகைக்கோயில் என்பதாலும், நீண்ட தொடர் என்ற அயர்ச்சி தவிர்க்கவும், இது தனியொரு தொடராக பதிவிட முயல்கின்றேன்.

கற்களின் காவியம் - எல்லோரா - 5

Published by யாத்ரீகன் under , , , , , on ஞாயிறு, ஜனவரி 13, 2008
நம் நாட்டிலேயே உள்ள கலைச்செல்வங்களை பலரும் அறியும் வகையில் பகிர்ந்து கொள்ளும் தொடர்களில் , எல்லோரா குகைச்சிற்பங்களைப்பார்த்தோம். பல நாள் கழித்து மீண்டும் இந்த தொடரை தூசி தட்டி , அடுத்த தொடருக்கான வழி வகுக்க வேண்டிய நேரம் இது.

இதன் முந்தைய பகுதிகள் இங்கே ...

முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி


இதற்கு முன் சிவனின் ருத்ர தாண்டவத்தை பார்த்திருந்தோம் , இங்கே பார்ப்பது சிவனின் ஆனந்த தாண்டவம். சிலையின் முகத்தில் இருக்கும் சிரிப்பிலிருந்தே அதை நீங்கள் புரிந்து கொண்டிருபீர்கள்.

குகைக்குள்ளிருக்கும் மிகக்குறைந்த ஒளியுடன் , என்னிடமிருந்த சாதரண பாயிண்ட் அன்ட் சூட் காமிராவும் தன் கடைசி காலத்தில் இருந்ததனால் [சில்கா ஏரியினுள் விழுந்ததால் :-( ] , இந்த புகைப்படம் பயங்கர ஆட்டம் கண்டிருக்கின்றது மன்னித்துக்கொள்ளுங்கள்.

எட்டு கரங்களுடன் நடனமாடும் சிவன். ஒவ்வொரு கையிலிருக்கும் பொருளுக்கும், முத்திரைக்கும் பல விளக்கங்கள் பல இடங்களில் படித்திருப்போம், அவை மிக அழகாக வடிக்கப்பட்டிருந்தது. முக்கியமாய் தலையில் சூட்டியிருக்கும் கிரீடம், மிகவும் நுணுக்கமாய் கலையம்சம் கொண்டதாய் செதுக்கப்பட்டிருக்கின்றது.

சுற்றி இருக்கும் மற்ற கடவுளர்கள் ஒவ்வொருவரும் பல வகையான வாகனங்களில் இருப்பதும், சிலர் இசைக்கருவிகள் மீட்டுவதும், சிவனுக்கு சாமரம் வீசுவதும் என நீள்கின்றது இந்த சிற்பம்.


நாம் கோயில் வாசல்களில் துவாரக பாலகர்கள் எனப்படும் வாயில் காவலர்களின் சிலைகளை பார்த்திருப்போம். என்றாவது யோசித்திருக்கிறீர்களா ஏன் பெண் சிலைகள் வாயிற் காவலர்களாய் இல்லையென்று ?

இங்கே கிழே இருப்பது அங்கிருக்கும் லிங்கத்தின் சன்னதியில் வாயிற் காவலர்களை இருக்கும் நந்தினிகள் அங்கிருக்கும் துவாரக பாலர்களுக்கு சிறிதும் குறையாதவர்கள். நாங்கள் இவர்களின் முட்டியளவு கூட இல்லை .



இவர்களின் சிகையலங்காரத்தை பாருங்கள் எவ்வளவு அலங்காரங்கள் , சிலையை விட காதணியே பெரிதாய் இருக்கின்றது ;-)

இவ்வளவு பிரமாண்டமான குகைச்சிற்பங்கள் இருக்குமிடத்தை காக்கும் நிஜ காவலர்கள் எவ்வளவு கம்பீரமாய் , கவனமாய் இருக்க வேண்டும் , காவலிருக்கும் மற்ற காவலர்களுடன் எவ்வளவு Synchronize செய்து காவல் செய்ய வேண்டும். அவையெல்லாமே இந்த சிங்க காவலர்கள் செய்து விடுகின்றார்கள்.

எப்படி என்று கேட்கிறீர்களா ? ஒரு வாயிலில் சிங்கத்தின் சிலையருகே இருந்து இன்னொரு வாயிலைப்பார்த்தால் எந்த ஒரு தூணும் பார்வையை மறைக்காமல் இதற்கு குறுக்கே (Diagonal) இருக்கும் வாயிலில் உள்ள சிங்கத்தை பார்க்க இயலும். இத்தனை பருமனான , உயரமான தூண்களை , பரந்து விரிந்த இடத்தில் நிறுவும் போது இத்தகைய விஷயத்தையும் கருத்தில் கொண்டு செதுக்கியிருப்பது அவர்களின் கலை நுணுக்கம் மட்டுமின்றி, அறிவியல்/பொறியியல் அறிவையும் ஆற்றலையும் காட்டுகின்றது.



