கல்லிலே கலைவண்ணம் கண்டார் - 1 (எல்லோரா - கயிலாசநாதர் குகைக்கோயில்)
Published by யாத்ரீகன் under இந்தியா, எல்லோரா, கலை, குகைக்கோயில், சிற்பங்கள், பயணம், புகைப்படம் on புதன், பிப்ரவரி 27, 2008கிழே இருப்பது தான் கைலாச நாதர் கோயில் எனப்படும் குகைக்கோயில். மிக மிக பிரமாண்டமாய் இருக்கும் இதன் உருவத்தை படத்தில் புள்ளியென தெரியும் மக்களை பார்த்தால் தெரியும். இத்தனை பிரமாண்டத்திலும் இதன் கலை நயம் சிறிதும் குறைந்ததில்லை.

Kailashanadhar Temple - Cave 16 - The Most Amazing Cave temple ive ever seen, originally uploaded by யாத்திரீகன்.
ஆச்சர்யம் #1:
முதலில், குகைப்பாறையின் பக்க வாட்டில் தொடங்கி, குடைந்து கொண்டே உள்ளே சென்று சிற்பங்களும், கோயில் போன்ற அமைப்பும் பாறையினுள் செதுக்கத்தொடங்குவார்கள்.
இயல்பான இந்த முறைக்கு நேர்மாறாய் செதுக்கப்பட்டது தான் இந்த குகை. எப்படி ? , ஒரு பெரும் பாறையை, அதன் மேல் அமர்ந்து கொண்டு செதுக்கத்தொடங்கி உள்ளே இறங்கி, மேலிருந்து கீழ் எல்லா சிற்பங்களையும், கோயில் அமைப்பையும் செதுக்கத்தொடங்கினால் எப்படி இருக்கும் ? அப்படித்தான் இந்த குகைக்கோயிலும், அதன் உள்ளே இருக்கும் சிற்பங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன. மேலோட்டமாய் பார்த்தால் வித்தியாசம் மிகவும் எளிதாய் தெரியலாம், ஆனால் மேலே பாறையை குடைய ஆரம்பிக்கும் போது, எவ்வளவு கிழே செல்ல வேண்டும், ஒவ்வொரு உயரம் கிழே செல்ல செல்ல எவ்வளவு பாறை எடுத்து விட வேண்டும் என கணக்கிடுவதும், என்ன செதுக்கப்போகின்றோம் என உருவகப்படுத்தி பார்ப்பதிலும் உள்ள கஷ்டங்கள் மிக மிக அதிகம். சாதரண முறையில், கரியை வைத்து கோட்டுருவம் வரைந்து விட்டு எளிதாய் செதுக்கி விடலாம் , ஆனால் இங்கே உள்ளே சென்று குடைவதற்கு எப்படி அளவுகளை குறித்துக்கொள்வது ?
இங்கிருந்து தொடங்குகிறது ஆச்சரியம்...

a cave temple, originally uploaded by யாத்திரீகன்.
ஆச்சர்யம் #3:

entering the cave temple, originally uploaded by யாத்திரீகன்.

when your inside this temple - its your within a rock cube whose inside is carved out for temple and statues, originally uploaded by யாத்திரீகன்.
ஏதோ ஒரு கல்லின் உள்ளே மேலிருந்து ஓட்டை போட்டு, அதனுள் நிறைய சிற்பங்களாய் செய்துவிட்டு, அதனுள் நம்மை இறக்கி விட்டு சென்றது போல் ஒரு உணர்வு .. எங்கு நோக்கினும் சிற்பங்கள் , மேலிருந்து வரும் வெளிச்சம் அத்தனையும் அழகாய் காட்ட .. எனக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை .. அனுபவித்து பார்க்க வேண்டிய தருணம் அது ...

