யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

ஆயிரம் ஆண்டு வண்ணங்கள் - அஜந்தா குகைகள் - 2

Published by யாத்ரீகன் under , , on சனி, செப்டம்பர் 29, 2007
இவை இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் (இலை, பழங்கள் மற்றும் மூலிகை சாறுகளால் பிழியப்பட்டு எடுத்த இயற்கை வண்ணங்கள்). ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆனாலும், இயற்கை சீற்றழிவுகளைத்தாண்டி, பல மனிதர்களின் பொறுப்பற்ற செயல்களையும் தாண்டி இவை இருப்பது மிகவும் பிரமிக்கத்தக்கது.
1. அங்கிருந்த குகை ஒன்றின் மேற்பரப்பில் இருந்த ஒரு சிறு தேவதையின் ஓவியம் ஒன்று. என்னமாய் கொழுக்மொழுகென்று இருக்கின்றது.

2. மேலிருந்த வண்ணப்பூக்களின் ஓவியம் ஒன்று, இதிலிருந்த நீல நிறம் இன்னும் வரையப்பட்டபோதிருந்த வனப்பிருந்ததைபோன்றிருந்தது.

3. மற்றுமொரு மேற்கூரை ஓவியம். இந்த ஓவியம் சிறிது சிதைந்திருந்தாலும், அதன் அழகும்,நேர்த்தியும் சிறிதும் குறைவின்றி இருந்தது.

1 மறுமொழிகள்:

Dreamzz சொன்னது… @ திங்கள், டிசம்பர் 10, 2007 7:09:00 PM

really informational!
egypt ponum, great wall pakkanum enra aasai ellam enakku itha paatha pinna poiduchu! Ajanta ellora ponum!

கருத்துரையிடுக