இங்கே கீழிருப்பது இந்திரனின் மனைவியான இந்திராணியின் மரம். ஒரே மரத்தில் பல வகையான கனிகளும் , அதை பார்த்து உண்ண வந்திருக்கும் மந்திகளும் , பறவைகளும் என உங்களால் கண்டு பிடிக்க முடிகின்றதா ?



இந்தரலோகம் என பெயரிடப்பட்ட குகையொன்று , அதன் உச்ச கட்டத்தில் மிகவும் வண்ண மயமாய் இருந்திருக்க வேண்டும் .. அதிலிருக்கும் தூண்களின் வேலைப்பாடுகளும் , இன்னும் மறையாமலிருக்கும் வண்ணங்களும் என இன்னும் நம்மை பிரமிக்க வைக்கின்றது. இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்பதற்கு முன் இந்திரலோகத்தில் எங்கள் சீனி :-)



80 டன் எடையுள்ள கற்கள் மிக உயரமுள்ள கோபுரத்தின் மேலிருப்பதும் , ஆயிரம் வருடங்களில் அழியாத வண்ணங்களும், நேரத்தை துல்லியமாய் கணக்கிட சூரிய கடிகாரத்தை கோயிலின் / தேரின் சக்கரமாய் வடிவமைப்பது .. என .. சொல்லிக்கொண்டே போகலாம் , இந்த நாட்டில் இருந்த அறிவும், ஆற்றலும், கலை நுணுக்கமும் .. எங்கே போனது அவையெல்லாம் ? பரம்பரை அறிவாய்கூட வழி வரவில்லையா ? இரண்டு தலை முறைக்கு முன் என் முன்னோர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என இப்பொழுதுதான் கேள்வி எழுகின்றது , அதற்கு முழுதாய் பதிலளிக்கவும் என் தந்தையால்/தாயால் முடியவில்லை ..

மிகப்பெரும் அடையாளங்களை விட்டுச்சென்ற தலைமுறைக்கே இந்த கதி என்றால் , வெறும் கண்ணாடிக் கோபுரங்களும் , வசூல் வேட்டைக்கென உருவாகும் ஆன்மீக தங்கக்கோபுரங்களும் மட்டும் உருவாக்கிக் கொண்டிருக்கும் நம் தலைமுறையின் அடையாளம் எப்படி இருக்கும் ?

கற்களின் காவியம் - எல்லோரா - 4

Published by யாத்ரீகன் under , , , , , on திங்கள், டிசம்பர் 10, 2007
ருத்ர தாண்டவத்தில் தொடங்கினோம் , அடுத்து திருமண நிகழ்ச்சியை பார்த்தோம் .. இப்போ அதுக்கு அடுத்த கட்டம் , திருமணத்துக்கு பிறகு நடக்கும் மணமக்களுக்கிடையே யான விளையாட்டுக்களை குறிக்கும் வகையில் இருக்கும் சிலையைப்பார்போம் ...

இடம்:
முந்தைய சிலைகள் இருக்கும் அதே குகை ..

உயரம்:
முன்பு பார்த்த சிலைகளின் உயரம்

சூழல்:
திருமணம் முடிந்த பிறகு மணமக்களிடையே நிகழ்த்தப்படும் சிறு சிறு விளையாட்டுக்களின் பகுதியாக , அவரவர் பூதகணங்கள் சூழ சிவனும் ஷக்தியும் தாயம் உருட்டி விளையாடுகிறார்கள். விளையாட்டில் ஷக்தியிடம் சிவன் தோற்றுப்போகிறார். விளையாட்டு முடிந்தபின் எழுந்து செல்ல முயற்சிக்கும் போது, சிவன் ஷக்த்தியின் கரம் பற்றி இழுத்து இன்னொரு முறை விளையாடலாம் என்று அழைக்கிறார்.

சிலையின் விபரம்:
சிவனின் பக்கமிருக்கும் பூதகணங்கள் சிவன் தோற்றதால் வருத்தமுடன் இருப்பதும் , ஷக்தியின் பக்கமிருக்கும் பூதகணங்கள் தங்கள் பக்கம் வென்றதால் மகிழ்வாய் இருப்பதும் தெரிகிறதா ?

இரு பக்கமும் பானைகள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்திருப்பது , இன்னும் பின்பற்றி வரும் பழக்கங்களுள் ஒன்று என்று நினைக்கும் போது ஆச்சர்யமாய்த்தான் இருக்குது .. எவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாய் ஒரு வழக்கத்தை பின்பற்றுகின்றார்கள் என்று .. (அர்த்தம் புரிந்து பின்பற்றுகின்ற்ரர்களா என்பது வேறு விஷயம் ..)

