யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

Kung Fu Panda

Published by யாத்ரீகன் under on சனி, ஜூன் 07, 2008


ரொம்ப எளிமையான கதை, அதை வழக்கமான சைனீஸ் டைப் திரைக்கதை. ஆனால் அதை படமாக்கிய விதம் கலக்கியிருக்காங்க. நகைச்சுவையை அங்க அங்க தூவாம , படம் முழுக்க, கடைசி நொடி வரை சிரிச்சிகிட்டே இருக்க வைக்கும் அளவுக்கு இருக்கு. அசத்தலான பின்னணி இசை, டைமிங் டயலாக், நுணுக்கமான அசைவுகளை துல்லியமாய் காமிக்கும் அனிமேஷன். சொல்லிகிட்டே போலாம், போய் பாருங்க.

எல்லாத்தையும் விட இன்னும் ஆச்சர்யப்பட வைத்த விஷயம், இந்த 1:30 மணி நேர படத்துக்கு பின்னால இருந்த மனிதர்கள், எத்தனை பேர், எத்தனை வித விதமான வேலைகள்... டைட்டில் போடுறாங்க போடுறாங்க போட்டுட்டே இருக்காங்க.

அட நம்ம ஜாக்கி ஜான் கூட பேசி இருக்காரே !!!

24 மறுமொழிகள்:

Dreamzz சொன்னது… @ சனி, ஜூன் 07, 2008 6:29:00 PM

:)

தனசேகர் சொன்னது… @ சனி, ஜூன் 07, 2008 11:11:00 PM

யாத்ரீகன் !! நம் நாட்டைக் சுற்றிப் பார்த்துவிட்டு மேற்கு உலகத்திற்கு வந்திருக்கிறீர்களா? வருக :) நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப்பதிவுப் பக்கம் வருகிறேன் :)
அன்புடன்
தனசேகர்

Maayaa சொன்னது… @ ஞாயிறு, ஜூன் 08, 2008 8:58:00 AM

u r tagged..mnemonics illa.. innonnu!!

திருச்சிராப்பள்ளி தமிழச்சி சொன்னது… @ செவ்வாய், ஜூன் 10, 2008 10:53:00 PM

கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?
படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?



எண்ணாமல் எவரொருவரும் எப்பொருளையும், எச்செயலையும் ஆராயவோ, விளங்கிக்கொள்ளவோ, விளக்கவோ முடியாது. எண்ணங்களே அனைத்து அறிவியல்களுக்கும், இலக்கியங்களுக்கும், குழப்பங்களுக்கும், போரட்டங்களுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படையாகும். ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்பதில் பல கற்று, பல பட்டங்களையும், விருதுகளையும் அள்ளிச்சென்ற மாமேதைகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், மெய்ஞானிகளுக்கும் தெளிவில்லை. தெளிவில்லாத விஷயங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.


ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை? இக்கேள்வியில் மனித அறிவின் சூட்சுமம் பொதிந்துள்ளது. படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும் என்ற மூடநம்பிக்கையை இன்றைய கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும், சிந்திக்க முடியும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது.


கல்வித்தகுதி என்பதின் அடிுப்படையில் சமுதாயத்தில் ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து முன்னுரிமைகளும் சமூகக் குற்றமாகும். படித்தாவனால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியும் என்பதற்கு உள்ள ஆதாரங்கள் என்ன?


படிக்கத்தெரிந்தவர்களும், படிப்பறிவற்றவர்களும், கற்றவர்களும் ஒன்றைப்பற்றி எண்ணுவதென்ன என்பதை http://www.tamil.host.sk/ , http://tamil.isgreat.org போன்ற இணையத்தளங்கள் ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகள் எவையென்பதை அழகான தமிழில் சித்தரிக்கின்றன.


எனவே, ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை அல்லது உன்னைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்ற தலைப்பில் தாங்களறிந்த அறிஞர்களைக் கொண்டு ஒரு விவாத்தைத் தொடங்கினால் பல பயனுள்ள, மக்கள் மனதைக் கவரும் சூடான, சுவையான பல தகவல்களும், கருத்துக்களும் மக்களிடமிருந்து வெளியாகும். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?



- திருச்சிராப்பள்ளி ஷாம்ளின் ஜோஸஃபின்

Sathiya சொன்னது… @ புதன், ஜூன் 11, 2008 5:17:00 AM

naan paartha animation padangallaye ennai romba kavarndha padam idhu! Kaaranam Comedy!

Dr.Srishiv சொன்னது… @ வெள்ளி, ஜூன் 13, 2008 3:02:00 AM

வருகைக்கு நன்றி யாத்ரீகன், முடிந்தவரை எழுத முயற்சிக்கின்றேன், ஆனால் என் துறையில் ஆய்வு செய்யும் தமிழ் மாணவர்கள் மிகக்குறைவு என்றே எண்ணுகின்றேன், நன்றி
ஸ்ரீஷிவ்...@ சிவா

பனிமலர் சொன்னது… @ வெள்ளி, ஜூன் 13, 2008 8:26:00 AM

நல்ல படம், அருமையாக வந்திருக்கிறது. அசைபடம் என்ற உணர்வே ஏற்படா வண்ணம் எடுத்திருக்கிறார்கள்.