Temple top-1, originally uploaded by யாத்திரீகன்.
உள்ளிருக்கும் ஒரு கோபுரத்தின் க்ளோஸ் அப் ஷாட் , அதன் வேலைப்பாடுகளைக்காட்ட ..
அடுத்த பகுதியில், உள்ளிருக்கும் சிற்பங்களையும் .. மேலும் சில ஆச்சர்யங்களையும் பார்க்கலாம்...
கற்களின் காவியம் - எல்லோரா - இறுதிப்பகுதி
Published by யாத்ரீகன் under இந்தியா, எல்லோரா, கலை, சிற்பங்கள், பயணம், புகைப்படம் on புதன், ஜனவரி 16, 2008முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி
ஐந்தாம் பகுதி
நாம் பார்த்த பிரமாண்டமான சிலைகள் உள்ள குகை இருந்த சுற்றம் எப்படி இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள் ? வேறொன்றும் இல்லாத அடர்ந்த காடாகவா ? சற்றே கிழே பாருங்க. இந்த புகைப்படம் , இதுதான் குகையின் பின்புறம்.
பச்சை பசேலேன்ற புற்களும் , அருகில் பெரிதாய் விழும் நீர்வீழ்ச்சியும் என எவ்வளவு இரசனையை இருக்கின்றது இந்த இடம். இதெல்லாம் பார்க்கும்போது , சத்தியமாய் கூண்டுக்குள் இருப்பது போல ஒரு வீட்டை நினைத்துப்பார்க்க கூட முடிய வில்லை :-)
அடர்ந்த கானகத்தினுள், குதிரையின் லாடத்தைப்போன்ற வடிவத்தில் இருக்கும் ஒரு பள்ளத்தாக்கு . அந்த பள்ளத்தாக்கின் ஓரத்தில் ஒரு மிகப்பெரும் நீர்வீழ்ச்சி, பள்ளத்தாக்கின் கிழே அந்த நீர்வீழ்ச்சியினால் உருவான ஆறு ஓடிக்கொண்டிருக்க, அந்த பள்ளத்தாக்கின் சுவற்றில்தான் அஜந்தா குகைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன ..
கிழே உள்ளது , அந்த குகையின் உள்ள ஒரு பின் வாசல், இந்த வாசற்படிகள் , நீர்வீழ்ச்சியினால் உருவாகும் தடாகத்திற்கு கொண்டு செல்கின்றது .
பாட புத்தகத்தில் மட்டுமே படித்தால் வரலாறு சத்தியாமாய் கசக்கத்தான் செய்யும், (அருமையான
புத்தகம் படிக்கும் பழக்கம் , தாய்மொழியை நேசிக்கும் பழக்கம் , மற்றவற்றை மதிக்கும் பழக்கம் என்பதோடு .. உலகத்தை கண்களாலும், செவிகளாலும் , மனதாலும் பார்க்க இத்தகைய பயணங்கள் பயன்படும்.
வாருங்கள் பயணிக்கலாம் .... :-)
பி.கு:
அடுத்த பயணத்தொடர், இதுவும் எல்லோரா குகைகளில் ஒன்றான குகை எண் 16 -ஆன "கைலாசநாதர் கோயில்" எனப்படும் குகைக்கோயில். வாயைப்பிளக்கும் ஆச்சர்யத்தை உருவாகிய குகைக்கோயில் என்பதாலும், நீண்ட தொடர் என்ற அயர்ச்சி தவிர்க்கவும், இது தனியொரு தொடராக பதிவிட முயல்கின்றேன்.
கற்களின் காவியம் - எல்லோரா - 5
Published by யாத்ரீகன் under இந்தியா, எல்லோரா, கலை, சிற்பங்கள், பயணம், புகைப்படம் on ஞாயிறு, ஜனவரி 13, 2008இதன் முந்தைய பகுதிகள் இங்கே ...
முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி
குகைக்குள்ளிருக்கும் மிகக்குறைந்த ஒளியுடன் , என்னிடமிருந்த சாதரண பாயிண்ட் அன்ட் சூட் காமிராவும் தன் கடைசி காலத்தில் இருந்ததனால் [சில்கா ஏரியினுள் விழுந்ததால் :-( ] , இந்த புகைப்படம் பயங்கர ஆட்டம் கண்டிருக்கின்றது மன்னித்துக்கொள்ளுங்கள்.
எட்டு கரங்களுடன் நடனமாடும் சிவன். ஒவ்வொரு கையிலிருக்கும் பொருளுக்கும், முத்திரைக்கும் பல விளக்கங்கள் பல இடங்களில் படித்திருப்போம், அவை மிக அழகாக வடிக்கப்பட்டிருந்தது. முக்கியமாய் தலையில் சூட்டியிருக்கும் கிரீடம், மிகவும் நுணுக்கமாய் கலையம்சம் கொண்டதாய் செதுக்கப்பட்டிருக்கின்றது.
சுற்றி இருக்கும் மற்ற கடவுளர்கள் ஒவ்வொருவரும் பல வகையான வாகனங்களில் இருப்பதும், சிலர் இசைக்கருவிகள் மீட்டுவதும், சிவனுக்கு சாமரம் வீசுவதும் என நீள்கின்றது இந்த சிற்பம்.