எழுந்து செல்ல முயற்சிக்கும் ஷக்த்தியின் கையை பிடித்திழுக்கும் சிவனின் குறும்பான புன்முறுவல் அட்டகாசம் , இவ்வளவு வெளிப்படையாய் கடவுள்களின் புன்னகையை/புன்முறுவலை எங்கேயும் பார்த்ததில்லை... பார்த்ததும் நம்மை அறியாமல் நமக்கே ஒரு சிரிப்பு வந்து விடுகின்றது.. ஒரு சந்தோஷ உணர்வு ..

எதிர்பாராமல் நிகழ்ந்த இச்சம்பவத்தால், நாணிக்கொள்ளும் ஷக்தி ... அட எவ்வளவு அழகாய் வெளிப்பட்டிருக்கின்றது அந்த வெட்கம் , புன்னகை, சந்தோஷம் ..

இந்த உணர்வுகளை, மேலும் உன்னிப்பாக கவனிக்க , கிழே உள்ள படங்களை பாருங்கள் .



இந்த படத்தில் , ஷக்தியின் ஆபரணம் ஒன்றான ஒரு ருத்ராட்ச மாலையை கவனியுங்கள், ஒவ்வொரு ருத்ராட்ச்சத்தையும் சிறிதும் பிசிறில்லாத உருண்டைகளாய் , மொத்த மாலையும் பிறண்டு இருப்பதையும் அச்சு அசலாய் வடித்திருக்கிறார்கள் ..

கிழே ஒரு பக்கம் பிரம்மாவும், மறுபுறம் விஷ்ணுவும் இருக்கிறார்கள்

எல்லாவற்றையும் விட .. மற்றுமொரு குறிப்பிடத்தக்க விஷயம் .. கிழே நடுவில் இருக்கும் சிவனின் நந்தியும் , அதைச்சுற்றி விளையாடும் பார்வதியின் பூதகணங்களும் ..


கூர்ந்து கவனியுங்கள், எல்லோரும் விளையாட்டில் மும்முரமாய் இருக்கையில், சிறு குழந்தைகளாய் உருவகப்பட்டிருக்கும் ஷக்த்தியின் பூதகணங்கள் , தங்கள் பக்க வெற்றியை கொண்டாட , சிவனின் நந்தியை சீண்டுவதை பார்க்கலாம் ..

நந்தியின் பின்புறமுள்ள பொடியன் ஒருவன் அதன் வாலைக்கடிப்பதும்,

முன்புறமுள்ள ஒருவன் அதன் கால்களை பிடித்து இழுப்பதும்..

மேல்புறம் இருக்கும் ஒருவன் , அதன் கொம்புகளை பிடித்து திருகுவதும் ...

கோபம் கொண்டு மிரளும் நந்தி, காலருகே இருக்கும் ஒரு பொடியனை , மிதிப்பதும் ..

ஒரு முழு குதூகலமான கல்யாண சூழலை , மணமக்கள் , அவர்கள் இருவரின் பக்கம், அங்கிருக்கும் குழந்தைகளின் சேட்டை , அங்கிருக்கும் செட்டப் ... எப்படி அத்தனையும் கவனித்து , நிதானமாய் திட்டமிட்டு , அருமையாய் நிறைவேற்றி இருக்கிறார்கள் ..



மேலே இருக்கும் கடைசி படம், நாங்கள் குகையினுள் இருக்கும்போது பார்க்கும் ஒரு கோணம் .. சிலைகளின் உயரம் தான் உங்களுக்கு தெரியுமே, குகையின் உயரத்தையும், அதிலிருக்கும் தூண்களின் உயரத்தையும் கண்பிக்கவே இந்த புகைப்படம் ..

இனி அடுத்து வரும் பகுதிகளில் , வர்ணனைகள் அதிகமின்றி .. அழகான சிலைகளின் படங்கள் நிறைய பகிர்ந்து கொள்கின்றேன் ..

கற்களின் காவியம் - எல்லோரா - 3

Published by யாத்ரீகன் under , , , , , on திங்கள், டிசம்பர் 10, 2007
எல்லோராவின் குகைகளில் , இந்த குகை மிகவும் முக்கியம் வாய்ந்ததாய் கருதுகிறேன் .. காரணம்.. நான் இப்பொழுது சொல்லிக்கொண்டிருக்கும் சிலைகளின் அளவை பார்த்தீர்கள் , அப்படியானால் இவை செதுக்கப்பட்டிருக்கும் / குடையப்பட்டிருக்கும் குகையின் அளவை கற்பனை பண்ணிப்பாருங்கள் ... இருப்பதிலேயே மிக மிக பிரமாண்டமாய் இருக்கும் குகை இது. இதிலிருக்கும் சிலைகளும் குகையின் உயரத்திற்கேற்ப இருப்பதால் .. மிகவும் அட்டகாசமாய் இருக்கின்றது .. உள்ளே நுழையும் போது நாம் மிகச்சிறியதாய் தோனுகின்றோம்

எல்லோரவில் செதுக்கப்பட்டிருக்கும் கற்களான காவியங்களை பகிர்ந்து கொள்ளும் தொடரின் அடுத்த பகுதி இது ..

