யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

தவறவிடப்போவதில்லை இன்றை

Published by யாத்ரீகன் under on செவ்வாய், மே 30, 2006


ஆம் இன்று புதிய நாள்தான்... இன்று எனக்கு புதிய நாள்தான்...
இன்று மட்டுமல்ல என்றும் ஒவ்வொரு நொடியையும் முழுமையாய் கடப்பேன்...
இன்றைய தினத்தை மட்டுமல்ல.. இனிவரும் நாட்களையும் புரிந்துகொள்வேன்...
மாற்றங்கள் காண நல்லதொரு தருணம்.. தவறவிடப்போவதில்லை இதை..

அமைதி வெளியே எங்குமில்லை,
நம்மருகிலேயே,
நம்கண்முன்னேயே,
நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கின்றது..
அதைக்காணத்தான் கண்களில்லை நம் மனதுக்கு..
என்கின்ற புரிதலோடு
ஆர்ப்பாட்டமில்லா தனிமையான ஆரம்பம், இனிமையான துவக்கம்
தவறவிடப்போவதில்லை இன்றை...

9 மறுமொழிகள்:

Pavals சொன்னது… @ செவ்வாய், மே 30, 2006 2:45:00 PM

வாழ்த்துக்கள் :)

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், மே 30, 2006 4:18:00 PM

@ராசா:
நன்றி ராசா :-D (எப்படிங்க புரிஞ்சிச்சு ? புரிஞ்சிச்சா ? :-)

Maayaa சொன்னது… @ செவ்வாய், ஜூன் 06, 2006 12:52:00 AM

apdi enna indru special???

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், ஜூன் 06, 2006 1:06:00 AM

@ப்ரியா:

இதுக்கு மேல சொன்னா சுயவிளம்பரமாயிடும்ங்க...

இன்று எனக்கு புதிய நாள் :-)

Maayaa சொன்னது… @ செவ்வாய், ஜூன் 06, 2006 5:31:00 AM

Hey
you have been tagged!!

Maayaa சொன்னது… @ செவ்வாய், ஜூன் 06, 2006 5:31:00 AM

okie okie!!!

ப்ரியன் சொன்னது… @ புதன், ஜூன் 07, 2006 8:30:00 AM

செந்தில் அப்படியா சேதி!!! வாழ்த்துக்கள் :)

என் ஊகம் சரிதானே?? செந்தில் ??? :)

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூன் 07, 2006 11:11:00 AM

@ப்ரியா:
வித்தியாசமான சிந்தனை... நிறைய யோசிக்க வைக்கும் என நம்புகின்றேன் :-)

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூன் 07, 2006 11:14:00 AM

@ப்ரியன்:
அஹா... புரளிய கெளப்பிருவாங்க போலிருக்கே :-)) ப்ரியன் .. மே 30 எனக்கு பிறந்தநாள்.. என்றும் நண்பர்களுடனோ, குடும்பத்தாருடனோ கலகலவென இருக்கும் நாள், இந்த வருடம் தனிமையில்.. நிறைய யோசிக்க நேரம் கிடைத்தது.. அவ்வளவே :-)))

கருத்துரையிடுக