Shivaa dancing, originally uploaded by யாத்திரீகன்.
நாம் கோயில் வாசல்களில் துவாரக பாலகர்கள் எனப்படும் வாயில் காவலர்களின் சிலைகளை பார்த்திருப்போம். என்றாவது யோசித்திருக்கிறீர்களா ஏன் பெண் சிலைகள் வாயிற் காவலர்களாய் இல்லையென்று ?
இங்கே கிழே இருப்பது அங்கிருக்கும் லிங்கத்தின் சன்னதியில் வாயிற் காவலர்களை இருக்கும் நந்தினிகள் அங்கிருக்கும் துவாரக பாலர்களுக்கு சிறிதும் குறையாதவர்கள். நாங்கள் இவர்களின் முட்டியளவு கூட இல்லை .

Nandhinis, originally uploaded by யாத்திரீகன்.

Look at the earing, originally uploaded by யாத்திரீகன்.
எப்படி என்று கேட்கிறீர்களா ? ஒரு வாயிலில் சிங்கத்தின் சிலையருகே இருந்து இன்னொரு வாயிலைப்பார்த்தால் எந்த ஒரு தூணும் பார்வையை மறைக்காமல் இதற்கு குறுக்கே (Diagonal) இருக்கும் வாயிலில் உள்ள சிங்கத்தை பார்க்க இயலும். இத்தனை பருமனான , உயரமான தூண்களை , பரந்து விரிந்த இடத்தில் நிறுவும் போது இத்தகைய விஷயத்தையும் கருத்தில் கொண்டு செதுக்கியிருப்பது அவர்களின் கலை நுணுக்கம் மட்டுமின்றி, அறிவியல்/பொறியியல் அறிவையும் ஆற்றலையும் காட்டுகின்றது.

Majestic Lion Guard - guarding the shivaa temple, originally uploaded by யாத்திரீகன்.
இங்கே கீழிருப்பது இந்திரனின் மனைவியான இந்திராணியின் மரம். ஒரே மரத்தில் பல வகையான கனிகளும் , அதை பார்த்து உண்ண வந்திருக்கும் மந்திகளும் , பறவைகளும் என உங்களால் கண்டு பிடிக்க முடிகின்றதா ?

tree at the heaven for Indhraani - with many fruits monkeys birds around it - how detail they have done it, originally uploaded by யாத்திரீகன்.
இந்தரலோகம் என பெயரிடப்பட்ட குகையொன்று , அதன் உச்ச கட்டத்தில் மிகவும் வண்ண மயமாய் இருந்திருக்க வேண்டும் .. அதிலிருக்கும் தூண்களின் வேலைப்பாடுகளும் , இன்னும் மறையாமலிருக்கும் வண்ணங்களும் என இன்னும் நம்மை பிரமிக்க வைக்கின்றது. இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்பதற்கு முன் இந்திரலோகத்தில் எங்கள் சீனி :-)

cne with Indhrani, originally uploaded by யாத்திரீகன்.
மிகப்பெரும் அடையாளங்களை விட்டுச்சென்ற தலைமுறைக்கே இந்த கதி என்றால் , வெறும் கண்ணாடிக் கோபுரங்களும் , வசூல் வேட்டைக்கென உருவாகும் ஆன்மீக தங்கக்கோபுரங்களும் மட்டும் உருவாக்கிக் கொண்டிருக்கும் நம் தலைமுறையின் அடையாளம் எப்படி இருக்கும் ?
கற்களின் காவியம் - எல்லோரா - 4
Published by யாத்ரீகன் under இந்தியா, எல்லோரா, கலை, சிற்பங்கள், பயணம், புகைப்படம் on திங்கள், டிசம்பர் 10, 2007இடம்:
முந்தைய சிலைகள் இருக்கும் அதே குகை ..
உயரம்:
முன்பு பார்த்த சிலைகளின் உயரம்
சூழல்:
திருமணம் முடிந்த பிறகு மணமக்களிடையே நிகழ்த்தப்படும் சிறு சிறு விளையாட்டுக்களின் பகுதியாக , அவரவர் பூதகணங்கள் சூழ சிவனும் ஷக்தியும் தாயம் உருட்டி விளையாடுகிறார்கள். விளையாட்டில் ஷக்தியிடம் சிவன் தோற்றுப்போகிறார். விளையாட்டு முடிந்தபின் எழுந்து செல்ல முயற்சிக்கும் போது, சிவன் ஷக்த்தியின் கரம் பற்றி இழுத்து இன்னொரு முறை விளையாடலாம் என்று அழைக்கிறார்.