முதல் பகுதி இங்கே

இரண்டாவது பகுதி இங்கே

சென்ற முறை வைத்த சஸ்பென்ஸ் , நான் எந்த ஊர் என தெரிந்தவர்களுக்கு ஒன்றுமில்லாததாக இருக்கும் :-) .. குறைந்த பட்சம் புதியதாய் இந்த பதிவிற்கு வருபவர்களுக்கு .. நச்சென்ற கதைகளுக்கும் , தொடர் கதைகளுக்கும் இடையில் கொஞ்சமாவது சுவாரசியம் அளிக்க வேண்டுமல்லவா .. ;-)

இம்முறை பார்க்கப்போவது "சிவன் - ஷக்தி திருமண வைபவம"

பார்க்கப்போவதற்கு முன் படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி , இந்து மத திருமணங்களில் பெண் ஆணுக்கு எந்த பக்கம் நிற்பார்கள் ? (மற்ற மத திருமணங்களில் எப்படி ?) இதை நான் கொஞ்சமும் முக்கியத்துவம் கொடுத்து கவனித்ததில்லை .. இந்த சிலைகளை கவனிக்கும் வரை...


சூழல் :
சிவன் - ஷக்தி திருமணம் , விஷ்ணு - பிரம்மா முன்னிலையில் , அவரவர் பூதகணங்கள் புடைசூழ ...

சிலையின் விபரங்கள்:

சிவனும் ஷக்தியும் கைகோர்த்து திருமண மேடையில் இருக்கும் நிகழ்வு இது..

கிழே பிரம்மா யாகம் வளர்த்துக்கொண்டிருப்பதும் , இடது புறம் விஷ்ணு இருப்பதும் (விஷ்ணு என்று கையிலிருக்கும் சங்கு சக்கரத்தை வைத்து கண்டுபிடிக்க முடியும் :-) தெரிகின்றதா ?

மேலே முதல் வரிசையில் தேவர்களும், அதற்கு அடுத்த வரிசையில் யக்ஷர்களும் (யானையின் மீது இருப்பவர்கள்) .. மலர் தூவி வாழ்த்த ..

மணமக்களின் நகைகளும், மணமகளின் நாணமும் மிக அருமையாய் வந்திருக்கும் சிலை ..

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் விரல்களும்,மூக்கும், கண்களும் மிக மிக நுணுக்கமாய் செதுக்கப்பட்டிருக்கின்றது ..

சிலையின் மொத்த பிரமாண்டத்தை காண்பிக்கும் வகையில் எடுத்த புகைப்படம் ஒன்று கிழே

இந்த சிலையில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயம் ஒன்று உள்ளது.. முன்பு பார்த்த சிலைகளின் Detail பார்த்தோமே அது தவிர வேறு எதாவது உங்கள் கண்களுக்கு தென்படுகின்றதா ?

இல்லையெனில் , பதிவின் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதிலை வைத்து இந்த புகைப்படத்தை பாருங்கள் .. எதாவது புரிகின்றதா ?



இன்னும் இல்லையெனில், கிழே உள்ள புகைப்படத்தை பாருங்கள், மேலே உள்ள புகைப்படத்தோடு ஒப்பிட்டுப்பாருங்கள் ..


இப்பொழுது வித்தியாசம் தெரிகின்றதா ? .. எந்த கற்சிலைகளை பார்த்தாலும் எனக்கு எழும் முதல் கேள்வி.. இதில் தவறு நேர்ந்தால் என்ன செய்வார்கள் என்று .. தவறு என்று நான் நினைத்துக்கொண்டிருப்பது அங்க ஹீனமான ஒரு சிலையைத்தான் ,

அது மட்டும் தவறு அல்ல .. என்னும் எத்தனையோ வகையான தவறுகள் உள்ளன என புரிய வைத்த சிலைகள் இவை ..

இரண்டு சிலைகளும் அற்புதமான படைப்புகள் என்பதில் சந்தேகமே இல்லை .. ஆனால் சிறிய தவறோன்று நிகழ்ந்ததால் ஒன்று மூலையில் கடாசி இருப்பதும், மற்றொன்று கண்ணைக்கவரும் வண்ணம் இருப்பதும் .. சத்தியமாய் ஒப்புக்கொள்ள முடியவில்லை ..



மேலே உள்ள இரு புகைப்படங்களில் இருக்கும் இந்த சிலையில் , ஷக்தியின் நாணத்தை காண்பிக்க , உடல் வளைத்து , தலை சாய்த்து, கால் கட்டை விரலால் மண்ணைக்கீறும் வகையில் செதுக்கப்பட்டிருப்பதை காணுங்கள் ..