ஜி சொன்னது… @ வியாழன், ஜூன் 26, 2008 9:33:00 PM

Trailerye supera irukuthunnu sonnaanga pasanga

paakanum :))

கயல்விழி சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 12:43:00 AM

நான் முதலில் விமர்சனம் எழுதலாம் என்று நினைத்த படம் இது.

ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல அனிமேஷன் கதை பார்த்த திருப்தி.

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 1:14:00 AM

நன்றி டிரீம்ஸ் :-) படம் பார்த்துடீங்களா ?

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 1:17:00 AM

ப்ரியா .. பார்த்துட்டு கூடிய விரைவில் பதியுறேன் ..

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 1:19:00 AM

நன்றி முனைவர் ஸ்ரீஷிவ் .. மாணவர்கள் என்றில்லை .. எங்களை போன்ற சாமானியர்களுக்கும் ஏதும் விழிப்புணர்வு தகவல் என்றிருந்தால் பயனடைவோம் இல்லையா :-)

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 1:23:00 AM

ஆமாம் பனிமலர், படம் தொடங்கியதும் படத்தினுள் முழ்கியாச்சு, இறுதியில் பெயர் போட்டு முடிக்கும் வரை பார்த்தோம், இறுதியில் பெயர் போடும்போது அவர்கள் காட்டிய வரைகலை படங்களை பார்த்தீர்களா ? அதுவும் கற்பனை கலந்து அட்டகாசமாய் இருந்தது .. :-)

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 1:26:00 AM

வருகைக்கு நன்றி கயல்விழி .. Wall-E பாருங்கள் .. அது இன்னும் அருமையாய் வந்திருக்கு ..

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 9:41:00 AM

நன்றி தனசேகர்.. நீண்ட காலம் கழித்த பதிலுக்கு மன்னிக்கவும் :-)

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 9:51:00 AM

ஆமாம் சத்யா சரியான காமெடி.. WALL-E பாருங்க அதுவும் சூப்பரா இருக்கு

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 9:57:00 AM

படம் பார்த்த்துடீங்கள ஜி ?!

கயல்விழி சொன்னது… @ வியாழன், ஜூலை 10, 2008 10:58:00 PM

//வருகைக்கு நன்றி கயல்விழி .. Wall-E பாருங்கள் .. அது இன்னும் அருமையாய் வந்திருக்கு ..//

நீங்க சொன்னதை நம்பி ஓடிபோய் WallE பார்த்தாச்சு. ரொம்ப கடிச்சிட்டாங்க. இதெல்லாம் ஒரு கதையா? தாங்கமுடியல

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது… @ வெள்ளி, ஜூலை 11, 2008 12:09:00 AM

நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்கல... wanted படத்துக்கு போனேன்.... நம்ப கேப்டன் விசயகாந்து தோற்று போயிடாருங்க... பிருமாண்டம்கிற பேருல என்னாம அள்ளிவுடுறானுங்க...

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 11, 2008 12:14:00 AM

என்ன கயல் இப்படி சொல்லிட்டீங்க .. WALL-E பொருத்தவரைக்கும் கதை ஒன்றும் மிக அருமையான ஒன்றெல்லாம் இல்லை .. சாதரண தமிழ் அல்லது கமர்சியல் ஹாலிவுட் சினிமாவில் வரும் கிளிஷே காட்சிகள் தான் .. ஆனால் அதை எடுத்திருக்கும் விதம் .. கிரீச்சுக்குரலில் வாஆஆஆலிஈஈஈ , ஈஈஈவாஆஆ என்று பேசும் இரு கதாபாத்திரங்கள் கொண்டு இவ்வளவு creative-ஆ காட்ச்சிகளை நகர்த்திப்போக முடியும் என்பது அட்டகாசம் .. WALL-E-இன் ஒவ்வொரு செயல்களும் எவ்வளவு creative-ஆ எடுத்திருக்காங்க ...

இரசனைகள் பலவிதம் .. அவர்கள் செயல் படுத்தி இருக்கும் பல creative மூவ்ச்க்காகவே இந்த படத்தை இரண்டாம் முறை பார்த்தேன் ... வேறு என்ன சொல்வது :-)

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 11, 2008 12:16:00 AM

வாங்க விக்னேஷ் .. WANTED கதை படிச்சதும் தெரிஞ்சு போச்சு yet another timepass action flick-நு

கயல்விழி சொன்னது… @ வெள்ளி, ஜூலை 11, 2008 12:41:00 AM

//இரசனைகள் பலவிதம் .. அவர்கள் செயல் படுத்தி இருக்கும் பல creative மூவ்ச்க்காகவே இந்த படத்தை இரண்டாம் முறை பார்த்தேன் ... வேறு என்ன சொல்வது :-)//

எனக்கு சுமாராக தான் தோன்றியது. ஒருவேளை நீங்கள் சொல்லி இருப்பது போல, ரசனைகள் பலவிதம்.

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஜூலை 11, 2008 2:04:00 AM

ஹ்ம்ம் .. நுணுக்கமான creative விஷயங்களுக்காகத்தான் நான் இரசிச்சேன் ...

கயல்விழி சொன்னது… @ புதன், ஜூலை 16, 2008 4:47:00 AM

அடுத்ததாக மடகேஸ்கர் -2 வருகிறது. அதற்காக ஆவலாக காத்திருக்கிறேன்.

கருத்துரையிடுக