Shivaa Paarvathy Dice Game, originally uploaded by யாத்திரீகன்.
சிவனின் பக்கமிருக்கும் பூதகணங்கள் சிவன் தோற்றதால் வருத்தமுடன் இருப்பதும் , ஷக்தியின் பக்கமிருக்கும் பூதகணங்கள் தங்கள் பக்கம் வென்றதால் மகிழ்வாய் இருப்பதும் தெரிகிறதா ?
இரு பக்கமும் பானைகள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்திருப்பது , இன்னும் பின்பற்றி வரும் பழக்கங்களுள் ஒன்று என்று நினைக்கும் போது ஆச்சர்யமாய்த்தான் இருக்குது .. எவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாய் ஒரு வழக்கத்தை பின்பற்றுகின்றார்கள் என்று .. (அர்த்தம் புரிந்து பின்பற்றுகின்ற்ரர்களா என்பது வேறு விஷயம் ..)
எழுந்து செல்ல முயற்சிக்கும் ஷக்த்தியின் கையை பிடித்திழுக்கும் சிவனின் குறும்பான புன்முறுவல் அட்டகாசம் , இவ்வளவு வெளிப்படையாய் கடவுள்களின் புன்னகையை/புன்முறுவலை எங்கேயும் பார்த்ததில்லை... பார்த்ததும் நம்மை அறியாமல் நமக்கே ஒரு சிரிப்பு வந்து விடுகின்றது.. ஒரு சந்தோஷ உணர்வு ..
எதிர்பாராமல் நிகழ்ந்த இச்சம்பவத்தால், நாணிக்கொள்ளும் ஷக்தி ... அட எவ்வளவு அழகாய் வெளிப்பட்டிருக்கின்றது அந்த வெட்கம் , புன்னகை, சந்தோஷம் ..
இந்த உணர்வுகளை, மேலும் உன்னிப்பாக கவனிக்க , கிழே உள்ள படங்களை பாருங்கள் .

Smiling Shiva - Shy Paarvathy, originally uploaded by யாத்திரீகன்.
கிழே ஒரு பக்கம் பிரம்மாவும், மறுபுறம் விஷ்ணுவும் இருக்கிறார்கள்
எல்லாவற்றையும் விட .. மற்றுமொரு குறிப்பிடத்தக்க விஷயம் .. கிழே நடுவில் இருக்கும் சிவனின் நந்தியும் , அதைச்சுற்றி விளையாடும் பார்வதியின் பூதகணங்களும் ..

Paarvathys Boothakanas playing with shivaas cow, originally uploaded by யாத்திரீகன்.
நந்தியின் பின்புறமுள்ள பொடியன் ஒருவன் அதன் வாலைக்கடிப்பதும்,
முன்புறமுள்ள ஒருவன் அதன் கால்களை பிடித்து இழுப்பதும்..
மேல்புறம் இருக்கும் ஒருவன் , அதன் கொம்புகளை பிடித்து திருகுவதும் ...
கோபம் கொண்டு மிரளும் நந்தி, காலருகே இருக்கும் ஒரு பொடியனை , மிதிப்பதும் ..
ஒரு முழு குதூகலமான கல்யாண சூழலை , மணமக்கள் , அவர்கள் இருவரின் பக்கம், அங்கிருக்கும் குழந்தைகளின் சேட்டை , அங்கிருக்கும் செட்டப் ... எப்படி அத்தனையும் கவனித்து , நிதானமாய் திட்டமிட்டு , அருமையாய் நிறைவேற்றி இருக்கிறார்கள் ..

Shiva Paarvathy on a Dice Game - this too needs a blog post to be described, originally uploaded by யாத்திரீகன்.
இனி அடுத்து வரும் பகுதிகளில் , வர்ணனைகள் அதிகமின்றி .. அழகான சிலைகளின் படங்கள் நிறைய பகிர்ந்து கொள்கின்றேன் ..
கற்களின் காவியம் - எல்லோரா - 3
Published by யாத்ரீகன் under இந்தியா, எல்லோரா, கலை, சிற்பங்கள், பயணம், புகைப்படம் on திங்கள், டிசம்பர் 10, 2007எல்லோரவில் செதுக்கப்பட்டிருக்கும் கற்களான காவியங்களை பகிர்ந்து கொள்ளும் தொடரின் அடுத்த பகுதி இது ..
முதல் பகுதி இங்கே
இரண்டாவது பகுதி இங்கே
சென்ற முறை வைத்த சஸ்பென்ஸ் , நான் எந்த ஊர் என தெரிந்தவர்களுக்கு ஒன்றுமில்லாததாக இருக்கும் :-) .. குறைந்த பட்சம் புதியதாய் இந்த பதிவிற்கு வருபவர்களுக்கு .. நச்சென்ற கதைகளுக்கும் , தொடர் கதைகளுக்கும் இடையில் கொஞ்சமாவது சுவாரசியம் அளிக்க வேண்டுமல்லவா .. ;-)
இம்முறை பார்க்கப்போவது "சிவன் - ஷக்தி திருமண வைபவம"
பார்க்கப்போவதற்கு முன் படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி , இந்து மத திருமணங்களில் பெண் ஆணுக்கு எந்த பக்கம் நிற்பார்கள் ? (மற்ற மத திருமணங்களில் எப்படி ?) இதை நான் கொஞ்சமும் முக்கியத்துவம் கொடுத்து கவனித்ததில்லை .. இந்த சிலைகளை கவனிக்கும் வரை...