யோசித்துப்பாருங்கள் , எவ்வளவு உழைப்பிர்க்குப்பின் தவறை மற்றவர் வந்து சுட்டிக்காட்டினால் :-(

நல்ல வேலை தவறுக்காக சிலையை சிதைக்காமல் விட்டார்களே, அது போதும் ....

அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்ளப்போவது,சந்தோஷம் பொங்கி வழியும் காட்சி கொண்ட ஒரு சூழலின் சிலை அமைப்பு ॥ (Offcourse தவறுகள் ஏதுமின்றி :-)



கற்களின் காவியம் - எல்லோரா - 2

Published by யாத்ரீகன் under , , , , , on ஞாயிறு, டிசம்பர் 09, 2007
மேலும் சில எல்லோரவின் மிக அழகான சிலைகளை பற்றிய படங்களும் குறிப்புகளையும் பதிவதாக சொல்லியிருந்தேன், இதோ அதன் தொடர்ச்சி ....

பகுதி ஒன்று - 1 இங்கே

இங்கே நாம் அடுத்து பார்க்கப்போவது "சிவனின் கையிலை மலை தூக்கும் நிகழ்ச்சி". சிவனின் ருத்ரதாண்டவத்தின் நேர் எதிரே அமைந்திருக்கும் சிலை இது. உருவத்திலும், பிரமாண்டத்திலும்,நுணுக்கத்திலும் முந்தின சிலைக்கு சற்றும் குறைவில்லாதது. சென்ற சிலையில் இருந்த சூழலில் மூன்றே கதாபாத்திரங்கள் தான், ஆனால் இங்கே பலர் இருப்பதால், நிகழ்வை காட்ட வந்த கலைஞனுக்கு நுணுக்கமாய் பார்த்து பார்த்து வடிக்க எத்தனையோ விடய௩கள் இருக்கின்றன ... நாங்கள் கவனித்தவற்றை பார்ப்போம்....

சூழல்:
சிவனும், ஷக்தியும் கயிலை மலையில் அமர்ந்திருக்க, இருவரின் பூதகணங்கள் சூழ்ந்திருக்க, இராவணன் சிவனின் மேல் கொண்ட அதீத பக்தியால் சிவனை கயிலை மலையோடு இலங்கை கொண்டு செல்ல முயற்சிக்கிறான். ஷக்தி பயப்பட, சிவன் தன் ஒர்றைக்காலால் மலையை அழுத்த இராவணனால் பாரத்தை தாங்க இயலாமல் தவிக்கின்றான்.

விபரங்கள்:
மேலிருந்து வருவோம் ...

இராவணன் கயிலையை அசைத்தும், பயந்த சில சிவகணங்கள் சிவனை வணங்குவதும், பலர் கீழே இராவணனுக்கு நிகழ்ந்திருப்பதை கண்டு வியந்து சிரிப்பதும் என சிலையில் மேலே உள்ளன ..

சில பூதகணங்கள் நடக்கும் செயலை கண்டு வியந்து போய் நெஞ்சில் கைவைத்து வியப்பை தெரிவிப்பதும் ...

ஷக்தி பயன்திருப்பதும், அவரை அமைதிப்படுத்த சிவன் ஷக்த்தியை அணைத்துக்கொண்டு தன் பக்கம் இழுத்துக்கொள்வதும்..

சிவனின் வலது கால் கிழே அழுத்தியிருப்பதை போல் தோற்றம் கொடுப்பதும்

பாரம் தாங்காத இராவணன் முகத்தில் உள்ள வலி தத்ரூபமாய் இருந்தது, மேலும் கூடின எடையை தாங்க இயலாமல் அவன் கழுத்து திரும்பி முகம் முதுகுப்பக்கம் வந்திருப்பதையும் காணலாம்

ராவணன் கயிலையை அசைத்ததை நாம் உணர, அங்கிருக்கும் கற்கள் இடம் அசைந்து இருப்பதை போன்று செதுக்கப்பட்டிருப்பதை காணுங்கள் ..



ராவணனின் இடதும் வலதும் உள்ளது ஷக்தியின் பூதகணங்கள்..

சில பூதகணங்கள் ராவணனின் நிலை கண்டு எள்ளி நகையாடுவதும் ॥ குறிப்பாய் ராவணனின் நீட்டியிருக்கும் வலது காலின் அருகில் இருக்கும் பூதகனத்தின் முகத்திலும் , கைக்குரிப்பிலும், முகம் சுழித்து நாக்கை துருத்தி கிண்டல் பண்ணுவது தெளிவாய் தெரியுது .....

