யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

தவறவிடப்போவதில்லை இன்றை

Published by யாத்ரீகன் under on செவ்வாய், மே 30, 2006


ஆம் இன்று புதிய நாள்தான்... இன்று எனக்கு புதிய நாள்தான்...
இன்று மட்டுமல்ல என்றும் ஒவ்வொரு நொடியையும் முழுமையாய் கடப்பேன்...
இன்றைய தினத்தை மட்டுமல்ல.. இனிவரும் நாட்களையும் புரிந்துகொள்வேன்...
மாற்றங்கள் காண நல்லதொரு தருணம்.. தவறவிடப்போவதில்லை இதை..

அமைதி வெளியே எங்குமில்லை,
நம்மருகிலேயே,
நம்கண்முன்னேயே,
நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கின்றது..
அதைக்காணத்தான் கண்களில்லை நம் மனதுக்கு..
என்கின்ற புரிதலோடு
ஆர்ப்பாட்டமில்லா தனிமையான ஆரம்பம், இனிமையான துவக்கம்
தவறவிடப்போவதில்லை இன்றை...

பயணம்

Published by யாத்ரீகன் under on திங்கள், மே 22, 2006

வாழ்க்கையினூடே வேகமாய் ஓடிவிடாதே,
எதனைக்கடந்தோம் என்பதை மறந்துபோகுமளவு,
எதனை நோக்கிச்செல்கின்றோம் என்பதை மறந்துபோகுமளவு,
வாழ்க்கையினூடே வேகமாய் ஓடிவிடாதே...

வாழ்க்கை வேகப்போட்டியல்ல
அணுஅணுவாய் ஒவ்வொரு அடியும்
இரசிக்கவேண்டிய பயணம்

பார்த்த முதல் நொடியே

Published by யாத்ரீகன் under on திங்கள், மே 15, 2006
பார்த்த முதல் நாளே.. உன்னை பார்த்த முதல்நாளே
காட்சிப் பிழைபோலே... உணர்ந்தேன் காட்சிப் பிழைபோலே..
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம்
என்றும் மறையாது...
...

...
...
...

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்..

இவளை, மற்றுமொறு அழகிய பிம்பமென்று ஒதுக்க இயலவில்லை... அட கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே உணர்ச்சிவசப்படுறடாவென தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை....

ஒரு புன்னகையில், மனதின் பாரமனைத்தையும், விழியில் தேங்கிய கோபமனைத்தையும் தூளாக்கினாளே...!!!