Shivaa Paarvathy Marriage - is there a mistake in this huge statue ?, originally uploaded by யாத்திரீகன்.
சிவன் - ஷக்தி திருமணம் , விஷ்ணு - பிரம்மா முன்னிலையில் , அவரவர் பூதகணங்கள் புடைசூழ ...
சிலையின் விபரங்கள்:
சிவனும் ஷக்தியும் கைகோர்த்து திருமண மேடையில் இருக்கும் நிகழ்வு இது..
கிழே பிரம்மா யாகம் வளர்த்துக்கொண்டிருப்பதும் , இடது புறம் விஷ்ணு இருப்பதும் (விஷ்ணு என்று கையிலிருக்கும் சங்கு சக்கரத்தை வைத்து கண்டுபிடிக்க முடியும் :-) தெரிகின்றதா ?
மேலே முதல் வரிசையில் தேவர்களும், அதற்கு அடுத்த வரிசையில் யக்ஷர்களும் (யானையின் மீது இருப்பவர்கள்) .. மலர் தூவி வாழ்த்த ..
மணமக்களின் நகைகளும், மணமகளின் நாணமும் மிக அருமையாய் வந்திருக்கும் சிலை ..
ஒவ்வொரு கதாபாத்திரத்தின் விரல்களும்,மூக்கும், கண்களும் மிக மிக நுணுக்கமாய் செதுக்கப்பட்டிருக்கின்றது ..
சிலையின் மொத்த பிரமாண்டத்தை காண்பிக்கும் வகையில் எடுத்த புகைப்படம் ஒன்று கிழே

Me @ Shivaa Paarvathy Marriage, originally uploaded by யாத்திரீகன்.
இல்லையெனில் , பதிவின் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதிலை வைத்து இந்த புகைப்படத்தை பாருங்கள் .. எதாவது புரிகின்றதா ?