அந்த பூதகனத்திற்கு மேல் உள்ளதுகள் ராவணனின் மேல் கற்களை வீசுவதும்,

அதற்கு பின் புறம் இருப்பவன் கையில் பாம்பை வைத்து ராவணனை பயமுறுத்திவிலக்க முயற்சிப்பதும் (இதை இரண்டாவது படத்தில் காணலாம்)


Shivas poothaganas laughing and teasing at raavana, originally uploaded by யாத்திரீகன்

ராவணனின் இடது புறமுள்ள பூதகணங்களில் ஒன்று, திரும்பிக்கொண்டு , தன் ஆடையை விலக்கி , பின்புறத்தை காட்டி அவனை அவமானப்படுத்துகின்றது॥ :-)

அதற்கு அடுத்து உள்ளது கையில் ஒரு குச்சி வைத்துக்கொண்டு ராவணனை அடிக்க, அதற்கு பின்புறமுள்ளதுகள் சங்கு, மத்தளம் போன்ற வாத்தியங்கள் உரக்க வாசித்து ராவணனை பயமுறுத்த முயற்சிக்கின்றன ...


சிலையின் உயரம், ருத்ர தாண்டவத்தின் உயரத்தை போலவே பிரமாண்டத்துக்கு குறைச்சலில்லை

இப்படி அசந்து போகச்செய்த படைப்புகளின் வரிசையில் ஒன்று இந்த சிலை ....

அடுத்து பார்க்க போவது, எங்கள் ஊரில் புகழ் பெற்ற ஒரு நிகழ்வுக்கான சிலை :-)

கற்களின் காவியம் - எல்லோரா - 1

Published by யாத்ரீகன் under , , , , , on சனி, டிசம்பர் 08, 2007
எல்லோரா குகைச்சிற்பங்கள் ! நம்மில் பலரால் வரலாற்று புத்தகத்தில் மட்டுமே படிக்கப்பட்டு மறக்கப்பட்ட இடம். அசோகர் மரம் நட்டார் என்பதோடு, அஜந்தா எல்லோரா சிற்பங்களுக்கு புகழ் போனது என படித்து மட்டும் கண்ணில் காணாமல், அதன் அழகு பலருக்கு தெரியாமல் போன இடம்.

சில மாதங்களுக்கு முன், அஜந்தா, எல்லோரா குகைகளுக்கு சென்ற பயணத்தின்போது எடுத்த படங்கள், இங்கே செல்ல வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களுக்காகவும், இந்தியாவிலிருந்தே இங்கே போகாமலிருப்பவர்களுக்கும் இந்த பதிவுத்தொடர்.....

(டெம்ப்லெட்-ஐ) வார்புருவை சரி படுத்தி மறுபடியும் தமிழ்மணத்தோடு இணைய உதவி புரிந்த சி.வி.ஆர்-க்கு நன்றி..


இந்த படத்திலிருக்கும் சிவனின் ருத்ர தாண்டவத்தை பற்றியே ஒரு பதிவுத்தொடர் எழுதலாம், அந்த அளவுக்கு என் உள்ளம் கொள்ளை கொண்ட சிலை. மிகவும் பிரமாண்டமாய், தத்ரூபமாய், உயிருடன் எழுந்து வந்துவிடுமோ என ஒரு நொடியாவது நினைக்க வைத்த சிலை. இத்தனை பிரமாண்டத்திலும், ஒவ்வொரு சிறிய விஷயங்களையும், நுணுக்கமாக கவனித்து கவனித்து செதுக்கியிருக்கும் சிலை. வழக்கமான நகைகள் மட்டுமின்றி, அந்த காட்சியின் உணர்வுகள், அந்த காட்சியில் இருக்கும் ஒவ்வொரு கதா பாத்திரத்தின் பங்கும்.. என பொன்னியின் செல்வனின் வரும் கல்கியின் வர்ணனை போன்று, மிக மிக அனுபவித்து, விலாவரியாய் செதுக்கப்பட்டிருக்கும் விதம் அட்டகாசம்.

இப்பொழுது இந்த சிலையின் விவரத்தை பார்ப்போம் ..

சூழல்:
கடவுள் தவிர யாராலும் தன்னை கொல்ல முடியாது என்று வரம் வாங்கிய அசுரன் ஒருவனின் வாதம், ஷக்தியின் முன்னிலையில். அந்த அசுரனின் வரத்தில், இரவிலோ, பகலிலோ மரணம் நேரக்கூடாது என்றும், நிலத்தில் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் தானே உருவாக வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றான்.

அசுரனின் அட்டகாசம் தாங்காமல் வரும் சிவன், யானை ஒன்றின் தோலை வைத்து சூரியனை மறைத்து, பகல்-இரவு இரண்டுமிலாமலும் உருவாக்குவதை சிவனின் தலைக்கு மேலே சென்றிருக்கும் இரண்டு கைகள் பாருங்கள். படத்தின் இடது மேல் மூலையில் யானையை காணலாம்.

தாக்க வரும் மற்ற அசுரர்களை அழிப்பதை இடது கையில் காணலாம்.