Paarvathy Shivaa Marriage, originally uploaded by யாத்திரீகன்.
இப்பொழுது வித்தியாசம் தெரிகின்றதா ? .. எந்த கற்சிலைகளை பார்த்தாலும் எனக்கு எழும் முதல் கேள்வி.. இதில் தவறு நேர்ந்தால் என்ன செய்வார்கள் என்று .. தவறு என்று நான் நினைத்துக்கொண்டிருப்பது அங்க ஹீனமான ஒரு சிலையைத்தான் ,
அது மட்டும் தவறு அல்ல .. என்னும் எத்தனையோ வகையான தவறுகள் உள்ளன என புரிய வைத்த சிலைகள் இவை ..
இரண்டு சிலைகளும் அற்புதமான படைப்புகள் என்பதில் சந்தேகமே இல்லை .. ஆனால் சிறிய தவறோன்று நிகழ்ந்ததால் ஒன்று மூலையில் கடாசி இருப்பதும், மற்றொன்று கண்ணைக்கவரும் வண்ணம் இருப்பதும் .. சத்தியமாய் ஒப்புக்கொள்ள முடியவில்லை ..
மேலே உள்ள இரு புகைப்படங்களில் இருக்கும் இந்த சிலையில் , ஷக்தியின் நாணத்தை காண்பிக்க , உடல் வளைத்து , தலை சாய்த்து, கால் கட்டை விரலால் மண்ணைக்கீறும் வகையில் செதுக்கப்பட்டிருப்பதை காணுங்கள் ..
யோசித்துப்பாருங்கள் , எவ்வளவு உழைப்பிர்க்குப்பின் தவறை மற்றவர் வந்து சுட்டிக்காட்டினால் :-(
நல்ல வேலை தவறுக்காக சிலையை சிதைக்காமல் விட்டார்களே, அது போதும் ....
அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்ளப்போவது,சந்தோஷம் பொங்கி வழியும் காட்சி கொண்ட ஒரு சூழலின் சிலை அமைப்பு ॥ (Offcourse தவறுகள் ஏதுமின்றி :-)
கற்களின் காவியம் - எல்லோரா - 2
Published by யாத்ரீகன் under இந்தியா, எல்லோரா, கலை, சிற்பங்கள், பயணம், புகைப்படம் on ஞாயிறு, டிசம்பர் 09, 2007பகுதி ஒன்று - 1 இங்கே
இங்கே நாம் அடுத்து பார்க்கப்போவது "சிவனின் கையிலை மலை தூக்கும் நிகழ்ச்சி". சிவனின் ருத்ரதாண்டவத்தின் நேர் எதிரே அமைந்திருக்கும் சிலை இது. உருவத்திலும், பிரமாண்டத்திலும்,நுணுக்கத்திலும் முந்தின சிலைக்கு சற்றும் குறைவில்லாதது. சென்ற சிலையில் இருந்த சூழலில் மூன்றே கதாபாத்திரங்கள் தான், ஆனால் இங்கே பலர் இருப்பதால், நிகழ்வை காட்ட வந்த கலைஞனுக்கு நுணுக்கமாய் பார்த்து பார்த்து வடிக்க எத்தனையோ விடய௩கள் இருக்கின்றன ... நாங்கள் கவனித்தவற்றை பார்ப்போம்....
சூழல்:
சிவனும், ஷக்தியும் கயிலை மலையில் அமர்ந்திருக்க, இருவரின் பூதகணங்கள் சூழ்ந்திருக்க, இராவணன் சிவனின் மேல் கொண்ட அதீத பக்தியால் சிவனை கயிலை மலையோடு இலங்கை கொண்டு செல்ல முயற்சிக்கிறான். ஷக்தி பயப்பட, சிவன் தன் ஒர்றைக்காலால் மலையை அழுத்த இராவணனால் பாரத்தை தாங்க இயலாமல் தவிக்கின்றான்.
விபரங்கள்:
மேலிருந்து வருவோம் ...
இராவணன் கயிலையை அசைத்தும், பயந்த சில சிவகணங்கள் சிவனை வணங்குவதும், பலர் கீழே இராவணனுக்கு நிகழ்ந்திருப்பதை கண்டு வியந்து சிரிப்பதும் என சிலையில் மேலே உள்ளன ..
சில பூதகணங்கள் நடக்கும் செயலை கண்டு வியந்து போய் நெஞ்சில் கைவைத்து வியப்பை தெரிவிப்பதும் ...
ஷக்தி பயன்திருப்பதும், அவரை அமைதிப்படுத்த சிவன் ஷக்த்தியை அணைத்துக்கொண்டு தன் பக்கம் இழுத்துக்கொள்வதும்..
சிவனின் வலது கால் கிழே அழுத்தியிருப்பதை போல் தோற்றம் கொடுப்பதும்
பாரம் தாங்காத இராவணன் முகத்தில் உள்ள வலி தத்ரூபமாய் இருந்தது, மேலும் கூடின எடையை தாங்க இயலாமல் அவன் கழுத்து திரும்பி முகம் முதுகுப்பக்கம் வந்திருப்பதையும் காணலாம்
ராவணன் கயிலையை அசைத்ததை நாம் உணர, அங்கிருக்கும் கற்கள் இடம் அசைந்து இருப்பதை போன்று செதுக்கப்பட்டிருப்பதை காணுங்கள் ..
ராவணனின் இடதும் வலதும் உள்ளது ஷக்தியின் பூதகணங்கள்..
சில பூதகணங்கள் ராவணனின் நிலை கண்டு எள்ளி நகையாடுவதும் ॥ குறிப்பாய் ராவணனின் நீட்டியிருக்கும் வலது காலின் அருகில் இருக்கும் பூதகனத்தின் முகத்திலும் , கைக்குரிப்பிலும், முகம் சுழித்து நாக்கை துருத்தி கிண்டல் பண்ணுவது தெளிவாய் தெரியுது .....
அந்த பூதகனத்திற்கு மேல் உள்ளதுகள் ராவணனின் மேல் கற்களை வீசுவதும்,
அதற்கு பின் புறம் இருப்பவன் கையில் பாம்பை வைத்து ராவணனை பயமுறுத்திவிலக்க முயற்சிப்பதும் (இதை இரண்டாவது படத்தில் காணலாம்)
ராவணனின் இடது புறமுள்ள பூதகணங்களில் ஒன்று, திரும்பிக்கொண்டு , தன் ஆடையை விலக்கி , பின்புறத்தை காட்டி அவனை அவமானப்படுத்துகின்றது॥ :-)
அதற்கு அடுத்து உள்ளது கையில் ஒரு குச்சி வைத்துக்கொண்டு ராவணனை அடிக்க, அதற்கு பின்புறமுள்ளதுகள் சங்கு, மத்தளம் போன்ற வாத்தியங்கள் உரக்க வாசித்து ராவணனை பயமுறுத்த முயற்சிக்கின்றன ...
சிலையின் உயரம், ருத்ர தாண்டவத்தின் உயரத்தை போலவே பிரமாண்டத்துக்கு குறைச்சலில்லை
இப்படி அசந்து போகச்செய்த படைப்புகளின் வரிசையில் ஒன்று இந்த சிலை ....
அடுத்து பார்க்க போவது, எங்கள் ஊரில் புகழ் பெற்ற ஒரு நிகழ்வுக்கான சிலை :-)
கற்களின் காவியம் - எல்லோரா - 1
Published by யாத்ரீகன் under இந்தியா, எல்லோரா, கலை, சிற்பங்கள், பயணம், புகைப்படம் on சனி, டிசம்பர் 08, 2007சில மாதங்களுக்கு முன், அஜந்தா, எல்லோரா குகைகளுக்கு சென்ற பயணத்தின்போது எடுத்த படங்கள், இங்கே செல்ல வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களுக்காகவும், இந்தியாவிலிருந்தே இங்கே போகாமலிருப்பவர்களுக்கும் இந்த பதிவுத்தொடர்.....
(டெம்ப்லெட்-ஐ) வார்புருவை சரி படுத்தி மறுபடியும் தமிழ்மணத்தோடு இணைய உதவி புரிந்த சி.வி.ஆர்-க்கு நன்றி..
இந்த படத்திலிருக்கும் சிவனின் ருத்ர தாண்டவத்தை பற்றியே ஒரு பதிவுத்தொடர் எழுதலாம், அந்த அளவுக்கு என் உள்ளம் கொள்ளை கொண்ட சிலை. மிகவும் பிரமாண்டமாய், தத்ரூபமாய், உயிருடன் எழுந்து வந்துவிடுமோ என ஒரு நொடியாவது நினைக்க வைத்த சிலை. இத்தனை பிரமாண்டத்திலும், ஒவ்வொரு சிறிய விஷயங்களையும், நுணுக்கமாக கவனித்து கவனித்து செதுக்கியிருக்கும் சிலை. வழக்கமான நகைகள் மட்டுமின்றி, அந்த காட்சியின் உணர்வுகள், அந்த காட்சியில் இருக்கும் ஒவ்வொரு கதா பாத்திரத்தின் பங்கும்.. என பொன்னியின் செல்வனின் வரும் கல்கியின் வர்ணனை போன்று, மிக மிக அனுபவித்து, விலாவரியாய் செதுக்கப்பட்டிருக்கும் விதம் அட்டகாசம்.
இப்பொழுது இந்த சிலையின் விவரத்தை பார்ப்போம் ..
சூழல்:
கடவுள் தவிர யாராலும் தன்னை கொல்ல முடியாது என்று வரம் வாங்கிய அசுரன் ஒருவனின் வாதம், ஷக்தியின் முன்னிலையில். அந்த அசுரனின் வரத்தில், இரவிலோ, பகலிலோ மரணம் நேரக்கூடாது என்றும், நிலத்தில் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் தானே உருவாக வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றான்.
அசுரனின் அட்டகாசம் தாங்காமல் வரும் சிவன், யானை ஒன்றின் தோலை வைத்து சூரியனை மறைத்து, பகல்-இரவு இரண்டுமிலாமலும் உருவாக்குவதை சிவனின் தலைக்கு மேலே சென்றிருக்கும் இரண்டு கைகள் பாருங்கள். படத்தின் இடது மேல் மூலையில் யானையை காணலாம்.
தாக்க வரும் மற்ற அசுரர்களை அழிப்பதை இடது கையில் காணலாம்.
வலது கையோன்றில் உள்ள வாளை கொண்டு அசுரனை அழிப்பதும், அவன் இரத்தம் சிந்தாமளிருக்க அதன் கிழே ஒரு கை கொண்டு பாத்திரம் வைத்து பிடிப்பதும்,
சிவனின் பெருமையை உணர்ந்த நிலையில், அசுரன் கை தொழுது வணங்குவதும்..
சிவனின் ருத்ர தாண்டவத்தை கண்டு பயந்த நிலையில் உள்ள ஷக்தியும், அதை பிரதிபலிக்கும் ஷக்தியின் முக உணர்வுகளும் ..
சிவனின் புலித்தோலாடையும்,