வலது கையோன்றில் உள்ள வாளை கொண்டு அசுரனை அழிப்பதும், அவன் இரத்தம் சிந்தாமளிருக்க அதன் கிழே ஒரு கை கொண்டு பாத்திரம் வைத்து பிடிப்பதும்,

சிவனின் பெருமையை உணர்ந்த நிலையில், அசுரன் கை தொழுது வணங்குவதும்..

சிவனின் ருத்ர தாண்டவத்தை கண்டு பயந்த நிலையில் உள்ள ஷக்தியும், அதை பிரதிபலிக்கும் ஷக்தியின் முக உணர்வுகளும் ..

சிவனின் புலித்தோலாடையும்,

எல்லாவற்றிலும் மேலாக, சிவனின் முகத்தில் உள்ள கோபம், இந்த ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடே அந்த சிலையின் மொத்த சிறப்பையும் உணர்த்திவிட்டது. சிவனின் முகத்தை சற்றே பக்கவாட்டில் சென்று நேருக்கு நேர் பார்த்தால், நம்மைப்பார்த்து கோபப்படுவது போன்ற உணர்வு ..
கிழே உள்ள படம் அப்படிப்பட்ட ஒரு கோணத்தில் எடுத்தது। நான் சொல்வது உண்மையா என்று நீங்களே தெரிந்து கொள்ளலாம் ॥



இந்த சிலை என்ன உயரம் இருக்குமென்று நினைக்கிறீர்கள் ? கிழே பாருங்கள் ....


இராச இராச சோழன்

Published by யாத்ரீகன் under , , , , , on செவ்வாய், மே 08, 2007
மாமன்னன் இராச இராச சோழன்



இராசேந்திர சோழன் பற்றிய குறிப்பு (பொன்னியின் செல்வன் நியாபகம் வருகின்றதா ?)



இராசேந்திர சோழனின் கீழ் பரவிய சோழ சாம்ராஜ்யம், கடல் கடந்து நாடு கடந்து




மாளிகைமேடு - முதலாம் இராசேந்திர சோழனின் ஆட்சிக்குப்பின்னால் இருந்த சோழர்கள் வழுவிழந்த நிலையில், படையெடுத்து வந்த பாண்டிய மன்னர்களால் இடித்து தள்ளப்பட்டது என்று கூறப்படுகின்றது. சுட்ட செங்கல்கள் மூலம் கட்டிய பெரும் அரண்மனை சுவர்கள், அங்கிருந்து கிடைத்திருக்கும் பல வெளிநாட்டு பழங்கால பொருட்கள் என தன்னுள் ஒரு மாபெரும் இரகசியத்தை பூமித்தாய் புதைத்து வைத்திருக்கும் மற்றுமொரு இடம்.




இராச இராச சோழனின் முத்திரை பத்திரம், இதுவே தஞ்சை பெரிய கோவிலை இவர்கள் எழுப்பியதற்கானதொரு மிகவும் முக்கியமான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னம்.

மேலும் சுவையான தகவல்கள்






கங்கை கொண்ட சோழபுரம் - ஒரு காலவெளிப்பயணம்

Published by யாத்ரீகன் under , , , , , on செவ்வாய், மே 08, 2007
வடக்கே கங்கை கரையோரம் கொண்ட தன் வெற்றியை கொண்டாட பேரரசன் மகன், உருவாக்கிய சோழர்கால தலை நகரமான கங்கை கொண்ட சோழீச்வரம்.
சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள். முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க



தன் தந்தையின் படைப்பான பிரகதீஸ்வரர் கோவில் போன்ற தோற்றத்தில் உருவாக்கிய கங்கை கொண்ட சோழபுர கோவிலின் நுழைவாயிலில்.

தஞ்சை பெரிய கோவிலைப்போலவே இங்கேயும் உள்ள ஒரே கல்லில் உருவான நந்தி. இங்கே வழிபாடு அவ்வளவாய் இல்லாததும் ஒரு விதத்தில் நல்லது, இந்த நந்தி சிலையில் உள்ள வேலைப்பாடுகளை அருகே இருந்து இரசிக்க முடிந்தது.


தஞ்சை கோவில்களுள் உள்ள துவாரகபாலர்கள் சிலைகளின் அமைப்பு மிகவும் பிரசித்தி பெற்றவை, இதனருகே நாங்கள் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில் நண்பன் ஒருவன் எடுத்த புகைப்படம். ஆறடி உயரம் உள்ள நாங்கள் எங்கே, அந்த சிலையின் உயரம் எங்கே !!!

எங்களுள் எழுந்த மிகப்பெரும் கேள்வி, யாருக்காவது விடை தெரியுமா ??