எல்லாவற்றிலும் மேலாக, சிவனின் முகத்தில் உள்ள கோபம், இந்த ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடே அந்த சிலையின் மொத்த சிறப்பையும் உணர்த்திவிட்டது. சிவனின் முகத்தை சற்றே பக்கவாட்டில் சென்று நேருக்கு நேர் பார்த்தால், நம்மைப்பார்த்து கோபப்படுவது போன்ற உணர்வு ..
கிழே உள்ள படம் அப்படிப்பட்ட ஒரு கோணத்தில் எடுத்தது। நான் சொல்வது உண்மையா என்று நீங்களே தெரிந்து கொள்ளலாம் ॥
இந்த சிலை என்ன உயரம் இருக்குமென்று நினைக்கிறீர்கள் ? கிழே பாருங்கள் ....
ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 5
Published by யாத்ரீகன் under அஜந்தா, பயணம், புகைப்படம் on புதன், டிசம்பர் 05, 2007ஜட்க்கா கதைகள் எனப்படும் புத்தர் கதைகள்இலிருந்து சில நிகழ்வுகளை படம் பிடித்திருந்த ஓவியங்கள். ஆபரணங்களின் நுணுக்கமான வேலைப்பாடுகள், உடல் அங்கங்களின் வளைவுகள், உடல் நிறங்கள் வரையில் நுணுக்கமான விஷயங்களை கவனியுங்கள்.
ஜட்க்கா கதைகளிருந்து மேலும் சில ஓவியங்கள் ...
ஜட்க்கா கதைகளிருந்து மேலும் சில ஓவியங்கள் ...
ஜட்க்கா கதைகளிருந்து மேலும் சில ஓவியங்கள் ...
மேலிருக்கும் ஓவியத்தை கூர்ந்து கவனியுங்கள், பின்னாலிருக்கும் பெண்ணின் மார்பகத்தைப்பாருங்கள், தொடையில்/முட்டியில் அமுங்கியிருகும் விதத்தை பாருங்கள்.. இத்தனை நுணுக்கமாய் யாராலும் கவனிக்க முடியாத ஒரு விஷயத்தை அந்த ஓவியன் எப்படி அருமையாய் வரைந்திருக்கின்றான் ..
ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 4
Published by யாத்ரீகன் under அஜந்தா, பயணம், புகைப்படம் on திங்கள், அக்டோபர் 01, 2007ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 3
Published by யாத்ரீகன் under அஜந்தா, பயணம், புகைப்படம் on திங்கள், அக்டோபர் 01, 20071. புத்தரின் மரணப்படுக்கை (?) என்று சொல்வது தவறு, புத்தர் இறுதி நிர்வாண நிலை அடைந்த தருணம்.
2. புத்தரின் பாதத்தின் வழியே அவரின் ஆன்மா மேலுலகத்திற்கு செல்வதைப்போன்று செதுக்கப்பட்டிருக்கும் சிற்பம், மேலே உள்ள சிற்பத்தின் தொடர்ச்சி இது, படத்தில் தோன்றுவதை விட மிகவும் நீளமான சிலை. இன்னும் கூர்ந்து நோக்கினால், மேலுலகத்தில் உள்ளவர்கள் புத்தரின் வருகையால் மகிழ்ந்திருப்பதை மேலுள்ள மற்ற சிலைகளின் முக உணர்ச்சிகளில் காணலாம்.
3. அதே தருணத்தில், பூலோகத்தில் உள்ள மக்கள், புத்தரின் பிரிவால் அழுவதைக்காணலாம்.
people weaping for budhas death, originally uploaded by யாத்திரீகன்.
Budha with Teaching Mudhra, originally uploaded by யாத்திரீகன்.
5. புத்தவிகாரங்களினுள் காணப்படும் புத்தரின் சிலை.அங்கிருக்கும் ஓவியங்களுக்கு பாதிப்பு வராதவகையில் சிறப்பான விதத்தில் ஒளியமைப்பு செயப்பட்டிருந்தது.
6. விஸ்வகர்மா குகை எனக்கூறப்பட்ட மிகவும் அழகான ஒரு குகையின் வாயிலில் இருந்த புத்தர் சிலை ஒன்று. பாதத்தினருகே புத்தர் அணிந்திருக்கும் ஆடையை செதுக்கியிருப்பதை பாருங்கள்.
7. சாவில்லாத வீட்டிலிருந்து ஒரு தாயை கடுகைக்கொண்டு வரச்சொல்லி, தவிர்க்க முடியாத வாழ்வியல் அங்கம் சாவு என்று உலகுக்கு உணர்த்தும் ஒரு காட்சி.
8. மஹாயனா எனப்படும் காலகட்டங்களில், புத்தர் என்பவர் உருவ வழிபாடில்லாமல், தூண்களாய், ஸ்தூபங்களாயும் உருவகப்படுத்தப்பட்டிருந்தார்.

Caves from Mahayana period where budha is just symbolised - no Idol Worship, originally uploaded by யாத்திரீகன்.
9. ஹனாயனா எனப்படும் அதற்கு அடுத்து வந்த காலகட்டங்களில், புத்தரின் உருவ வழிபாடு தோன்றியது. இந்த இருவகை விஹாரங்களே, அஜந்தா குகைகள் என்பவை, ஒரு மூச்சில் செதுக்கப்பட்டவையல்ல, பல காலகட்டங்களில் செதுக்கப்படவை என்பதற்கான ஆதாரம்.