கேள்வி: கோவிலை கட்ட தீர்மானித்த உடன், எங்கிருந்து ஆரம்பித்திருப்பார்கள் ? அவ்வளவு பிரமாண்ட சிலைகளை எங்கிருந்து செதுக்க துவங்கிருப்பார்கள் ? கோவிலின் வெளியே செதுக்க துவங்கியிருந்தால், தூண்களை நிறுவுவதற்கு முன் உள்ளே கொண்டு வந்திருக்க வேண்டும், இப்படி பல கேள்விகள் !!!!

ஒரு கால இயந்திரம் இருந்தால் , தஞ்சை ஆண்ட சோழர்கள், பல்லவர்கள் காலம், பாண்டியர்கள் காலம், விஜயநகர காலம், ஹம்பி நகரம் செழிப்பாக இருந்த காலம் என்று சுற்றி வரவேண்டும் !!!!


பண்ணிரண்டரை அடி உயரம் உள்ள கோபுர கலசம்


வெயில் கொடுமை !!! :-)


பெரிய கோவிலைப்போலவே உள்ள கங்கை கொண்ட சோழபுர கோவில்


நடராசர் சிலையின் முகத்தில் உள்ள புன்சிரிப்பையும் நளினத்தையும் பாருங்கள், இதை செதுக்கியவர் எவ்வளவு அனுபவித்து செய்திருக்கவேண்டும்.


கோபுரத்தின் மேலே இருந்த பல சிற்பங்களில் ஒன்று, 12X புகைப்பட கருவி பயன்படுத்தியதன் பயன்.


கோவிலின் மேலே இருந்த அதிகம் கவனிக்கப்பட்டிராத ஒரு பெண்ணின் சிலை, எந்த நாட்டுப்பெண்ணோ !!! இது போல் இங்கிருக்கும் "வடபுரமிருந்த சிவன் மன்மதனை எரிக்கும்" சிற்பம் மிகவும் அழகானது என்று கேள்விப்பட்டிருந்தோம், ஆனால் அதை இறுதி வரை கண்டு பிடிக்க முடியவில்லை :-(

கோபுரத்தின் மேலிருந்த பட்டைகள்.

தஞ்சை - ஒரு காலவெளிப்பயணம் - 3

Published by யாத்ரீகன் under , , , , , on செவ்வாய், மே 08, 2007
சமீபத்தில் தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள். முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க




பெரிய கோவிலின் நுழைவாயிலில் உள்ள கோபுரம், ஒரு அற்புதத்தை காண தயாராகுங்கள்


நம் முன்னோரின் அறிவியல்/கட்டிடத்திறன் உலகப் புகழ் பரப்பும் தஞ்சை பெரிய கோபுரம். இதன் உச்சியில் இருப்பது 80 டன் எடையளவு கொண்ட இரு கற்கள் (40+41), இதை எந்த தொழில்நுட்பம் கொண்டு 150 அடிகளுக்கு மேல் கொண்டு சென்றார்கள், எப்படி உச்சியில் வைத்தார்கள், எல்லாவற்றிற்கும் மேலே இந்த கோவில் முழுவது கிரானைட் எனப்படும் கடின பாறையினால் ஆனது, தற்போதைய காலத்திலேயே, 50 டன் அளவுள்ள ஒரே கிரானைட் கல்லை உடைத்து செதுக்குவதற்கு பல நாட்களும், பெறும் முயற்சியும் தேவை, இந்நிலையில் அவர்கள் எப்படி இந்த கோபுரத்தை மட்டுமின்றி கோவில் முழுவதையும் செதுக்கினார்கள் ?! ஆச்சரியமே...


தஞ்சை கோவிலின் புகழ் பெற்ற ஒரு கோணம், அந்தி மயங்கும் மாலை வேளையில்.


நவக்கிரகங்கள் லிங்கங்களாய், இதில் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை, ஆனால் இதிலிருந்த ஓளி அமைப்பில் ஒரு இனம் புரியாத உணர்வு...


கோவில் சுவர்களில் உள்ள ஓவியங்கள், இதை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை என நினைக்கின்றேன், நாம் கோவில்களை ஆன்மீக தளங்களாய் மட்டுமே பார்க்கின்றோம் :-( , இதில் பொதிந்து இருக்கும் அறிவியல் திறன், கலைத்திறன் என எப்போது நம் தலைமுறையிடம் சுட்டுக்காட்ட பழகப்போகின்றோம் ?


ஒற்றைக்கல்லினால் ஆன பிரமாண்ட நந்தி, இதை செதுக்கும் போது தவறிழைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் ?!?! இது என்ன காகிதமா அழித்து விட்டு முதலிலிருந்து தொடங்க ?!


கோவிலின் முன்புறமிருந்து


காணக்கிடைத்த பொம்மலாட்டம்

நந்தியின் பின்புறம். (நந்தனுக்காக ஒதுங்கியதாக சொல்லப்படும் நந்தி எந்த கோவிலில் ?)